பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுக்கு முன்பு சிதம்பரம் இறந்துவிட்டார். இதனால் ராமலட்சுமி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே ராமலட்சுமிக்கும் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிலருக்கும் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் ராமலட்சுமியை அவதூறாக பேசியுள்ளனர். இதனால் மன அலுததிற்குள்ளான ராமலட்சுமி திடீரென விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் ராமலெட்சுமியை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமலெட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.