பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் கனகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு எஸ்தர் பபிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறில் மன உளைச்சலுக்கு ஆளான எஸ்தர் பாபிதா திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் எஸ்தர் பபிதாவை உடனடியாக மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே எஸ்தர் பபிதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த பணகுடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எஸ்தர் பபிதாவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.