பல்கலைக்கழக பேராசிரியர்கள் பாறைத்துகள்கள் வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.
புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி வருகின்றது. இந்த நிலையில் டென்மார்க்கில் உள்ள கோபென்ஹேகன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதற்காக கிரீன்லாந்து தீவு பகுதியில் உள்ள நூக்கில் இருந்து பாறைத்துகள்களை எடுத்துள்ளனர்.
மேலும் அவற்றை உரம் போல் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். இதனால் 30%த்திற்கு மேலாக மகசூல் கிடைத்துள்ளது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் விளைநிலத்தில் உள்ள மண்ணின் தரமும் அதிகரிக்கும் என்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.