Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்களுக்கு உதவ நினைத்த பெண் மருத்துவர்…. ரஷ்ய துருப்புகளால் அரங்கேறிய கொடூரம்….!!

ரஷ்யா படையினர் நடத்திய தாக்குதலில் உக்ரேனிய பெண் மருத்துவர் கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைனில் ரஷ்ய படைகள் தனது தாக்குதலை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 31 வயதான வலேரியா என்னும் இளம் பெண் மருத்துவர் உக்ரைனிலேயே தங்கி இருந்து ரஷ்யப் படைகளால் பாதிப்புக்குள்ளானவர்ளுக்கு மருத்துவ உதவிகளை செய்து வந்தார்.

இவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயாருடன் தங்கியிருந்தார். இதனையடுத்து தனது தாயாருக்கு தேவைப்படும் மருந்து உக்ரைனின் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தார்.  இதனைத் தொடர்ந்து காரில் தனது தாயாருடன் உக்ரைனில் இருந்து புறப்பட்டார்.

அவர்கள் செல்லும் வழியில் ரஷ்ய படையினர் எதிரே வந்ததால் ஓட்டுனர் காரை ஓரமாக நிறுத்தி உள்ளார். அந்த சமயத்தில் ரஷ்ய படையினர் திடீரென தாக்குதல் நடத்தியதில் வலேரியா அவரது தாயார் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |