பிளஸ்-2 தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததாகக் கருதும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்து அவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கியது. இந்நிலையில் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக வேலூர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சென்று மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.