தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக பொதுவெளியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அவ்வாறு கலந்து கொள்ளும் ஆளுநர் ரவி அவ்வப்போது அரசியல் ரீதியிலும் கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் திருக்குறள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் கல்வி சதவீதம் தொடர்பாக ஆளுநர் பேசியது அடுத்த சர்ச்சை கிளப்பி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கம் 9வது ஆண்டு விழா சென்னை சேத்துப்பட்டு எஸ்ஆர்எஸ் சர்வோதயா பள்ளியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி பங்கேற்று பேசும்போது, இந்திய தேசத்தை ஒருங்கிணைத்தவர் மகாத்மா காந்தி. நாட்டின் வளர்ச்சி என்கின்ற ஒற்றை நோக்கத்தில் மகாத்மா காந்தி செயல்பட்டார். தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக, தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார். தமிழகத்தை பொறுத்தவரை 51% குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். மற்ற மாநிலங்களை விட ஏன்? இந்திய கல்வி விகிதத்தை விட இது அதிகம்.
தமிழகத்தில் 24% தலித் மக்கள் உள்ளனர். இவர்களில் 13 முதல் 14% குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். சில சமூகத்தினர் மட்டும் 75% அளவிற்கு கல்வி பெற்று உள்ளனர் என்று அவர் பேசியிருந்தார். தமிழக ஆளுநர் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுகவை சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சரியான பதிலடி கொடுத்தார். அதில், ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகத்தின் கல்வி சதவீதம் குறித்தும், பட்டியலின மக்களின் கல்வி விகிதம் குறித்தும் தவறான தகவலை கூறியுள்ளார். தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் கல்வி 39.6% ஆக உள்ளது. இது இந்தியாவின் மொத்த சராசரி விட 2 மடங்கு தமிழகத்தில் கல்வி சதவீதம் என்பது 51.4 என்று புள்ளி விவரத்தை எடுத்து விட்டு, திமுக எம்.பி. செந்தில்குமார் தெறிக்க விட்டிருந்தார். இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் எழிலன் கூறியது, தமிழகத்தில் நியாயமான தலைமைகள் தரவுகளை தவறாக வெளியில் சொல்கிறார்கள். தமிழகத்தின் கல்வி 51.7%. இதில் பட்டியலின மக்களின் 39.6%. இருப்பினும் நியமனத் தலைமைகள் வேண்டும் என்றே அரசியல் செய்ய தரவுகளை தவறாக சொல்கிறார்கள்.
தமிழகத்தில் ‘நான் முதல்வர் திட்டம்’ செயல்பட்டு வருகிறது. பரத் லால் என்பவர் ஒரு நிறுவனம் நடத்திவருகிறார். பரத் லால் நேர்காணல் நடத்தும் போது இன்ஜினியரிங் பயின்ற மாணவர்கள் வருகிறார்கள். அனைத்து மாணவர்களும் ஐபிஎம் கிளவுட் படித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அதற்கு பரத் லால் எங்கே படித்தீர்கள் என்று கேட்கிறார். அனைத்து மாணவர்களும் எங்கள் தமிழக முதல்வர் திறந்து வைத்த “நான் முதல்வன்” திட்டத்தில் நாங்கள் ஐபிஎம் கிளவுட் படித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். இதைக் கேட்ட பாரத் லால் தமிழகத்தில் இப்படி ஒரு திட்டமா? என வியந்து பாராட்டுகிறார். அப்படி இருக்கையில் மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் நியாயமான பதவியை சேர்ந்த ஒருவர் நமது மாநிலம் பற்றிய தவறான தகவல்களை தருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த 18 மாத காலத்தில் அடிப்படை கல்வி, சுகாதாரம், கட்டமைப்பை, இளநிலை பள்ளி முதல் முதுநிலைப்பள்ளி, திறன் மேம்பாடு தந்து அனைத்து நபர்களையும் வரி செலுத்தும் முனைவராக மாற்றி உள்ளோம். ஆனால் வரி எங்கே செல்கிறது என்பதுதான் எனது கேள்வி? இவ்வாறு திமுக எம்எல்ஏ எழிலன் பேசியிருக்கும் விவாகரம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடுத்தடுத்த மூவ்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாகவை அமைந்துள்ளதால், இனி வாயை திறக்க மாட்டார் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.