ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர்என்பவரை அடையாளம் தெரியாக நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர் என்பவரை காமராஜ் நகர் விளையாட்டு மைதானத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், வெட்டி சாய்த்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சூளகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
2014ஆம் ஆண்டு ஓசூரில் பிரபல ரவுடி ஜான் பாஷா ரயில் நிலையத்தில் நடைபயிற்சி சென்றபோது குத்தி கொலை செய்யப்பட்டார். அப்போது உடனிருந்த மன்சூருக்கும் சரமாரி கத்திக்குத்து விழுந்தது. அப்போது தப்பிப் பிழைத்த மன்சூரின் உயிர் தற்போது பிரிந்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஓசூர் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.