பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோபாலப்பட்டினம் பகுதியில் ராஜாமுகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஜி நிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாஜி நிஷா தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து வலி தாங்க முடியாமல் தாஜி நிஷா அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று தாஜி நிஷாவை உடனடியாக மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே தாஜி நிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மீமிசல் காவல்துறையினர் தாஜி நிஷாவின் உடலை உடனடியாக கைப்பற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.