Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினரின் கண்முன்னேயே… மாணவிக்கு நடந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் +1 படிக்கும் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை கல்பாரப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவிந்தன் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். சில நாட்கள் அவர்கள் அங்கேயே தங்கியிருந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர். இந்நிலையில் கோவிந்தன் மற்றும் அவரின் மனைவி ஒரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். இதனை அடுத்து ஈஸ்வரி மற்றும் அவரின் தாத்தாவான மணி மற்றொரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது மணி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மீது எதிரே கம்பிலோடு ஏற்றி வந்த லாரி மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஈஸ்வரியின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்நிலையில் ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஈஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவரான மனியாஷ் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |