சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதையை எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இதை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கன்னடத்தில் சக்ரவியூகா என்ற படத்தை இயக்கினார். இதனிடையே ஒரு விபத்தின் காரணமாக சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் பணிக்கு திரும்பி விட்டார். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்ஷன் படமாக சரவணன் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். திரிஷாவுடன் இணைந்து […]
