Categories
தேசிய செய்திகள்

பண மதிப்பிழப்பு வழக்கு…. மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 1000, 500 ரூபாய் நோட்டுகளை பணம் மதிப்பிழப்பு செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்று விசாரிக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமில்லாமல்  மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய விதிமுறைகள் சரியானதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |