காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகம், கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகின்றது. அதன்படி அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 670 கனஅடி தண்ணீர் வந்தது. இதனையடுத்து நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 875 கன அடி அதிகமாக காணப்பட்டது.
அதன்பின் அணையிலிருந்து பாசன வசதிக்காக வினாடிக்கு 5 ஆயிரத்து 650 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமானது அதிகரித்து வருகின்றது. இவ்வாறு அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக 69.39 அடி இருந்த அணையின் நீர்மட்டம் 71.10 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.