Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் புதிய சீரியலில் இணையும் பாண்டியன் ஸ்டோர் ஷீலா… வெளியான புதிய தகவல்…!!!

பாண்டியன் ஸ்டோர் ஷீலா மீண்டும் புதிய சீரியலில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஷீலா ஹிட் சீரியலில் இருந்து வெளியேறியது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து அவர் தற்போது விஜய் டிவியின் மற்றொரு புதிய சீரியலில் இணைய இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்த சரண்யா நடிப்பில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த சீரியலில் தான் சரண்யாவிற்கு அம்மாவாக நடிகை ஷீலா நடிக்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |