மக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் தவறாக வெளியான சமூக வலைத்தள பதிவால் அங்குள்ள இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதனால் அங்கு ஏற்பட்ட தொடர் பதற்றம் காரணமாக இன்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு , இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கபட்டது. மேலும் புட்டாளம், குருநெங்களா மற்றும் கம்பகா ஆகிய பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் , அங்கு பல இடங்களில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் உள்ள 3 மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும், இலங்கை நாடு முழுவதும் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் , அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மக்கள் யாரும் “வதந்திகளை நம்ப வேண்டாம், பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.