பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்டில் 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.
பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அபித் அலி ,ஷபிக் களமிறங்கினர் .இதில் அபித் அலி 39 ரன்னும் , ஷபிக் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.இதன்பிறகு அசார் அலி -கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தனர். இதில் பொறுப்புடன் விளையாடிய பாபர் அசாம் அரை சதம் அடித்தார்.
இதனால் முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடிவுக்கு வந்தது .இதனிடையே 2-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது .அப்போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது .இதில் அசார் அலி 52 ரன்னும் ,பாபர் அசாம் 71 ரன்னும் எடுத்த களத்தில் இருந்தன .ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் 2-வது நாள் ஆட்டமும் முழுமையாக பாதிக்கப்பட்டது.