டிரைவரான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் காலனி பகுதியில் டிரைவரான கிருஷ்ணசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு நந்தினி பிரபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு1 1/2 வயதுடைய மனோஜ் என்ற குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் கிருஷ்ணசாமி தனது மனைவியான நந்தினி பிரபாவிடம் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு நந்தினி பிரபா தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்து விட்டு குளிப்பதற்கு சென்றுவிட்டார். இதனை கேட்ட கிருஷ்ணசாமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து நந்தினி பிரபா குளித்து விட்டு வெளியே சென்ற போது தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிருஷ்ணசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.