பலத்த காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை அளித்த பிறகு வனத்துறையினர் அதனை வன பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் ஆண் மயில் ஒன்று அடிபட்டு பலத்த காயமடைந்து கீழே கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தலைவனின் வழி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் மயிலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து கால்நடை மருத்துவர்கள் மயிலுக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பிறகு வனத்துறை அதிகாரிகள் மயிலை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.