தமிழகத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் நுழைவு வாயில் மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வத்தலகுண்டு- கொடைக்கானல் மலை பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. மேலும் நகரின் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து […]