தமிழகத்தில் குவாரிகள் நடத்த அனுமதி கோரப்பட்டால், கனிமவள ஆய்வுக்குப் பின் தான் அனுமதி வழங்க முடியும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரம்புக்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்பட 13 மாவட்டங்களில் இருந்து சவுடு மண் எடுக்கத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத்தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து செய்து வந்தது.
வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் எங்கு குவாரிகள் நடத்த அனுமதி கோரப்பட்டாலும், அந்த இடத்திலிருந்து கனிமங்கள் குறித்து ஆய்வு விபரங்கள் பெறப்பட வேண்டும். அதன் பின்னரே அனுமதி வழங்கப்பட வேண்டும் இதற்கென கனிமவள துறையினரே ஆய்வகங்களை அமைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதி கோரப்படும் போது , அலுவவலர் நேரடியாக சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னரே அனுமதி வழங்க வேண்டும். விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.