நாடு முழுவதும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவிஅளிப்பதற்காக குழந்தைகளுக்கான pm கேர்ஸ் திட்டம் 2020 மார்ச் 11 முதல் 2022 பிப்ரவரி 28 வரை தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகள் இருபத்திமூன்று வயதை அடையும் பொழுது 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பலன்கள் குறித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி pm கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவத்தை பயன்படுத்தி 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போது குழந்தைகளுக்கான இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். https://pmcaresforchildren.in/ இணையதளத்துக்கு செல்லவும். அதில் குழந்தைகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அரசு ஒப்புதல் கிடைத்தபின் குழந்தைகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக பணம் உள்ளிட்ட திட்டத்தின் பலன்கள் வந்துசேரும்.