Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. உதவியாளரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்கள் இன்றி 1,00,000 ரூபாயை எடுத்து வந்ததை கண்டுபிடித்து பறக்கும் படையினர் தேர்தல் உதவியாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இளையாங்கண்ணி கூட்டுரோடு பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான்ஜோசப் என்பவர் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி ஒரு லட்சம் ரூபாய் எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் உதவியாளர் பிரதீப் குமாரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |