Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் வெடித்த வன்முறை… தற்போது வரை 340 பேர் கைது…!!!

பெங்களூரில் நடந்த வன்முறை தொடர்பாக தற்போது வரை 340 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூர் புலிகேசி நகரின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் அக்காள் மகன் நவீன்(27) என்பவர் சிறுபான்மை சமுதாயத்தினர் பற்றி தனது முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனால்  கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் காவல் சந்திராவின் கடந்த 11 ஆம் தேதியன்று வன்முறை நடந்தது. அந்த வன்முறை சம்பவம் பற்றி கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகநூலில் அவதூறு கருத்து பதிவு செய்ததை பற்றி நவீனிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

தற்போது ஐந்து நாட்கள் அவரை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். விசாரணையில் அவதூறு கருத்து பதிவு செய்தது நான்தான் என்று நவீன் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 35 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அதன் மூலம் தற்போது வரை வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 340 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |