பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திபட்டி பகுதியில் காணியாள மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு காணியாள மாடசாமி இறந்து விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்லம்மாள் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைப் பார்த்த உறவினர்கள் செல்லம்மாளை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிவந்திப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.