தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ( PF ) கணக்கில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளத்தில் சிறுதொகை சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் ஊழியர்கள் தரப்பிலும், நிறுவனங்கள் தரப்பிலும் பிடிக்கப்படும் இந்த தொகை பின்னர் வட்டியோடு சேர்ந்து பெரிய தொகையாக வந்து சேரும். இதற்கு ஊழியர்கள் வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியம்.
ஏனென்றால் PF பணத்தை வித்டிரா செய்தால் அது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய வங்கி கணக்கில் தான் டெபாசிட் செய்யப்படும். ஆனால் சிலர் பிஎஃப் கணக்கு தொடங்கும்போது சில காரணங்களுக்காக பிஎஃப் உடன் இணைத்த வங்கி கணக்கை குளோஸ் செய்திருப்பார்கள்.
ஆனால் பிஎஃப் பணத்தை அதுபோன்ற சமயத்தில் வித்டிரா செய்வது கடினம். எனவே கைவசம் இருக்கும் ஒரு வங்கி கணக்கை தற்போது உடனடியாக பிஎஃப்-ல் இணைக்க வேண்டும். அதனை இணைப்பது சுலபமான காரியம் தான். இதற்காக எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே இணைக்கலாம்.
1. முதலில் PF அமைப்பின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்தில் லாகின் செய்து கொள்ள வேண்டும்.
2. பின்னர் ’manage’ என்ற பட்டனை கிளிக் செய்து டிராப் டவுன் மெனுவில் ‘KYC’ ஆப்சனை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.
3. இப்போது உங்களுடைய புதிய வங்கிக் கணக்குக்கான எண், IFSC code, பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து ’save’ கொடுக்க வேண்டும்.
4. இதையடுத்து நீங்கள் வழங்கிய விவரங்களை உங்களுடைய நிறுவனம் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கினால் அதன் பிறகு புதிய வங்கிக் கணக்கு உங்களுடைய PF அக்கவுண்டில் அப்டேட் ஆகிவிடும்.