Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 06..!!

இன்றைய தினம் : 2019 மே 06 கிரிகோரியன் ஆண்டு : 126_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 127_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 239 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் 1527 – எசுப்பானிய, செருமனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். சுவீடனின் 147 படையினர் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர். இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால முடிவு என சிலர் கருதுகின்றனர். 1536 – இன்கா படைகள் குசுக்கோ நகரை எசுப்பானியரிடம் இருந்து கைப்பற்ற அதனை முற்றுகையிட்டனர். 1536 – இங்கிலாந்தின் அனைத்துக் கிறித்தவ ஆலயங்களிலும் ஆங்கில மொழி திருவிவிலியம் கட்டாயமாக வைத்திருக்கப்பட வேண்டும் என எட்டாம் என்றி அரசர் கட்டளையிட்டார். 1542 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துகேய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழை!!! விவசாயிகள் மகிழ்ச்சி!!

 வேலூர்,தர்மபுரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் நேற்று  மழை நன்றாக பெய்துள்ளது. அக்கினிநட்சத்திரம் ,தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் ,திருத்தணியில் 113 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது . தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , நேற்று மாலை வேலூரில், பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது . அதே போல் ,தர்மபுரியில் நேற்று மாலை […]

Categories
உலக செய்திகள் கல்வி

இலங்கையில் இன்று முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் …அரசு அனுமதி !!

இலங்கையில் இன்று முதல் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படுகின்றன.  இலங்கையில்  தொடர் குண்டுவெடிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது . கடந்த ஈஸ்டர் அன்று தேவாலயங்களிலும் , விடுதிகளிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 253 பேர் உயிரிழந்ததையடுத்து போலீசாரும் ராணுவத்தினரும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் பள்ளி வளாகங்களில்  சோதனைகளை மேற்கொண்டனர் . சோதனைக்கு பின் , ஆபத்து ஏதும் இல்லை என்று தெரிவித்த தெரிவித்த நிலையில்  பள்ளிகளைத் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது .போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொதப்பிய கொல்கத்தா…. ரன் குவிக்க திணறிய உத்தப்பா….மும்பைக்கு 134 ரன்கள் இலக்கு.!!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 56 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   அணிகள் விளையாடி வருகிறது . இப்போட்டி மும்பை  வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர். தொடக்கத்தில் லின் அதிரடியாக விளையாடி […]

Categories
உலக செய்திகள்

கண்கவரும் 17 வயதான கோலா கரடி!!!

சீன வனவிலங்கு பூங்காவில் உள்ள  17 வயதான கோலா கரடி சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது . தெற்கு சீனாவில் உள்ள குவாங்சோ நகர பூங்காவில் 60 கோலா கரடிகள் உள்ளன.அதிலும் , உகி என்ற 17 வயது  கோலா கரடி, பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவருகிறது .பொதுவாக கோலா கரடிகள் 10 -12 ஆண்டுகள் வரை மட்டுமே  உயிர் வாழும் தன்மையுடையது . மேலும் உகி கரடி , 6 தலைமுறைகளை சேர்ந்த  கரடிகளுடன் வாழ்ந்து வருகிறது.அதனால் இதனை பூங்கா காப்பாளர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய  இருவர் கைது !!!

திருப்பூரில்,  மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய   இரு வாலிபர்கள்  பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது . ஈரோட்டில் இருந்து கிளம்பி ,திருப்பூரை வந்தடைந்த அரசு பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது , மதுபோதையில்  இரு இளைஞர்கள் பேருந்து முன்பாக  நடந்துச் சென்றுள்ளனர்.இதைக் கண்ட பேருந்து நடத்துநர் ராமசாமி அவர்களை நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் கோபம்  அடைந்த வாலிபர்கள் ,நடத்துநரை தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த  பொதுமக்கள் மற்றும் மற்ற  பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள்  சேர்ந்து , இளைஞர்களை அடித்து உதைத்தனர்.திருப்பூர் தெற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கே.எல் ராகுல் அதிரடியில் சென்னையை வீழ்த்திய பஞ்சாப்.!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது   ஐ.பி.எல் 55 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிகள் மோதியது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியில் பாப் டு பிளெஸியும், சேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே டு பிளெஸி அதிரடி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கூடலூரில், கலைக்கட்டிய யானை சவாரி!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில், சுற்றுலா பயணிகள் யானை சவாரியில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் . கூடலூர் , முதுமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலாபயணிகளை மகிழ்விக்க வனப்பகுதிக்குள், யானை சவாரி மற்றும் வாகன சவாரியை வனத்துறை நடத்தி வருகிறது . இந்நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் , வாகனங்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கையை 6 ஆக  வனத்துறை, உயர்த்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

Categories
கல்வி தேசிய செய்திகள்

நீட் தேர்வு எளிமையாக இருந்தது !மாணவர்கள் கருத்து !!

நாடுமுழுவதும்  , நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. நண்பகல் 12 மணி முதல் மாணவர்கள் , சோதனை நடத்தப்பட்டு,தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.    அணிகலன்களை மாணவிகள் கலற்றிய  பின்னரே,  தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு மற்றும் காலதாமதமாக வந்த மாணவர்கள்  தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் ,நீட் தேர்வு மிக  எளிமையாக இருந்தது என்றும் இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது என்றும் கூறினர் . நாடு முழுவதும் , நீட் தேர்வு முடிவுகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதத்தை தவறவிட்ட டு பிளெஸி…. சென்னை அணி 170 ரன்கள் குவிப்பு!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்துள்ளது.  ஐ.பி.எல் 55 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்   அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து சென்னை அணியில் பாப் டு பிளெஸியும், சேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விளையாட்டு

மதுரையில் திருமங்கலத்தில் கலைக்கட்டியது ஜல்லிக்கட்டு!!!

மதுரையில் உள்ள திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. திருமங்கலம் , கரடிக்கலில் சுந்தரராஜ பெருமாள் கோவில்  திருவிழாவில்   ஜல்லிக்கட்டு ஒரு அங்கமாக நடத்தப்பட்டது. அதில் கோவை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் போன்ற பல்வேறு  மாவட்டங்களில் இருந்து வந்த சுமார்  500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வாரி அளிக்கப்பட்டது .

Categories
மாநில செய்திகள் வானிலை

ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்….

தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த   24  மணி நேரத்தில் ,வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 சென்டி மீட்டர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 சென்டி மீட்டர் மற்றும்  […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி  நிதியுதவி- தமிழக அரசு!

தமிழக அரசு,  ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி  நிதியுதவி வழங்க உள்ளது . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ஃபானி புயல், புனித நகரம் பூரி என பல  நகரங்களை, கடுமையாக தாக்கி  பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளதாக கூறியுள்ளார் .மேலும்  ஃபானி புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், கூறினார் . ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில்,  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!!!அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

வடகொரியா,  ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை பரிசளித்துள்ளது . வடகொரியாஅதிபர் , கிம் ஜோங் தலைமையில் சனிக்கிழமை  இச்சோதனை நடத்தப்பட்டது. அந்த  நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கும், சுய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், இந்த ஏவுகணை சோதனை அவசியம் என்றும்  வடகொரிய அரசு தெரிவித்துள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபருடனான ‘வியட்நாம் பேச்சுவார்த்தை’ தோல்வியடைந்ததை அடுத்து வடகொரியா நடத்தும் முதல் ஏவுகணை சோதனை  என்பது முக்கியமான தகவலாகும். கிம் ஜோங் உன்,இடையில்  ரஷ்யா சென்று, அதிபர் புதினை சந்தித்துப் […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஃபால்கன் 9 !!

ஃபால்கன் 9 ராக்கெட்,  அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.48 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலனை, ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக , ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. புளோரிடாவின் கேப் கனவெரலில் இருந்து அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.48 மணிக்கு   விண்ணில் செலுத்தப்பட்டது.   2 ஆயிரத்து 500 கிலோ  எடையுள்ள  ஆராய்ச்சிப் பொருட்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை இது சுமந்து செல்கிறது . […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

இந்தியா- மியான்மர் எல்லையில் உணரப்பட்ட நில நடுக்கம்!!

நேற்று மாலை இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில்  திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. நாகாலாந்தின் எல்லை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் பதிவானது .அதில்   5 புள்ளி 4 ஆக பதிவாவாகியிருந்தது . இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிஷ்டவசமாக  யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம், தொடர்ந்து  கண்காணித்து வருகிறது .

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரயில் மோதி மூவர் பலி ! தண்டவாளத்தைக் கடக்கும் போது பரிதாபம் !!

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தண்டவாளத்தைக் கடக்கும் போது   3 பேர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் மாவட்டம் கரும்பூரைச் சேர்ந்தவர்,  காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் சங்கர்.இவர், தனது சகோதரி பானுமதி மற்றும் 11 வயதான  பேரன் நித்திஷ் ஆகியோருடன் சென்னை செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்பூர் ரயில் நிலையம் வந்த நிலையில் முதல்  நடைமேடையில் இருந்து , இரண்டாவது நடைமேடைக்குச் செல்ல தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக , அதிவேகத்தில் வந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள் வானிலை

நாமக்கல்லில் 102.2 டிகிரி வெயில் பதிவானது!!!

நேற்று நாமக்கல் மாவட்டத்தில்  102.2 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர் . நாமக்கல் மாவட்டத்தில், போதிய மழை  இல்லாததால் ஜனவரி மாதத்திலிருந்தே வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில்  நேற்று முதல் கத்திரி வெயில் தொடங்கிதால், வெயிலின் தாக்கம் அதிகரித்தது.   நேற்று நாமக்கல்லில் 102.2 டிகிரி வெயில் பதிவானதால் அனல் காற்று வீசியது. எனவே பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல்  சாலைகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாயமான பள்ளி மாணவி !! போலீசார் விசாரணை !!!

மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவி மாயமானார் . திருநெல்வேலி மாவட்டம் ,கீரிப்பாறை அருகே தடிக்காரண்கோனம் பகுதியினை சேர்ந்தவர்  பாபு. இவரது  மகள் அபிஷா .பிளஸ்  2 தேர்வு எழுதியிருந்த நிலையில் திடீரென காணவில்லை . இதுபற்றி  விசாரணை நடத்தியதில், ராஜா  என்பவர் அபிஷாவை கடத்தியது  தெரிய வந்துள்ளது . இதனால்  மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவைத் தேடி வருகின்றனர் .

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைவு…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக பிரமுகர் சுட்டு கொலை…பயங்கரவாதிகளை தேடி வரும் இந்திய ராணுவம்..!!

காஸ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டார், பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் தேடி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தின் பாஜக துணை தலைவரான  குல் முகமது மிர் நவ்காமில் வீரிநாக் பகுதியில் வசித்து வருபவர். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டுக்கு சென்ற தீவிரவாதிகள் குல் முகமது மிரை இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். மேலும் இதை தொடர்ந்து பரிதாப நிலையில் கிடந்த முகமதை அவரது உறவினர்கள் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் நகைபறிப்பு !!!கொள்ளையர்கள் அட்டகாசம் !!

சேலத்தில் ,ஓடும் ரயிலில் நடந்த   நகைபறிப்பு சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது . சேலம் ,சங்ககிரி அருகே மாவெலிபாளையம் என்ற ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகில் தரைவழி பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது . அதனால்   ரயில்கள் குறைந்த  வேகத்தில் இயக்கப்படுகின்ற நிலையில்  கொள்ளையர்கள்  சென்ற  வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 4 ரயில்களில் ஏறி 24 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .   ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் ,விசாரணை நடத்திய நிலையில் ,20 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பா.ஜ.க. வேட்பாளர் சென்ற கார் விபத்து…. பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை….!!

தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜ.க. வேட்பாளர் சாந்தனு தாகூர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி காயம் அடைந்துள்ளார். மேற்கு வங்காளத்தில் போங்கான் (தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சாந்தனு தாகூர் என்பவர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இதனால் சாந்தனு தாகூர் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக கல்வானி என்ற பகுதிக்கு காரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த போலீஸ் வேன் ஒன்று நிலைதடுமாறி சாந்தனு தாகூர் கார் மீது மோதியத்தில், சாந்தனு தாகூர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

இன்று நீட் தேர்வு!! 15 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.!!!

இன்று நாடுமுழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு  நடைபெறுகிறது.  நீட் தேர்வு ,மொத்தம்  155 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.மொத்தம் , 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள். இந்த தேர்வை தமிழகத்தில் 1,40,000 பேர்  எழுதுகின்றனர்.தமிழகத்தில்  14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர் .   இந்த ஆண்டு பிற்பகலில் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்துக்களுக்கு எதிரான பேச்சு” யெச்சூரி மீது வழக்கு பதிவு….!!

வன்முறையுடன் இந்துக்களை தொடர்புபடுத்தி பேசியதாக CPIM பொது செயலாளர்  சீதாராம் யெச்சூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து தேசிய அரசியல் கட்சிகளும் இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் , இந்துக்கள் யாரும் வன்முறையில்  ஈடுபடமாட்டார்கள் பேசினார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் ,   ‘‘இந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் சிசிடிவி இயங்கவில்லை !! கரூரில் அதிர்ச்சி !!

கரூரில் ,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், சிசிடிவி கேமரா இயங்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது . தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ,கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை போன்ற 6 தொகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது . இதற்கிடையே , நேற்றிரவு வேடசந்தூர் தொகுதி மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் , சிசிடிவி கேமரா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குற்றாலம் வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ !!!

பழைய குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது . நெல்லை மாவட்டம் ,வனத்துறையினர் மற்றும்  தீயணைப்புத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் , எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நேற்றிலிருந்து  போராடி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமானதால் , தீப்பிடித்து இருக்கக்கூடும்  எனவும் ,மூலிகைகள் மற்றும்  செடிகளும் எரிந்து  வருவதால், இயற்கை ஆர்வலர்கள் பெரும்  கவலையடைந்துள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹெட் மையர், குர்கீரத் மரண அடி…. ஹைதராபாத் பரிதாப தோல்வி!!

பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றுள்ளது  ஐ.பி.எல் 54 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான  சாஹா 20 (11) ரன்களும்,  கப்தில் 30 (23) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வில்லியம்சன் அதிரடியில் பெங்களூரு அணிக்கு 176 ரன்கள் இலக்கு!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 54 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் விராட் கோலி  பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹாவும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் […]

Categories
உலக செய்திகள்

எய்ட்ஸ் நோயை பரப்பிய சைக்கோ டாக்டர்!!! பரபரப்பில் பாகிஸ்தான்!!

பாகிஸ்தானில், ஹெச்ஐவி கிருமி தொற்று கொண்ட ஊசியால் எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவரைபோலீசார் கைதுசெய்தனர்.    பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்  முசாஃபர் கங்காரோ.இவர் ராட்டோரேடோவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார் . இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் . தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஹெச்ஐவி கிருமி தொற்றுள்ள ஊசியை போட்டுள்ளார் .இதன் மூலம் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .அதில்  65 பேர் குழந்தைகள். இதனையறிந்த  சுகாதாரத்துறை அதிகாரிகள் புகாரளிக்க  காவல் துறையினர், அவனை கைது செய்து […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்..!! முதலிரவில் கணவன், மனைவி இதை செய்ய வேண்டாம்…!!

திருமணமான புதுமண தம்பதிகளுக்கு முதல் இரவு என்பது வாழ்க்கையில் முக்கியமான நாள் ஆகும். அதற்காக முதல் நாளிலையே உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முதலில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள வேண்டும். பின்பு உடலுறவை பற்றி பேசுதல்,அதன் பின் உடலுறவில் ஈடுபடவேண்டும். முதலிரவுக்கு முன்பு திருமணம் வேலைகள் மற்றும் சம்பிரதாயங்கள் என உங்கள் உடல் சோர்வடைந்து காணப்படும். இதனால் நீங்களே நினைத்தலும் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியாது. ஆனால் முதலிரவின் போது எதிர்பார்க்க கூடாத ஐந்து விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் […]

Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஜூலை 1-ஆம் தேதி அத்திவரதர் திருவிழா!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

காஞ்சிபுரம், அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . காஞ்சிபுரம் மாவட்டம் , வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை  அத்திவரதர் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது . இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி ஆகியோர்  கலந்துகொண்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது .அப்போது ,வரும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள்  மகிழ்ச்சி!!

கன்னியாகுமரி, திற்பரப்பு அருவியில்  நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள்  மகிழ்ச்சியில் உள்ளனர் . தொடர்ந்து பெய்த கனமழையால், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில்,  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குளுகுளுவென கொட்டித்தீர்க்கும் அருவியில்  குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள்,  குளியலிட்டு மகிழ்ச்சியில் பூரிப்படைந்துள்ளனர் .

Categories
உலக செய்திகள்

தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோன் முடி சூட்டப்பட்டார்!! 

தாய்லாந்து நாட்டின் , புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோன் முடி சூட்டப்பட்டார் . பொதுவாக மூன்று நாட்கள் நடைபெறும்  முடிசூட்டு விழாவில்,  முதலில்  தலைமை புத்த துறவி,வெள்ளை உடையணித்திருந்த  மன்னரை  , நாட்டின் பல்வேறு  புன்னிய தீர்த்தங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரைக் கொண்டு,  நன்னீராட செய்தார். அதன்பின்  பௌத்த மற்றும் பிராமண முறைப்படி சடங்குகள் நடந்தன . பின்னர்,  இந்தியாவிலிருந்து வரவழைக்க வைக்கப்பட்ட  வைரத்தால் ஆன   7.3  கிலோ தங்கத்தினால் ஆன மணிமுடி அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னருக்கு சூட்டப்பட்டது.

Categories
அரசியல் இந்திய சினிமா விமர்சனம்

நடிகர் அக்க்ஷய் குமார் வாக்களிக்காதது ஏன் ????

நடிகர் அக்க்ஷய் குமார், வாக்களிக்காததால்  சர்ச்சை எழுந்துள்ளது . மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த திங்கள் அன்று  வாக்குப்பதிவு நடைபெற்றது.அப்போது , இந்தி நடிகர் அக்க்ஷய் குமாரின் மனைவி வாக்களித்துவிட்டு சென்றார் . ஆனால் அக்க்ஷய் குமார் வரவில்லை. இது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கியது .   அக்க்ஷய் குமார், டுவிட்டர் பக்கத்தில், ‘குடியுரிமை பற்றி ஏன் தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும்  பரப்பப்படுகின்றன’ என்று கேள்வி எழுப்பினார் . தேசத்தின் மீதான பற்றை  யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம்  இல்லை என்றும் , ‘இந்தியாவை வலிமையாக்க […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானின் புதிய மன்னருக்கு குவியும் வாழ்த்துக்கள்!!!

ஜப்பான் மக்கள்,   தங்கள் புதிய மன்னருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜப்பானின்  மன்னராக இருந்த அகிட்டோ, வயதான  காரணத்தால் ,பதவி விலகியதால்  மன்னரின் மூத்த மகன், நொருகிட்டோ புதிய மன்னராக பதவி ஏற்றார். டோக்கியோ நகரில் உள்ள அரண்மனையில் ,கூடும் மக்கள் மன்னரை வாழ்த்தி முழக்கமிட்டு வாழ்த்தி வருகின்றனர்.  மன்னரும், ராணியும் மக்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் .

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிங்கம்புணரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிதிஉதவி!!!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் ரூபாயை அரசு வழங்கியது . சிங்கம்புணரி அருகே  கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர்  விவசாயி கருப்பையா. அவர் தனது  மனைவி சின்னம்மாள் மற்றும்  இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை   செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும்,  தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும்  2 வயது பெண் குழந்தை திவ்யதர்ஷினியும்   உடல்  கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செயின் திருட்டு…. கோவிலில் சாமி கும்பிடும்போது கைவரிசை !!!

தஞ்சையில், கோவிலில் சாமி கும்பிடும் போது 4 பவுன் செயின் திருடு போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் பிரதான சாலை தெருவைச் சேர்ந்தவர் திருஞானத்தின்  மனைவி 75 வயதான சீதாலெட்சுமி . இவர்  கரம்பயம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு  வெளியே வந்து பார்த்த போது  கழுத்தில் இருந்த  4 பவுன் செயின்  காணாமல் போனதை கண்டு அதிர்ந்தார். கோவிலில் சாமி கும்பிடும் போது, கூட்டத்தில் மர்ம நபர் யாரோ  சீதாலெட்சுமியின் செயினை  […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 96 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 96 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நீட் தேர்வு ஒத்தி வைப்பு !!! பானி புயல் எதிரொலி !!

ஒடிசாவில், பானி புயலால்,  நீட் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தேசிய அளவில், இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர  நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு  மே 5-ஆம் தேதி நடக்க உள்ள  நிலையில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு கேட்டுக் கொண்டது. பானி புயலால்  கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்,  இதை ஏற்று நாளை ஒடிசாவில் நடைபெற உள்ள நீட் தேர்வு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது என  தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வாட்டியெடுக்கும் கோடை வெயில்…!!!! தண்ணீர் பஞ்சத்தில் குஜராத்…!!!

குஜராத்தில் கோர்வாட் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக அவ்வூர் பெண்கள் தெரிவித்துள்ளனர்.  கோடை வெயிலால் இந்தியாவில் பல மாவட்டடங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கோர்வாட் கிராமத்தில்  வறட்சி வேகமாக பரவிவருகிறது. இங்குள்ள பெண்கள் பகலில்  வேலைக்கும், இரவில் தண்ணீரை தேடியும் அழைக்கின்றனர். இது குறித்து அந்த கிராம பெண்கள் கூறுகையில், ”பகலில் வேலைக்கு சென்று இரவு வீட்டுக்கு வரும் இந்த பெண்கள், வீட்டிற்கு வந்ததும் உடனே தண்ணீரை தேடி இரவு […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி பேசியதில் எந்த தவறும் இல்லை” – தேர்தல் ஆணையம்!!

பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதியை மீறியதாக அளிக்கப்பட  நான்காவது புகாரையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தின்  நந்தேட் பகுதியில் கடந்த மாதம் 6ம் தேதி பிரதமர் மோடிதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தாக்கி பேசும் வகையில் ”நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும்” தொகுதி என  வயநாடு தொகுதியை குறிப்பிட்டு பேசினார். பிரதமர் மோடி இப்படி பேசியது  தேர்தல் விதி மீறல் என காங்கிரஸ் கட்சியின்  சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக அரிய வகை சங்குகள் விற்ற மூவர் கைது !!

சென்னை மெரீனா கடற்கரையில், அரிய வலம்புரி மற்றும் மாட்டு சங்குகளை சட்டவிரோதமாக விற்ற 3 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினர்,  மெரீனா கடற்கரை பகுதியில், தடைசெய்யப்பட்ட அரிய வகையான சங்குகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி , ஆய்வு செய்தனர். அப்போது  அரிய வகை வலம்புரி மற்றும் மாட்டு சங்குகள் விற்பனை செய்யப்பட்டதை உறுதிசெய்து  136 சங்குகளை பறிமுதல் செய்தனர் . சங்கு விற்பனை செய்த  3 பேரை கைது செய்து,போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் ,  செயற்கையாக சுண்ணாம்புக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ஜேக் டேனியல்” படத்தில் இணையும் ஆக்சன் கிங் அர்ஜுன்…!!!!

திலீப் நடிப்பில் உருவாகும் மலையாள படத்தில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    திரையுலகில் நடித்தால் ஹிரோவாகத்தான் நடிப்பேன் என்று சிலர்  சுற்றித்திரிகின்றனர். ஆனால் அர்ஜுன் அப்படியில்லாமல், தமிழில் இரும்புத்திரை படத்தில் வில்லனாகவும், தெலுங்கில் நா பெரு சூர்யா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தந்தையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மலையாளத்தில் திலீப் நடிபில் தயாராகிவரும் ஜேக் டேனியல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அர்ஜுன் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். குடும்பக் கதையாக உருவாகும் இந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி பள்ளி வாகன பரிசோதனை, மே மாதம் 7 -ம் தேதி என அறிவிப்பு  !!

தூத்துக்குடியில்  உள்ள பள்ளி வாகன பரிசோதனை  மே மாதம் 7 -ம் தேதி  நடைபெறவுள்ளது.  தூத்துக்குடி வட்டாரத்தில் கல்வி நிறுவனங்களின் சார்பில் சுமார் 170-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், கூறுகையில்   மாணவமாணவிகள் மற்றும்  குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆண்டு தோறும் வாகனங்களின் இயக்கத் தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அதேபோல் , இந்தாண்டு  பள்ளி வாகனங்களுக்கான தரம் குறித்த ஆய்வு மே 7 ம் தேதி ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில், […]

Categories
உலக செய்திகள்

சந்திரனின் மீது மோதிய விண்கல்…!!ஆராய்ச்சியை தொடரும் ஸ்பெயின்…!!

சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் மீது மோதிய விண்கல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.    கடந்த ஜனவரி மாதம் சந்திர கிரகணத்தின் போது விண்கல் ஒன்று சுமார் 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சந்திரனின் மீது மோதியுள்ளது என்றுஸ்பெயின் நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 45 கிலோ எடை கொண்ட இந்த விண்கல் சந்திரனில் 15 மீட்டர் பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள ஸ்பெயின் நாட்டு அறிஞர்கள் இந்த கல் வால் நட்சத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டெல்லி அணியை விட்டு விலகுவது கடினம் தான்” உருகிய ரபாடா!!

டெல்லி அணியை விட்டு விலகுவது மிகவும் கடினமானதாக இருக்கிறதென டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார்.  தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா முன்னணி பந்து வீச்சாளராக உள்ளார்.இவர் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் இவரின் அபார  பந்து வீச்சால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில்இதுவரையில்  12 போட்டிகளில்  25 விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் தான் முன்னணியில் உள்ளார். இதற்கான ஊதா நிற ‘பர்பிள்’ தொப்பி அவருக்கு  வழங்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல்சீற்றம் தணிந்தது …மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர் !!!

நாகை மாவட்டத்தில், மீனவர்கள் கடல் சீற்றம் குறைந்ததால் , மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நாகை மாவட்டத்தில், பானி புயல் முன்னெச்சரிக்கை காரணமாக  9 நாட்களுக்கும் மேலாக  நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமலிருந்த நிலையில் , புயல் கரையை கடந்துவிட்டதால் இன்று மீன்பிடிக்க சென்றனர். இன்று நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் மற்றும் நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.  

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 05….!!

இன்றைய தினம் : 2019 மே 05 கிரிகோரியன் ஆண்டு : 125_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 126_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 240 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் 1215 – இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டாஉடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று. 1260 – குப்லாய் கான் மங்கோலியப் பேரரசராக முடிசூடினார். 1494 – கிறித்தோபர் கொலம்பசு ஜமேக்காவில் தரையிறங்கி அதனை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். 1640 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் குறுகிய-கால நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1762 – உருசியாவும் புருசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின. 1809 – சுவிட்சர்லாந்தின் ஆர்காவு மாகாணம் யூதர்களுக்கு குடியுரிமையை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வத்தலகுண்டில் போலீசாரைத் தாக்கிய இருவர் கைது !!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் போலீசாரைத் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே , காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாயவன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மாயவன் நிறுத்தி சோதனையிட்டுள்ளார் .அப்போது  அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த அப்துல்லா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் மாயவனை தாக்கியுள்ளனர் . இதனால் ,அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது, ஹெல்மெட் அணியாமல் […]

Categories

Tech |