Categories
மாநில செய்திகள்

மக்களே… மூன்று நாட்கள் இங்கே போகாதீங்க… அனுமதி இல்லை..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறையை ஒட்டி சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது உண்டு. தற்போது மக்களின் பாதுகாப்பு காரணமாக பொங்கல் விடுமுறை ஆன ஜனவரி 15 முதல் 17ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து புதியதாக கொரோனா பரவி வரும் சூழலில் மீண்டும் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

Categories

Tech |