Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பணத்தேவைகள் பூர்த்தியாகும்..! வெற்றி கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். ஆதாயம் பெருகும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொல்லாதவர்கள் விலகிச்செல்வார்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி இருந்துக்கொண்டே இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களும் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். இன்று எதிலும் பாதிப்பு ஏற்படாது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! நிதானம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் திருப்தி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி அதிகம் அன்பு காட்டுவார்கள். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். யாரிடமும் பகை பாராட்டாமல் இருக்கவேண்டும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். தூரத்திலிருந்து வரக்கூடிய தகவல்கள் மகிழ்ச்சியளித்தாலும், சில நேரத்தில் குழப்பங்களை உண்டாகும். நிதானத்துடன் வேலையை அணுகுங்கள். இன்றையநாள் சிரமமாகத்தான் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பேச்சுத் திறமை வெளிப்படும்..! அமைதி நிலவும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சேமிப்பு பணத்தில் செலவுகளை செய்வீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் நீங்கும். மனதில் அமைதி ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பேச்சுத்திறமை அதிகரித்து பல காரியங்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தாமதம் உண்டாகும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உணவு வகையில் கவனம் தேவை. தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! கவனம் தேவை..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தடங்கலும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே இருக்கும். பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உணவு வகையில் கவனம் தேவை. தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (12-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 12-12-2022, கார்த்திகை 26, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.49 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூசம் நட்சத்திரம் இரவு 11.36 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 12.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப உறவுகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் ரீதியாக வெளியூர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 12…!!

திசம்பர் 12  கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 627 – பைசாந்திய இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன. 884 – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். 1098 – முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர். 1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது. 1812 – உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது. 1815 – பிரித்தானியப் படைகள் கண்டியை அடைந்தன.[1] 1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வியாபாரி கொலை வழக்கு… ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி கைது… போலீஸ் அதிரடி.!!!!!!

செங்குன்றத்தை அடுத்த அமலாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆர் தெருவில் வசித்து வந்த முரளி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி  கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் அலமாதி சாந்தி நகரை சேர்ந்த திலீபன் (25), நவீன் (24), தீபன் (41), ஆறுமுகம் (60) ஆகிய  4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் முரளியின் உறவினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர்…. நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. பரபரப்பு சம்பவம்….!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி டவுன் சிவா தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி விஜய் தொழிலதிபராக இருக்கிறார். நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் காரில் சென்றுள்ளார். இதனையடுத்து விஜய் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காரில் மீண்டும் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மதுரை- நெல்லை நான்கு வழி சாலையில் இருந்து குறிச்சிகுளம் வழியாக நெல்லை நோக்கி வந்து […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான பெண் மற்றொரு “ஆணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு ஒன்றை விடுத்துள்ளது. ஜார்க்கண்டில் உள்ள ஒரு பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணிஷ்  அந்த பெண்ணை தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதனால் இவர்கள் பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணும் தனது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை…. என்ன காரணம்…? போலீஸ் விசாரணை…!!

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலபட்டமுடையார் புரம் ராமர் கோவில் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. வேறு பெண்ணுடன் திருமணம்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலப்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் முகேஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறுமியை காதலிப்பதாக ஆச வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இதை எங்கள் லைப்பில் மறக்கவே முடியாது…. மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல் காந்தி…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

மாணவிகளின் கனவை ராகுல் காந்தி நிறைவேற்றி வைத்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம் தொடங்கப்பட்டது. கடந்த வாரம்  இந்த நடைப்பயணத்தை  மத்திய பிரதேசத்தில் மேற்கொண்டனர். அப்போது அவரை  லகானியா, கிரிஜா உள்ளிட்ட 3  மாணவிகள் சந்தித்துள்ளனர்.அவர்கள் தங்களுக்கு ஹெலிகாப்டரில் போக  ஆசையாக இருப்பதாக  கூறியுள்ளனர். இதனை கேட்டு அவர் மாணவிகளின்  விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். அதேபோல் கடந்த 8-ஆம்  தேதி ராஜஸ்தானில் உள்ள பண்டி பகுதியில் இருந்து மாணவிகளுடன் ஹெலிகாப்டரில் மாதோபூருக்கு […]

Categories
உலக செய்திகள்

OMG: ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் புதிய திருப்பம்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு பகுதியில்  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற  ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை  சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரை  தரையில் தள்ளி அவரின் கழுத்தின் மீது கால் வைத்து பலமாக அழுத்தினர். இதனால் மூச்சு திணறி அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது பொருளாதார தடை…. விளக்கம் அளித்த அமெரிக்கா….!!!!!

இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் ஊழலை  குறைப்பதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 9-ஆம்  ஊழல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதேபோல் நேற்று முன்தினம்  உலகம் முழுவதும் ஊழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில்   வடகொரிய அரசால் நடத்தப்படும் எஸ்.இ.கே. என்கின்ற அனிமோஷன் ஸ்டுடியோ தொழிலாளர்களுக்கு குறைந்த வருமானத்தை வழங்கி அதிகமான வேலையை வழங்குகிறது என அமெரிக்கா பல்வேறு குற்றங்களை சாட்டியது. மேலும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவு […]

Categories
மாநில செய்திகள்

நம்ம மொழி தான் எப்போதும் கெத்து…. பெருமையுடன் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று தமிழ்நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இது குறித்து கவர்னர் ஆர்.என். ரவி கூறியதாவது, “நமது நாடு ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் ஆங்கிலம் நம் மொழிகளின் பெருமையை தடுக்கிறது. அதனால் தான் பிரதமர் நமது நாட்டின் மொழிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். நமது மொழிகள் பாரம்பரியமானவை. அதிலும் தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் இணையான வார்த்தை இன்று வரை இல்லை. மேலும் நம் பாரத […]

Categories
மாநில செய்திகள்

யாருக்கும் அஞ்சோம் என கூறியவர் பாரதியார்…. புகழாரம் சூடிய எடப்பாடி பழனிசாமி….!!!!

எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த 1982-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தார். இவர் எழுத்தாளர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல முகங்களை கொண்டவர். இதனால் இவரை மக்கள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைத்தனர். இந்நிலையில் இன்று இவரது 141 -வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது, ” “உச்சிமீது வானிடிந்து […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் தாக்கம்… சென்னையில் வழக்கத்தைவிட 4 மடங்கு அதிகமான கழிவு…? மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!!!

சென்னையில் நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ளது. இந்த புயலினால் சென்னை மாநகரம் முழுவதும் கழிவுகள் அதிகமாகியுள்ளது. அதாவது தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது 1 முதல் 8 மண்டலம் வரை உள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவர கழிவுகளும், 9 முதல் 15 மண்டலம் வரையில் உள்ள பகுதிகளில் 893.42 மெட்ரிக் டன் கழிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகபட்ச கழிவு  எடுக்கப்பட்டதில் அடையாறு மண்டலம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வனப்பகுதியில் ஏராளமான மன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் நகராட்சி நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலுவின் உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு குடோனில் அதிரடியாக சோதனை நடத்தி தின்பண்டங்களை பேக்கிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொட்டிலில் தூங்கிய குழந்தை இறப்பு…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. கதறும் பெற்றோர்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிரவெளி பகுதியில் மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல ஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. தற்போது முத்துலட்சுமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பெரியகுறவன் பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். சிறிது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விவசாயி வீட்டின் கதவை உடைத்து…. 1 கோடி ரூபாய் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியார் கிணறு பகுதியில் விவசாயியான லோகநாதன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 7-ம் தேதி இரவு கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு அப்பகுதியில் இருக்கும் புற்று மாரியம்மன் கோவிலுக்கு லோகநாதன் குடும்பத்தினருடன் சாமி கும்பிடுவதற்காக சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மேய்ந்து கொண்டிருந்த போது…. மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள், 2 ஆடுகள் பலி….!!!

மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள், 2 ஆடுகள் உயிரிழந்தன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரக்கோணம் சோமசுந்தரம் நகரில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் துரைகண்ணுவின் பசு மாடுகளும் குமாரசாமி என்பவரின் ஒரு பசுமாடும் வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது மின்வயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் திருடிய வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரணப்பட்டியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜலட்சுமி பொன்னமராவதியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த ஒரு வாலிபரிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு ராஜலட்சுமி கூறினார். அந்த நபர் இரண்டு முறை ஏ.டி.எம் கார்டை போட்டு பார்த்துவிட்டு பணம் வரவில்லை என கூறி வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை ராஜலட்சுமியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். சிறிது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூடு… உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம்… எம்.பி கனிமொழி வழங்கல்..!!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம் நிதி உதவி. தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அரசு மூலமாக தலா 20 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி பரிந்துரையின் பேரில் மேலும் கூடுதலாக தலா 5 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யோகா குறித்து விழிப்புணர்வு…. நடைபயணமாக செல்லும் கர்நாடக வாலிபர்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் யோகா பயிற்சியாளரான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் யோகா குறித்து பொதுமக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினார். எனவே கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி கிருஷ்ணன் மைசூரில் இருந்து நடை பயணத்தை தொடங்கி ஒவ்வொரு ஊராக நடந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நேற்று கிருஷ்ணன் புதுக்கோட்டை வந்து அங்கிருந்து தஞ்சாவூர் நோக்கி கையில் தேசிய கொடியுடன் நடை பயணம் செய்து பொதுமக்களிடம் யோகா குடித்து விழிப்புணர்வை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேனூர் தொட்டியபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி(40) என்ற மனைவி உள்ளார். இவர் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அய்யலூர் குடிகாட்டில் வசிக்கும் முருகானந்தத்தின் மனைவி முத்தரசி தனது மாமனார் பெயரில் இருக்கும் நிலத்தை தனது கணவரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது இந்திராணி அவரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… “காணாமல் போகும் தாஜ்மஹாலின் விலை மதிப்பில்லா கற்கள்”..? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

உத்திரபிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை  ஷாஜகான் அவருடைய மனைவி மும்தாஜ் மறைவை அடுத்து, நினைவு கூறும் விதமாக கட்டி உள்ளார். வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலகின் அதிக விலை உயர்ந்த பளிங்கு கற்கள் தாஜ்மாகாலில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கற்களில் வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை. இந்த கற்களானது சூரிய எதிரொளிப்பு தன்மையால் 3 வேலைகளிலும் வெவ்வேறு நிறங்களை பிரதிபலிக்க கூடியது. அதாவது காலையில் பிங்க் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்…. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி..!!!

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சந்தூரில் இருக்கும் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்க அலுவலக கண்காணிப்பாளர் பொன்துறை மற்றும் கல்லூரி அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உறுதி மொழியை படிக்க அனைவரும் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள்.

Categories
உலக செய்திகள்

நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்… ஆச்சரியத்துடன் பகிர்ந்து வரும் இணையவாசிகள்… என்ன தெரியுமா…??

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் விண்வெளியில் அவ்வபோது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் அரிய வீடியோக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறது.  விண்கலத்தின் மூலமாகவோ அல்லது தொலைநோக்கிகளின் மூலமாகவோ எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அந்த வகையில் நாசா ஆய்வு நிறுவனம் தற்போது சனி கிரகத்தின் அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது . கடந்த 2012 -ஆம் வருடம் காசினி மின்கலத்தால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சூரியன் பின்னாலிருந்து ஒளி வீச […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்தி… தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்…!!!

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர்களிடம் சந்தித்தபோது பேசியுள்ளதாவது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினரிடம் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் முதல்வர் அறிவித்த நடவடிக்கை தொடரும் எனவும் சிபிஐ அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்ற ஒன்றரை வருடங்களில் அரசியல் நடவடிக்கை பற்றியும் தெளிவுபடுத்தி இருக்கின்றோம். மேலும் முக்கிய நிர்வாகிகள் 50 பேர் மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய நடிகை வெளியேறிவிட்டாரா…?” ரசிகர்கள் ஷாக்..!!!

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து பிரபல நடிகை வெளியேறியதாக செய்தி வெளியாகி உள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பாக்கியலட்சுமி நெடுந்தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் கணவன் ஏமாற்றிய பிறகு துவண்டு விடாமல் தைரியத்துடன் உழைத்து தனது குடும்பத்தை பாக்கியலட்சுமி கவனிக்கின்றார். இந்த தொடரில் ரித்திகா நடித்து வருகின்றார். இவர் அண்மையில் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் ஹனிமூன் சென்ற ஃபோட்டோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்திருந்தார். இந்த நிலையில் ரித்திகா திருமணத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Wow..! அப்படியே அஜித் மாதிரியே இருக்கே… உருவ சிலையை செய்து அசத்தல்…!!!!

அச்சு அசல் அஜித்தை போலவே இருக்கும் உருவ சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திலிருந்து சமீபத்தில் “சில்லா சில்லா” பாடல் வெளியாகி அனைவரையும் ஆட்டம் போட செய்தது. இந்தப் படம் வருகின்ற பொங்களுக்கு வெளியாக இருக்கின்றது. இதனால் படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். ரசிகர்கள் அவ்வபோது தங்களுக்கு பிடித்த நடிகர்களின் உருவ சிலையை செய்வது வழக்கம். அந்த வகையில் அஜித்தின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையின் நடுவே நின்ற காட்டெருமைகள்…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலைகளில் உலா வருகிறது. நேற்று குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அருவங்காடு பகுதியில் முகாமிட்ட காட்டெருமைகள் சாலையின் குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து அறிந்த போலீசார் காட்டெருமைகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அந்த வழியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!… இது வேற லெவல்…. ஜிகர்தண்டா 2 படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா…. மிரட்டலான டீசர் வீடியோ இதோ….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை  பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பைவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜயின் “தளபதி 67” படத்திலிருந்து விலகியது ஏன்….? உண்மையை போட்டுடைத்த நடிகர் விஷால்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தன்தின்  சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை… இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா… இதோ புகைப்படம்…!!!

அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் வெளியாகி உள்ளது. கமல், மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இத்திரைப்படம் குடும்ப ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று இன்றளவும் டிவியில் ஒளிபரப்பாகும் போது அனைவரும் பார்த்து ரசிப்பார்கள். இத்திரைப்படத்தில் கமல் மற்றும் மீனா இருவரின் மகளாக Annie என்ற குழந்தை நடித்திருப்பார். இத்திரைப்படம் வெளியாகி 25 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் இந்த குழந்தையின் தற்போதைய நிலைகுறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!… நீங்க விஜயகாந்த் ஆளு என சொல்லி அசிங்கப்படுத்திய வடிவேலு?….. பகீர் கிளப்பிய பிரபல நடிகர்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலுக்கு சில பிரச்சினைகளின் காரணமாக சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 10 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி ஆகியுள்ளார். இந்நிலையில் நடிகரும், தேமுதிக கட்சியின் பிரமுகருமான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் வடிவேலுவை பற்றி கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிங்கமுத்துவின் மகன் ஹீரோவாக நடிக்க இருந்த படத்தில் நடிகர் வடிவேலு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…! நடிகர் நெப்போலியன் வீடு இவ்வளவு பிரமாண்டமாக இருக்குதா…? இதோ போட்டோஸ்..!!!

நடிகர் நெப்போலியனின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் அவ்வபோது விவசாய நிலங்களின் புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிடுவார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பிரபல யூட்டியூபர் அவரின் வீட்டிற்கு சென்று சுற்றிப் பார்த்து இருக்கின்றார். அதில் சில புகைப்படங்கள் இதோ.!

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!….. நடிகர் சூர்யாவுக்கு “வணங்கான்” படம் டிராப்பால் இத்தனை கோடி நஷ்டமா…..? வெளியான ஷாக் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் போன்ற  படங்களுக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென படத்தின் கதை நடிகர் சூர்யாவுக்கு செட்டாகாது எனக்கூறி பாலா அறிவித்தார். அதோடு நடிகர் சூர்யா படத்தில் இருந்து விலகப்போவதாகவும்  பாலா  அறிவித்தார். இதனையடுத்து நடிகர் சூர்யாவும், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் ‌விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS-6: அவங்க வேணா ரன்னர் ஆகட்டும்… ஆனா இவங்க தான் வின்னர் ஆகணும்… வனிதா ஓபன் டாக்..!!!

பிக்பாஸ் ரன்னர்-வின்னர் குறித்து வனிதா பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இது ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்தை முன்வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் வனிதா பிக்பாஸ் குறித்து பேசி இருக்கின்றார். அவர் தெரிவித்திருப்பதாவது, சிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகின்றார். டாஸ்குகளை பொருத்தவரை அசீம் சிறப்பாக விளையாடுகின்றார். ஆகையால் அவர் இரண்டாவது இடம் கூட வரட்டும். ஆனால் வின்னராக சிவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG!… தளபதியின் வாரிசு படத்தின் டிக்கெட் கட்டணம் இவ்வளவா….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]

Categories
தேசிய செய்திகள்

மோபா விமான நிலையத்தை…. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி…. வெளியான தகவல்….!!!!

கோவாவின் டபோலிம் விமானநிலையமானது 1 ஆண்டில் 85 லட்சம் பயணிகளை கையாளும் திறனுடையது ஆகும். இந்த நிலையில் கோவாவின் மோபாவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மோபா சர்வதேச விமான நிலையத்தை PM மோடி இன்று துவங்கி வைத்தார். ரூபாய். 2 870 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த விமான நிலையத்தில் இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் போன்றவை புதிதாக அமைகிறது. முதற் கட்டமாக ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன்கொண்ட இந்த விமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ரா என்கிட்ட அழுது புலம்புனாங்க”…. 2 வருடத்திற்கு பிறகு உண்மையை சொன்ன நடிகை சரண்யா….!!!!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜேவாக அறிமுகமான சித்ரா அதன்பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது.  சீரியலில் பிஸியான நடிகையாக இருந்த போதே ஹேமந்த் என்பவரை காதலித்து சித்ரா  திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால் நடிகை சித்ரா திடீரென இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை சித்ரா இறந்து 2 வருடங்களாகும் நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

உணவில் கிடந்த முடி!… கோபத்தில் கணவரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, உணவில் முடி இருந்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தன் மனைவிக்கு மொட்டை அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் உட்பட 3 பேர் மீது வரதட்சனை கொடுமை சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருமணம் ஆனதிலிருந்து ரூபாய்.15 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு சாப்பாட்டில் முடி விழுந்ததால் கணவர் தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67-ல் விஜய் இப்படி தான் இருப்பாராம்… ஃபர்ஸ்ட் டைம்யா… வெளியான நியூ அப்டேட்..!!!!

தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற 5-ம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி மனைவியுடன் நடு ரோட்டில் சண்டை போட்ட விஷால்….. காரணம் என்ன….? அவரே சொன்ன தகவல் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது நடித்துள்ள லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் நான், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா ஆகியோர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றோம். அங்கு நானும், கிருத்திகாவும் நடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் எல்லோரும் முன்பும் திடீரென கண் கலங்கிய கமல்…. அப்பா, அம்மாவை நினைத்து உருக்கம்….!!!!!

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக திகழும் கமல்ஹாசனுக்கு தற்போது 68 வயது ஆன நிலையிலும் படு பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில் போட்டியாளர்களிடம் அவர்களின் பெற்றோர் குறித்து கேட்டார். அதற்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள் பெற்றோர்கள் செய்த விஷயத்தை பற்றி கூறினர். அப்போது நடிகர் கமல்ஹாசன் திடீரென கண் கலங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்நீச்சல்-கோலங்கள் வித்தியாசம் என்ன…? பதில் அளித்த இயக்குனர்… பெண்கள் மகிழ்ச்சி..!!!

கோலங்கள் மற்றும் எதிர் நீச்சல் தொடர் குறித்து இயக்குனர் பதில் அளித்துள்ளார். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகி உள்ள கோலங்கள் தொடர் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது எதிர் நீச்சல் தொடரும் வெற்றி நடை போடுகின்றது. இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடரின் வசனகர்த்தா ஸ்ரீவித்யா கோலங்களில் வரும் பெண்களுக்கும் எதிர்நீச்சலில் வரும் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என இயக்குனரிடம் கேட்கின்றார். இதற்கு இயக்குனர் பதில் அளித்துள்ளதாவது, கோலங்களில் வரும் அபி, ஆனந்தி, ஆர்த்தி, உஷா, கங்கா, மேனகா […]

Categories
மாநில செய்திகள்

“அண்ணாமலையின் பேச்சு அர்த்தமற்றது”…. ஊழல் என்ற பேச்சிற்கே இடமில்லை!…. அமைச்சர் கீதா ஜீவன் ஸ்பீச்….!!!!

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி எட்டயபுரத்திலுள்ள அவரது மணிமண்டபத்தில் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதியின் எம்எல்ஏ மார்கண்டேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.செந்தில்ராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது, சத்துணவில் வழங்கப்படும் முட்டை கொள்முதலில் ஊழல் நடந்ததாக அண்ணாமலை அர்த்தமற்ற முறையில் பேசுவதாக அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் பாலா பொய் சொன்னாரா….? சம்பள விஷயத்தில் ஆதாரத்துடன் உண்மையை நிரூபித்த உன்னி முகுந்தன்…..!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் உன்னி முகுந்தன் நடிப்பில் சமீபத்தில் ஷபீக்கிண்டே சந்தோஷம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர் பாலா முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில், நடிகர் உன்னி முகுந்தன் தான் உட்பட பல்வேறு நடிகர்களுக்கு சம்பளம் வழங்காமல் பெண் கலைஞர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கியதாக நடிகர் பாலா பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் நடிகர் உன்னி முகுந்தன் பாலாவுக்கு சம்பளம் வழங்கிய வங்கி காசோலையை தற்போது செய்தியாளர்களிடம் காண்பித்து அவருக்கு […]

Categories

Tech |