சாராய தொழிலில் ஈடுபட்ட பெண்ணை குண்டர் சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டைகிரிபாளையம் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாந்தி சாராய தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் சாந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சாந்தியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் போலீஸ் சூப்பிரண்டு பவுன்குமார் ரெட்டி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சாந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சாந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.