Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

“பக்தர்கள் கவனத்திற்கு” பழனி முருகனை பார்க்கணுமா….? இன்றே முன்பதிவு பண்ணிடுங்க….!!

பழனி முருகனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு பல கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்ததால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது படிப்படியாக தளர்வுகள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, மத வழிபாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்குள் செல்போன், தேங்காய், பூ, பழம், மாலை கொண்டுவரவும், அர்ச்சனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோவிலில் இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு அனுமதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு செல்ல விரும்புபவர்கள் www . tnhrce . gov . in என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |