Categories
டெக்னாலஜி பல்சுவை

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின்  சிறப்பு அம்சங்கள்!!

கூகுள் நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 3A மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்களின்  சிறப்பு அம்சங்கள் பற்றி  தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3A  மற்றும் பிக்சல் 3A  XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை வெளியிட்ட போன்களில் இந்த ஸ்மார்ட் பிக்சல்  போன்கள்  கூகுளின் விலை குறைந்தவையாக இருக்கின்றன. புதிய பிக்சல் 3A  ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் அதனை  சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிதான காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நரேந்திர மோடி….!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளைக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 65-வது பிறந்தநாள் ஆகும். தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பரங்குன்றம் சென்ற அவர் இன்று காலையில் மதுரையில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் தனது பிறந்த நாளைக்கூட கொண்டாடாமல் எளிமை காட்டிக்கொண்டு வழக்கம் போல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை தெரிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைவு…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!!

தொடர்ந்து 4வது  நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் புதிய அறிமுகம்… பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பைக்…!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துயிருக்கிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துயிருக்கிறது. இந்த புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட்டின் விலை ரூ.82,253 (எக்ஸ்-ஷோரூம்) எனறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பைக் தற்போதைய அவெஞ்சர் 180 குரூசர் மாடலுக்கு மாறாக அறிமுகமாகியுள்ளது. இது பழைய 180CC அவெஞ்சர் மோட்டார்சைக்கிளின் விலையை விட  ரூ.6000 வரை அதிகம் ஆகும். மேலும் இந்த அவெஞ்சர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுநர் நெஞ்சுவலியால் பரிதாப பலி…!!

அண்ணாநகர் பணிமனையில் ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகர், சத்யாநகர், 2வது தெருவில் வசிப்பவர் உமாபதி ( 52 வயது).  இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவர் வழக்கம் போல் நேற்று காலை பேருந்தை எடுப்பதற்காக அண்ணாநகர் பணிமனைக்கு சென்றார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். உடனே அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  ஏற்கனவே இறந்துவிட்டார் என […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 12..!!

இன்றைய தினம் : 2019 மே 12 கிரிகோரியன் ஆண்டு : 132_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 133_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 233 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 254 – முதலாம் ஸ்தேவான் 23-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 907 – சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது. 1191 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் சைப்பிரசில் பெரங்காரியா என்பவரைத் திருமனம் புரிந்தார். 1551 – அமெரிக்காக்களின் மிகப் பழமையான பல்கலைக்கழகம், சான் மார்க்கோசு தேசியப் பல்கலைக்கழகம், பெரு, லிமா நகரில் அமைக்கப்பட்டது. 1588 – சமயங்களுக்கான பிரெஞ்சுப் போர்: முதலாம் என்றி [[பாரிசு நகரை அடைந்து, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

‘தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ டீன் கடும் எச்சரிக்கை…!!

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் வனிதா எச்சரித்துள்ளார். மதுரை மாவட்ட அரசு மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவமனையின் மருந்தகங்களில் வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. ஆனால் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள்  குறிப்பிட்ட மாத்திரைகளை தனியார் மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளும்படி நோயாளிகளிடம் பரிந்துரைப்பதாக புகார்  எழுந்துள்ளது. இந்த  மருத்துவமனையில் ஏற்பட்ட  மின்தடை காரணமாக இறந்த 3 நோயாளிகளில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மற்றொரு பத்திரிக்கையாளர் கொலை…..!!!!

ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.  ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் பெண்மணி  மீனா மங்கள். இவர் பத்திரிகையாளரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் பணிபுரிகிறார். உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்திவாசிப்பாளராகவும் பணிபுரிந்து வரும் இவர் தற்பொழுது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வருடத்தில் நடந்த ஆப்கானிஸ்தானின் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ரிப்பேரான ஹெலிகாப்டரை சரி செய்ய உதவிய ராகுல்.!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோளாறு ஏற்பட்ட  ஹெலிகாப்டரை பாதுகாப்பு குழுவுடன் இணைந்து சரிசெய்ய உதவிய காட்சிகள் வெளியாகி உள்ளன. நடை பெற்று வரும்  மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட தேர்தல் நாளை (12ம் தேதி) ஞாயிற்று கிழமை நடைபெற இருக்கிறது.  இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இமாச்சலப் பிரதேசத்தின் உனா நகருக்குச் சென்றபோது, ஹெலிகாப்டரில் சிறிய அளவில் கோளாறு  ஏற்பட்டது. இதை சரிசெய்வதற்கான பணியில் பாதுகாப்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் நிலநடுக்கம்….. தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள்….!!!

ஈரானில் கெர்மான்ஷா மாகாணத்தில் இன்று மதியம் சுமார் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   ஈரானில் உள்ள கெர்மான்ஷா மாகாணம் மலைகள்  சூழ்ந்த பகுதியாகும். இங்கு கடந்த 2016_ம் ஆண்டு நவம்பர் மாதம் சுமார் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்த பகுதியில் இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை  கண்டு பயத்தில் மக்கள் அலறியடித்து தெருக்களுக்கு ஓடி வந்தனர்.

Categories
லைப் ஸ்டைல்

உடலுறவில் பெண்களை எவ்வாறு ஆண்கள் கடுப்பேற்றுகிறார்கள் தெரியுமா….??

முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது அல்லது நேரடியாக செக்ஸில் ஈடுபடுவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காத விசியம் ஆகும். முதலில் முன்விளையாட்டுகளுக்கு  பெண்களின் உணர்ச்சியை தூண்ட வேண்டும், பின்பு செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்ய வேண்டும். பெண்கள் உடலுறவில் உச்சத்தை அடையும் போது அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை  செய்வது அவர்களை முழுமையாக திருப்தியடையச் செய்யும். அழுக்கான கைகள், வெட்டப்படாத நகங்கள், உடன் துர்நாற்றம் உள்ளிட்டவை செக்ஸின் போது பெண்கலுக்கு வெறுப்பை உண்டாக்கும். அதனால் உடலுறவில் ஈடுபடும் முன் அடிப்படை சுகாதாரத்துடன் இருப்பது அவசியம் ஆகும். உடலுறவில் ஈடுபடும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் அருகே  ஏடிஎம்யை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது …!!!

பெண்ணாடம் அருகே  ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் மையூரில்  உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்-ல்  ராயதுரை என்பவர் பணம் எடுக்க சென்றார். அந்த நேரம் அங்கு வந்த  மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அவரை தடுக்க முயன்றுள்ளார் .அப்போது  அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பியை அங்கேயே வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி விரைந்து தப்பிச் சென்றார். அந்த மர்ம […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வெப்பசலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  சமீபத்தில் தான் தமிழகத்தை கஜா புயல் நிலைகுலையச்செய்தது. ஆனால், தற்போது வந்த பானி புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில்,  வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சுமார் இரண்டு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற உள்மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் மேக மூட்டமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் அருகே போலி மதுபான விநியோகம் தொடர்பாக 3 பேர் கைது…!!

நாட்றாம்பள்ளி அருகில்  போலி மதுபானம் விநியோகம் தொடர்பாக  3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம்  நடுபட்டு காக்கங்கரை  பகுதிகளில், காரில் போலி மதுபானங்களை  விநியோகிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரின் கண்காணிப்பில் ஏரியூர் கிராமத்தில் சிலர்  சிறிய அறை அமைத்து, போலி மதுபானங்கள் தயாரித்து விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்ததில் மதுபானங்களின்  மூலப்பொருட்கள், ஸ்டிக்கர்கள்,1000 மதுபாட்டில்களைபோலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு  பறிமுதல் செயப்பட்டது . விசாரணையில்  அவர்கள் சட்டவிரோதமாக கடந்த 6 […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதின் ஐஸ் ஹாக்கி விளையாடி அசத்தல்!!

ரஷ்ய அதிபர் புதின் ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்று 4 கோல்கள் அடித்து தனது அணியை வெற்றியடையச்  செய்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜூடோ மற்றும் சாகசச் செயல்களில் அதிக ஆர்வமுடையவர். இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். இந்நிலையில் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் அதிக  ஈடுபாடு கொண்ட புதின், நைட் ஹாக்கி லீக் என்ற அணியில் பங்கேற்று  விளையாடினார். அந்த அணியில் புதினுடன் பாதுகாப்புத்துறை அமைச்சரான  செர்ஜி சோய்குவும் விளையாடினார். இறுதியில் அதிபர் புதின் சேர்ந்து விளையாடிய  அணி […]

Categories
மாநில செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 1 கோடி பணம், சொத்து ஆவணம் பறிப்பு….!!

சென்னை துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ஒரு கோடி பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது தாகிர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். முகமது தாகிரிடம் துரைப்பாக்கத்தை சேர்ந்த சிலர் புறம்போக்கு நிலம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் முகமது தாகிரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து […]

Categories
தேசிய செய்திகள்

“கணவர் கண் முன்னே மனைவியை சீரழித்த கும்பல்” சாகும் வரை தூக்கிலிட வேண்டும் – மாயாவதி ஆவேசம்!!

ராஜஸ்தானில் கணவர் கண் முன்னே  தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை சாகும் வரை தூக்கிலிட வேண்டுமென, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆவேசத்துடன் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் கடந்த  ஏப்ரல் மாதம் 26ம் தேதி கணவரை தாக்கிய கும்பல் ஒன்று அவரது கண் முன்னேயே அவரது  மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த  கொடூர சம்பவத்தை  வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டும் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மரத்தில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலி…மேலும் 7 பேர் காயம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில்  பெண் ஒருவர் பலியானதோடு மேலும் 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இறப்பு வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக செல்வதற்காக திருப்பூரிலிருந்து சிவகிரிக்கு காரில் 8 பேர் சென்றுகொண்டிருந்தனர் .அப்போது  கார் கிருஷ்ணன் கோவில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.  இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில்  பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும்  விபத்தில் பலத்த காயமடைந்த 7 பேரை அக்கம் பக்கத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

1முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவில் தினமும் பால் வழங்க தமிழக அரசு யோசனை…..!!

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் தினமும் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரால் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இது காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பள்ளி சத்துணவில் மாணவ-மாணவிகளுக்கு 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. இதில் 1 முட்டையும் வழங்கப்படுகிறது. தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 32 அதிகரிப்பு….. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 32 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (11/05 […]

Categories
ஆட்டோ மொபைல்

புதிய மாறுபட்ட நிறம்…. புதிய தோற்றம்…. களமிறங்கும் TVS மோட்டார் சைக்கிள்….!!

TVS மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.  TVS மோட்டார் நிறுவனம் தனது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் தற்போது TVS ரேடியான் 110 மோட்டார்சைக்கிள் டைட்டானியம் கிரே மற்றும் வொல்கானோ ரெட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. TVS ரேடியான் 110CC புதிய நிற மாடல்களின் விலை ரூ.50,070 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   மேலும் இது மற்ற நிற வேரியண்ட்களை விட ரூ.1,200 அதிகம் […]

Categories
டெக்னாலஜி

ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் சுந்தர் பிச்சை….. தனியுரிமை விளக்கம்…!!

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.  தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைப்பது போன்று இருக்கக் கூடாது என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இவர் பேசியது, விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி அறிக்கை ஒன்று எழுதி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பறிமுதல் செய்ப்பட்ட மதுபானங்களை விற்ற காவல் ஆய்வாளர் பணியிடைமாற்றம்…!!!

வழக்குகளில் பறிமுதலான மது பானங்களை வெளியில் விற்ற காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிடைமாற்றம்  செய்ப்பட்டுள்ளார்.  விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு தனிப்படை பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கணபதி. இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு  பறிமுதல் செய்ப்பட்ட  மதுபானங்களை காவல் நிலையத்தில் இருந்து எடுத்து வெளியில் விற்று வந்ததாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  இந்நிலையில் பணியிடைமாற்றம் செய்ப்பட்ட பின்னர் அவர்  கோட்டகுப்பம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு சென்று சக காவலர்களிடம்  தகராறில் ஈடுபட்டதாக […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை கிடு கிடு உயர்வு” பவுனுக்கு 08 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை.!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 08 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (11/05 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மாவட்டம் எலிகளால் நாசமாகும் பருத்தி சாகுபடி…விவசாயிகள் வேதனை…!!

இருமருகல் அருகில் உள்ள கிராமங்களில் எலிகளின் தொல்லையால்  600 ஏக்கர் அளவில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை கடைமடை சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையால்  குறுவை நெல் சாகுபடி கடந்த ஏழு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியில் மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் குறைந்த நீரில் பயிரிடக்கூடிய பருத்தி சாகுபாட்டில்  ஈடுபட்டனர் .ஆனால் எலிகளால் சுமார் 600 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்தி அனைத்தும் நாசமாகி உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நெல் சாகுபடியை அடுத்து பயிரிடப்படும் […]

Categories
பல்சுவை

வாடிக்கையாளர் மகிழ்ச்சி…. 3_ஆவது நாளாக குறைந்தது பெட்ரோல் , டீசல் விலை…!!

தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 11..!!

இன்றைய தினம் : 2019 மே 11 கிரிகோரியன் ஆண்டு : 131_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 132_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 234 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் :  330 – பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது. 868 – டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும். 912 – அலெக்சாந்தர் பைசாந்தியப் பேரரசராக முடி சூடினார். 1310 – பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னர் தேவாலய புனித வீரர்கள் 54 பேரை சமயமறுப்பிற்காக உயிருடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி!!

சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது  2019 ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபையர் 1ல்  சென்னை அணியை  வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் குவாலிபையர்2ல்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு 7 : […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணி 147 ரன்கள் குவிப்பு… இலக்கை எட்டுமா சென்னை..?

டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 147 ரன்கள் குவித்துள்ளது   2019 ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிபையர் 1ல்  சென்னை அணியை  வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் குவாலிபையர்2ல்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதும் போட்டி விசாகப்பட்டினத்தில் இரவு 7 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்ன பையன் நான்…. இதை நான் எதிர் பார்க்கவே இல்லை…!! நடிகர் தனுஷ்…!!

சினிமா உலகில் கால்பதித்து 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ இந்த படம் திரைப்படம் 2002ம் ஆண்டு மே 17ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகின்றது. தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. தனுஷின்  திரையுல வாழ்க்கை 17 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்…பறக்கும் படை அதிரடி..!!

மதுரை பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல்  எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் பகுதியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக திருப்பரங்குன்றம் தொகுதிக்கு  உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தெப்பகுளம் அருகில்  தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருச்சி கனரா வங்கியிலிருந்து […]

Categories
லைப் ஸ்டைல்

விந்து வெளியேறிய பிறகு உடல் சோர்வு அடைவது ஏன் தெரியுமா…??

விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் மட்டுமே. அது ஆண் உயிரணுக்களுக்குப் போதுமான சத்தே தவிர இதனால் உடல் சோர்வு உண்டாகும் என்று நினைப்பது தவறு. சுய இன்பத்திற்குப் பிறகு உங்கள் உடல் களைப்புக்கு காரணம் என்னவென்றால், பாலுணர்வு என்பது குறிமலரின் வாயிலாக உடலில் ஏற்படும் ஒருவித இன்பப்பரப்புதான். அப்போது இரத்தஓட்டம் அதிகரிப்பதோடு, உடல் தசைகளும், நரம்புகளும் முறுக்கேறுகின்றன. விந்து வெளியேறும் பொழுது ஆண்குறி முனையில் அழுத்தம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லாரியில் மணல் கடத்திய இருவர் கைது…!!

ஆந்திரா வழியாக சென்னைக்கு லாரி மூலம் மணல் கடத்திய ட்ரைவர், கிளீனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை திருவள்ளுவர் மாவட்டம் ஆரணி காவல்உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் சின்னம்பேடு அகரம் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவாயல் வழியாக  சின்னம்பேடு நோக்கி ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று அசுர வேகத்தில் வாகன சோதனை சாவடியில் நிற்காமல்  சென்றது. உடனே அந்த லாரியை போலீசார் விரட்டிச் சென்று சோதனை […]

Categories
லைப் ஸ்டைல்

தாம்பத்திய உறவில் ராஜாவாக இருக்க…. இதை சாப்பிடுங்கள் ஆண்கள்…..!!

தாம்பத்திய வாழ்க்கைக்கு பலம் கூட்டுவதற்கு அதிகப்படியான மருந்துகள் மெடிக்கல் ஷாப்பில் விற்கப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் எல்லாம் கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இதனால் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமுள்ளது. ஆனால் நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் உணவில் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் பக்க விளைவு இல்லாமல் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் என்றால் நம்ப முடிகிறதா, ஆம் நம்பத்தான் செய்ய வேண்டும். அதுதான் வெந்தயம். இதனால் தான் நமது முன்னோர்கள் உணவுப் பொருட்களில் வெந்தயத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். வெந்தயத்தை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டீசல் என்ஜினுடன் அறிமுகமாகும் MOTORS நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார்.!!

டாடா மோட்டார்ஸ் TATA MOTORS நிறுவனம் தனது அல்ட்ரோஸ் காரை முதலில் இந்த வேரியண்ட்டில் தான் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் உள்ள  சந்தையில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது 4 மீட்டருக்கும் குறைவான கார்களில் டீசல் என்ஜின்களை வழங்க மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றது. மேலும், ஒருசில நிறுவனங்கள் மட்டுமே விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கின்றன. இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் மாடல் வகை காரை டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்ய இருப்பதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பழுதாகியுள்ள தமிழக அரசு” ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் சரி செய்ய முடியாது… கமல்ஹாசன் விமர்சனம்…!!

டெல்லியில்  இருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதாகியுள்ள தமிழக அரசை சரி செய்ய முடியாது  என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் இறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது புகார்  மக்கள் நீதி மய்யத்தின் தலைவரையும் நடிகருமான   கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது டெல்லியில் இருந்து கொண்டு ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதாகியுள்ள தமிழக அரசை சரிசெய்ய முடியாது என்று விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் 64 M.P. கேமரா சென்சார் அறிமுகம்.!!

சாம்சங்  நிறுவனம்  புதிதாக  64 M.P. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது  தற்சமயம்  கிடைக்கும்  சென்சார்களை  விட  அதிக  ரெசல்யூஷன்  கொண்டதாகும்.  சாம்சங் நிறுவனம் புதிதாக 64 M.P. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 M.P. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று […]

Categories
டெக்னாலஜி

இந்த போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாதாம்….!!

இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை நிறுத்த போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  பிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியை 2017 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது. முதலில் உள்ள ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் 7 போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விண்டோஸ் போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை இந்த ஆண்டு டிசம்பர் 31, 2019-தில் இருந்து நிறுத்தப்படும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ்அப் சேவையை விண்டோஸ் 10 இயக்குதளங்களில் பயன்படுத்த […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 128 அதிகரிப்பு…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 128 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (10/05 […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை கிடு கிடு உயர்வு” பவுனுக்கு 08 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 08 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (10/05 […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. மக்கள் பீதி….!!

ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியூஷ் தீவில் திடிரென்று சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மியாசகி பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் தனது வீடுகளில் இருந்து வெளியேறினார். உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணியளவில் […]

Categories
பல்சுவை

இரண்டாவது நாளாக குறைந்தது பெட்ரோல் , டீசல் விலை….. வாடிக்கையாளர் மகிழ்ச்சி..!!

இரண்டாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 10..!!

இன்றைய தினம் : 2019 மே 10 கிரிகோரியன் ஆண்டு : 130_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 131_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 235 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் :  கிமு 28 – சூரியப்புள்ளி சீனாவில் ஆன் வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது. 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தான். 1497 – அமெரிகோ வெஸ்புச்சி புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார்.. 1503 – கொலம்பசு கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார். 1612 – ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மகாலைத் திருமணம் புரிந்தான். 1655 – இங்கிலாந்து எசுப்பானியாவிடம் இருந்து ஜமேக்காவைக் கைப்பற்றியது. 1768 – மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 09..!!

இன்றைய தினம் : 2019 மே 09 கிரிகோரியன் ஆண்டு : 129_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 130_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 236 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  1092 – லிங்கன் பேராலயம் புனிதப்படுத்தப்பட்டது.. 1386 – இங்கிலாந்தும் போர்த்துகலும் வின்சர் மாளிகையில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இவ்வுடன்பாடு இப்போதும் நடைமுறையில் உள்ளது. 1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) எசுப்பானியாவில் இருந்து தொடங்கினார். 1671 – அயர்லாந்து இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான். 1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கமல்ஹாசனின் சூலூர் பிரச்சாரத்திற்கு தடை கோரி மனு…!!!

கமலஹாசன் பிரச்சாரம் செய்ய கூடாதென்று இறந்துபோன மக்கள் நீதி மையம் உறுப்பினர் பாலமுருகனின் மனைவி மனு அளித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்ய கூடாதென்று இறந்துபோன மக்கள் நீதி மையம் உறுப்பினர் பாலமுருகனின்  மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பின் செய்தியாளர்களை சந்திதித்த அவர் கூறியதாவது,    கடந்த மாதம் 18ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்துக்கு சென்ற தனது கணவர் பின்பு சடலமாக வீட்டிற்கு திரும்பினார் என்றும் தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே பேருந்து தீ விபத்து…உயிர்தப்பிய பயணிகள்…!!

ஓசூர்அருகே தனியார் பேருந்து தீப்பிடித்த  விபத்தில் 20 பயணிகள் அதிஷ்டவசமாக  உயிர்தப்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 20 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து திருப்பூர்க்கு பயணித்த  தனியார் பேருந்து ஒசூர்_ கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக  தீப்பிடித்து எரிய தொடங்கியது. பேருந்து ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால்  அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து பேருந்தில் பற்றிய தீயை அணைத்து பேருந்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் ஏ.டி.எம் வாகனத்தில் திடீர் தீவிபத்து…!!

திருச்சியில் பணம் நிரப்பும் ஏ.டி.எம் இயந்திர வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  திருச்சியில் உள்ள  வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக 1 கோடி ரூபாயை  சிஸ்கோ என்ற தனியார்  நிறுவனத்தின் வாகனத்தில் எற்றி  ஏ.டி.எம். மையங்களில் அனுப்பப்பட்டது.  இந்நிலையில் சேதுராமன் காலனி என்ற இடத்தை கடந்து செல்லும்போது  பணம் நிரப்பும் ஏ.டி.எம். எந்திர வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பே  அப்பகுதி மக்கள்  தீயை அணைத்ததுடன், பணப்பெட்டியினை வண்டியில் இருந்து தனியாக அகற்றினர்.திடீரென […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை”அ.தி.மு.க பிரமுகருக்கு வலைவீச்சு…!!

கிளியல் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய அ.தி.மு.க பிரமுகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.   கன்னியாகுமரி களியல் பகுதியில் வசித்து வரும்  18 வயது பெண் அங்கு உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார் .அக்கடைக்கு தொடர்ந்து வந்த சுனில் குமார் என்ற நபர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி  தனியாக அழைத்துச் சென்று தனது நண்பரான அ.தி.மு.க பிரமுகர் சுஜின் ராஜையும் வரவழைத்து  இருவரும் அந்த பெண்ணை பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் அளிக்கும் தவறாக பாலியல் புகார்…. நண்பர்கள் தொடங்கிய #mentoo இயக்கம்.!!

 பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள், பெண்கள் தவறாக முறையில்  ஆண்களுக்கு எதிராக  பழிதீர்ப்பதற்காக பாலியல் குற்ற வழக்குகளை பயன்படுத்துவதாக கூறி மென் டூ (#men too) என்ற இயக்கத்தை துவங்கியுள்ளனர். சமீபத்தில் நடிகர் கரண் ஓபராய் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவரது நண்பர்கள் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து,  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதில் புகார் அளித்த அப்பெண்ணும் தங்கள் நண்பரும் […]

Categories
உலக செய்திகள்

உடல் வலிமைக்காக அணிலை உண்ட தம்பதியினர்….. இறுதியில் மரணம்…!!!

மங்கோலியா அருகே உடல் வலிமைக்காக அணிலை உண்ட தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நம்மில் பலபேர் பல்வேறு முயற்சிகளை செய்து  வருகின்றோம். நம்முடன் நெருங்கியவர்கள், நண்பர்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க ஏதாவது டிப்ஸ் கொடுத்தால் அதன் படி  செய்வோம். அதே போல் மங்கோலியா நாட்டில் வசிக்கும் மக்களில் சிலர் உடல் வலிமையடைய  அணிலை சமைக்காமல் பச்சையாக சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கையுடையவர்கள். மங்கோலியா மற்றும்  ரஷ்யாவின் எல்லை பகுதியில் சகானூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் […]

Categories

Tech |