இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகேயுள்ள தோக்கியும் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மகள் காவியா.. 20 வயதுடைய இவர், வீட்டில் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் போனில் யார் கிட்ட அடிக்கடி பேசுகிறாய் என்று கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த காவியா வீட்டில் தனி அறைக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைபலனளிக்காமல் அந்தப்பெண் பரிதாபமாக இறந்தார்.. இந்த சம்பவம் குறித்து கந்திலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.