Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு வெடி விபத்து…. தொழிலாளிக்கு நடந்த துயர சம்பவம்…. விருதுநகரில் சோகம்….!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிந்தப்பள்ளியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த சுந்தர குடும்பன் பட்டியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முகேஷ் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து டவுன் காவல் துறையினர் பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, மேற்பார்வையாளர் பழனிச்செல்வம், கணக்கர் பாலசுப்பிரமணியம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Categories

Tech |