Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர்புரம் பகுதியில் பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பிரியாவுக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் பிரியா சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |