முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம் .
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு ,எலுமிச்சைச்சாறு சேர்த்து குழைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிராது.
ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் கண்நோய் குணமாகும் .
திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி ,வயிற்றுப்போக்கு குணமாகும் .