திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நாளை அதிகாலை 12 மணிக்கு வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு ஆகம முறைப்படி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. அதன் படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2 முதல் 4 மணி வரை மத்திய மாநில அமைச்சர்களும், 4.30மணி முதல் 5 மணி வரை பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
24 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் பக்தர்கள் காத்திருக்கும் இடத்திற்கு அருகிலேயே உணவு விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் அனைத்து பக்தர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு அனைத்து முன்னுரிமை மற்றும் கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.