Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கண்முன்னே… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மொட்டின் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் பலியாகி 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் செல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சித்ரா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவை கதிர்வேல் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் கதிர்வேல் தனது மனைவியான சித்ராவுடன் தற்போது கோவையில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்தரா தனது பெற்றோரை பார்ப்பதற்கு சங்கரலிங்கபுரத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சித்ரா மற்றும் பெற்றோருடன் இணைந்து தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொபட்டில் திரும்ப வீட்டிற்கு புறப்பட்டு மூப்பன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று இவர்கள் சென்று கொண்டிருந்த மொபட்டின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயமடைந்து சித்ரா ரத்த வெள்ளத்தில் பெற்றோரின் கண்முன்னே துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த செல்லத்துரை மற்றும் சோலையம்மாளை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் இறந்த சித்ராவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ராமமூர்த்தியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |