தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுகவின் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டவருமான, இபிஎஸ் ஆதரவாளரும் ஆதி ராஜாராம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் எல்லாம் ஒரு ஆளே கிடையாது. தர்மயுத்தம் நடத்திய போது சசிகலாவை கொலைக்காரி என்றும் டிடிவி தினகரன் தற்பெருமை பேசுவர் என்று கடுமையாக விமர்சித்தார். அப்படியெல்லாம் பேசிய ஓபிஎஸ் தான் இன்று சசிகலாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார்.
தமிழக அரசியலில் நம்பர் ஒன் சந்தர்ப்பவாதி தீய சக்தி யாரென்றால் அது ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தான். அதனை தொடர்ந்து யார் சொன்னாலும் ஒரு போதும் இனி ஓபிஎஸ் உடன் சேர மாட்டோம். அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் எடப்பாடியாரிடம் மோடி சொல்ல மாட்டார். சொல்லவும் முடியாது. ஓபிஎஸ் போன்றவர்களிடம் வேண்டுமானால் சொல்லலாம். அப்படி அவர் சொன்னாலும் ஓபிஎஸ்-க்கு இனி அதிமுகவில் இடமில்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.