Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்”…. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்….!!!!!!

முதியோர் ஓய்வூதியம் வழங்கியது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக சமுதாய வளைகாப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வரவேற்றார். இவ்விழாவில் பலர் கலந்து கொண்டார்கள். இதில் 150 கர்ப்பிணிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

மகாராணியை கெளரவிப்பது நமது செயல்…. பாட்டி குறித்து உருகிய இளவரசர் வில்லியம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

மறைந்த மகாராணி 2-ம் எலிசபெத் இயற்கை உலகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் என வேல்ஸின் புதிய இளவரசர் வில்லியம் அவரது பாட்டி குறித்து தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து அவரது மூத்த மகன் வில்லியம் வேல்ஸ் புதிய இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார். இந்நிலையில் வேல்ஸின் புதிய இளவரசராக வில்லியம் யுனைடெட் வனவிலங்கு உலகளாவிய உச்சி மாநாட்டில் தோன்றி தனது முதல் உரையை ஆற்றினார். Prince William delivers the […]

Categories
உலக செய்திகள்

இளவரசி மேகன் நிர்வாண ஸ்பாவில்…. இளம் வயதில் சந்தித்த சங்கடங்கள்…. தாழ்மையான அனுபவம் என தகவல் வெளியாகின….!!

சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்க்கல் அவருடைய இளம் வயதில் நிர்வாண ஸ்பாவில் சந்தித்த சங்கடத்தை பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார். இளவரசர் ஹரியும், மேகன் மார்க்கலும் கடந்த 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 18 மில்லியன் பவுண்டு மதிப்பிலான பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஆடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான spotify-யுடன் மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் spotify-யில் மேகன் மார்க்கலால் ஆரம்பிக்கப்பட்ட “ஆர்க்கிடைப்ஸ்” (Archetypes) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், இதுவரை மூன்று அத்தியாயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் பிரிட்டன் மகாராணி […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட தாய் மற்றும் மகள்….. கடுப்பான வாலிபர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

மனைவி மற்றும் மகளை கொலை செய்த வாலிபரை  போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் ரிக்க்ஷா ஓட்டுநரான சஞ்சய் பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், தாஷி  என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ரேகா, தாஷி  ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராமில் தங்களது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் கேலி செய்து வந்துள்ளனர். இதனால் சஞ்சய் பாலுக்கும், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் பைங்காட்டூர் ஆற்றங்கரை தெருவில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தகுமார் 15 வயதுடைய 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மன்னார்குடி அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

நான் முகேஷ் அம்பானியை கொலை செய்து விடுவேன்…. மருத்துவமனைக்கு வந்த அழைப்பு…. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்….!!!!

பிரபல தொழிலதிபருக்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இயங்கி  வரும் ஒரு மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம்  ஒரு அழைப்பு வந்துள்ளது . அப்போது பேசிய ஒருவர்   உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ்  அம்பானிக்கு   கொலை மிரட்டல் விடுத்ததோடு, மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப் போவதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர […]

Categories
உலக செய்திகள்

“அக்.15ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால்”… சென்னை மாநகராட்சி வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு…!!!!

அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துபவர்களுக்கு சொத்து வரியில் 5 சதவீதம் தொகை தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. உரிய காலத்திற்குள் சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பல வாய்ப்புகளை மக்களுக்கு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2022 -2023 ஆம் வருடத்திற்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும். இரண்டு சதவீத அபராத தொகையும் தள்ளுபடி செய்வதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லூசு பெண்ணே பாடலை அந்த பிரபல நடிகையை பார்த்து தான் நான் பாடினேன்…. ரகசியத்தை போட்டுடைத்த சிம்பு….!!!!

நடிகர் சிம்பு லூசு பெண்ணே பாடல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் பரப்பரப்பிற்கும், சர்ச்சைக்கும் பெயர் பெற்றவர். தற்போது அதையெல்லாம் மறந்து நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “மாநாடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.  இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரைப்படம் வெளியானது. […]

Categories
ஆட்டோ மொபைல்

கேரன்ஸ் கார்…. ரிகால் செய்யப்பட உள்ளதா….? என்ன காரணம்னு உடனே பாருங்க….!!!!

இந்திய நிறுவனமான கியா தனது கேரன்ஸ் எம்.பி.வி மாடலை தற்போது இந்திய சந்தையில் ரிகால் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த காரை ரிகால் செய்வதற்கு காரணம் குறித்த மாடலில் உள்ள காற்றுப்பை மென்பொருளில் பிழை கண்டறியப்பட்டதே ஆகும். இந்தப் பிழையானது காரின் எத்தனை யூனிட்களில் ஏற்பட்டிருக்கிறது என்ற விவரங்களை இன்னும் கியா நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் காரில் ஏற்பட்டிருக்கும் பிழை சாப்ட்வேர் மூலம் அப்டேட் செய்யப்படும். இந்த அப்டேட்டுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதையும் கியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தோட்டா லோடாக வெயிட்டிங்” விஷால் படத்தின் தெறிக்கும் பாடல்…. செம வைரல்…!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகரில் ஒருவராக வலம் வருபவர் விஷால் இவர் முதன்முதலாக நடித்த செல்லமே, சண்டைக்கோழி, திமிரு போன்ற படங்கள் வெற்றி பெற்றது. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியிலும் இருக்கிறார். இந்த நிலையில் விஷால் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் லத்தி இதனை புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார் ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா போன்ற இந்த படத்தை தயாரித்து […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ… “நீ பிறந்த பின்பே உன் தாய் மரணம் அடைந்தார்”… தந்தை செய்த கேவலமான செயல்…!!!!

மகளை பாலில் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்ப்ரா பகுதியில் 17 வயதுடைய  ஒரு  சிறுமி வசித்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை  கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல் ஆய்வாளர் மாதுரி  ஜாதவ் கூறியதாவது. இந்த சிறுமி பிறக்கும்போது அவரது தாய் இறந்துவிட்டார். இதனை காரணம் காட்டி அந்த சிறுமியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுதான் என் ஆசை”..? பத்திரிக்கையாளரால் ஈர்க்கப்பட்ட நடிகை ஓபன் டாக்…!!!!

பத்திரிக்கையாளராக வேண்டும் என்பதுதான் எனது நீண்டகால விருப்பம் என பாலிவுட் நடிகை ஹீனா கான் மனம் திறந்து பேசியுள்ளார். இதற்கு முன் ஐடியில் பணிபுரிந்ததாகவும் தற்போது பாலிவுட் நடிகையாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் இந்த நிலையில் இவர் கடந்த 13 வருடங்களாக பாலிவுட் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கின்றார். கடந்த 2009 ஆம் வருடம் முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இந்த சூழலில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப்ரேஷன் சக்ரா” நாடு முழுவதும் அதிரடி சோதனை…. தங்கம் மற்றும் வெள்ளிகளை கைப்பற்றிய சிபிஐ….!!!!

இந்தியாவில் உள்ள பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, பண மோசடி என பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதில் இணைய  வழியில் பண மோசடி அதிக அளவில்   நடைபெற்று வருகிறது. இது குறித்து மக்கள் தினம்தோறும் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இதனால் ஆபரேஷன் சக்ரா என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் இந்தியா முழுவதும் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மந்தாரக்குப்பத்தில் பேருந்து நிலையம் இருந்தும் பயன் பெறாத மக்கள்”…. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா…????

மந்தாரகுப்பத்தில் பேருந்து நிலையம் இருந்தும் பேருந்துகள் செல்லாததால் மக்கள் சிரமமடைந்து வருகின்றார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் இருக்கின்றது. இங்கு என்எல்சி-யில் வேலை பார்க்கும் வெளி மாவட்டங்கள் மற்றும் வேலை மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மந்தாரக்குப்பம் பகுதியில் வசித்து வருகின்றார்கள். மந்தாரக்குப்பத்தில் இருந்து சேலம், திருச்சி, பழனி, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளா, எர்ணாகுளம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரை விட மந்தாரக்குப்பத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரதீப் ரங்கநாதனின் ”லவ் டுடே”…. அசத்தலான ட்ரைலர் ரிலீஸ்…. நீங்களே பாருங்க….!!!

‘லவ் டுடே’ படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ”கோமாளி”. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தற்போது இவர் ”லவ் டுடே” என்ற படத்தை இயக்குகிறார்.   பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ராதிகா, சத்யராஜ் மற்றும் பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பீட்சா 3 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி… வெளியான புதிய அப்டேட்… எதிர்பாபாபில் ரசிகர்கள்…!!!!

இயக்குனர் காந்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதையடுத்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. இந்த சூழலில் நடிகர் அஸ்வின் தயாரிப்பில் பீட்சா 3 உருவாகி வருகிறது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், பவித்ரா போன்றோர் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படமானது நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் முடிந்தவர்களுக்கு ரூ.18,500…. இதை மட்டும் உடனே பண்ணுங்க…. இதோ சூப்பர் திட்டம்….!!!!

தனியார் நிதி நிறுவனங்களின் வாயிலாக செயல்படுத்தப்படும் முதலீட்டு திட்டங்களை அரசால் வழங்கப்படும் திட்டங்கள் நம் பணத்திற்கு பாதுகாப்பை வழங்குவதாக அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் வாயிலாக திருமணமானவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கிறது. இத்திட்டம் மத்திய அரசால் 26 மே 2020 அன்று துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 31 மார்ச் 2023 வரையிலும் முதலீடு செய்யலாம். இந்திய அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டம் இந்திய ஆயுள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும்’- நடிகை குஷ்பு பேட்டி….!!!

ஒன்வே படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குஷ்பூ, தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது அவரிடம், வெற்றிமாறன் ராஜராஜசோழன் பற்றி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ‘வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும் தான் பார்ப்பேன் என அவர் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி….. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்….. கோர விபத்து….!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வக்ராநல்லூர் நீர்மங்கலம் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகத்தியன் (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அகத்தியன் தனது மோட்டார் சைக்கிளில்  திருவாரூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அகத்தியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

அது நினைத்து பார்க்க முடியாத வலி…. பிரபல தொழிலதிபர் “பில்கேட்ஸ் முன்னாள் மனைவி வேதனை”…

விவாகரத்து என்பது நினைத்து பார்க்க முடியாத வலி என பிரபல தொழிலதிபரின்  முன்னாள்  மனைவி கூறியுள்ளார். உலக பணக்காரர்களில்  பில்கேட்சும் ஒருவர். இவர் கடந்த 1994-ஆம் ஆண்டு மெலிண்டா  பிரஞ்ச் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3  குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று  பிரிந்து வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் உருவாக்கிய அறக்கட்டளையில் இருவரும் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மெலிண்டா பிரபல செய்தி நாளிதழ் நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 68” படத்தின் இயக்குனர் இவரா….? இதை எதிர்பாக்கவே இல்லையே….!!!

‘தளபதி 68’ படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இதனையடுத்து, விஜய் நடிக்கும் 68 வது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

21 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்த மூதாட்டி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள ஆலமரத்து மேடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணாதேவி என்ற மனைவி உள்ளார். கடந்த 21 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த அருணாதேவி தனது அக்கா மகன் ராஜசேகர் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு சர்க்கரை வியாதி மற்றும் வயிற்று […]

Categories
தேசிய செய்திகள்

மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு…. காவலர் செய்த வேலையை பாருங்க…. வெளியான சிசிடிவி காட்சி….!!!!

இடுக்கி மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் சிகாப்த் என்ற காவலர் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி அருகே யாரும் இருக்கின்றனரா என தேடுகிறார். இதையடுத்து கடை வாசலில் கூடையில் வைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து 600 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ மாம்பழத்தை திருடி தனது ஸ்கூட்டரில் போடும் காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாம்பழம் திருடிய வழக்கில் காவலரை பணியிடை நீக்கம்செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“18 அம்ச கோரிக்கைகள்”…. 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்….!!!!!!

18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டார்கள். கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து சென்ற 2-ம் தேதி  முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இரண்டாவது நாளாக நேற்று முன்தினமும் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு என்ற பெயரில் பணமோசடி….. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!!

சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாளந்தூர் ஊராட்சியில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி சீட்டு நடத்தி ஏஜென்ட்கள் மூலம் ஜோதி பணம் வசூலித்ததாக தெரிகிறது. இந்நிலையில் 8 கிராம் தங்கம், 4 கிராம் தங்கம் என இரண்டு வகையான சீட்டை ஜோதி நடத்தியுள்ளார். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி நடிக்கும் ”விடுதலை” திரைப்படம்…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்….!!!

‘விடுதலை’ படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய அசுரன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை போன்ற படங்கள் விருதுகளை குவித்தது. தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ”விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹீரோவாக சூரி நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கருணை அடிப்படையில் வேலை கேட்ட வாலிபர்….. சான்றிதழ் போலியானதா….??ஆய்வில் தெரிந்த உண்மை….!!!

போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரியாம்பட்டியில் முனியப்பன் என்பவர் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு முனியப்பன் உயிரிழந்து விட்டதால் அவரது மகன் திருநாவுக்கரசு என்பவர் கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது திருநாவுக்கரசு […]

Categories
உலக செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடர் மின் தடை…. 13 கோடி பேர் பாதிப்பு…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!!!

தொடர் மின்வெட்டு காரணமாக 13 கோடி பேர் அவதிப்பட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் நேற்று முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டாக்கா பகுதியில் சுமார் 13 கோடி பேர் மின்சாரம் இன்றி தவித்து வருவதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளாவிய எரிசக்தியின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. இதன் விளைவாக வங்காள தேசத்தில் சமீபத்திய மாதங்களில் பெரும் மின்னெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கல்… சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்…!!!!!

உக்ரைன் நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து ஆறு மாதங்களை கடந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் நேரிடையாக களமிறங்கியுள்ளது. எனினும் நோட்டாவில் உக்ரைன் உறுப்பினர் அல்லாத சூழலில் படைகளை இறக்க முடியவில்லை. ஆனால் ஆயுதங்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை வழங்குவதற்கான மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இவர்கள் யார்?…. ரயிலில் வினோதமான முறையில் திருடும் 6 பேர்…. வைரலாகும் வீடியோ….!!!!

ரயிலில் வேற்று கிரகவாசிகள் போல் உடை அணிந்த 6 பேர்  பெண்களை தாக்கி திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில்  பிரபலமான ரயிலாக டைம்ஸ்  சதுக்கம் சுரங்க ரயில் உள்ளது. இந்த ரயிலில் இன்று அதிகாலை  பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்  பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென பச்சை வேற்றுகிரக வாசிகளைப் போல உடலை இறுக்கிய  ஜிம்ப்சூட்  ஆடையில் வந்த 6 பெண்கள் ரயிலில் இருந்த 2  பெண்களை தாக்கி கொள்ளையடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பார்த்ததும் குரைத்த நாய்…. இரக்கமின்றி 3 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

கர்நாடகாவின் பெங்களூரு கிழக்குநகரில் மஞ்சுநாதா பகுதியில் வசித்து வருபவர் வீட்டில் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் வழியே இரவு வேளையில் 3 பேர் நடந்து சென்றுள்ளனர். இதற்கிடையில் அடையாளம் தெரியாத நபர்களை பார்த்தால் குரைப்பதுதான் நாயின் வழக்கம். இதேபோல அவர்களை நோக்கி நாய் குரைத்துள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு தங்களை நோக்கி குரைத்துவிட்டது என கோபமடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து மரக்கட்டைகளை எடுத்து, சங்கிலியில் கட்டியிருந்த நாயை அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ, போஸ்ட் ஆபிஸ்…. முதலீடு செய்தால் இதுல எது பெஸ்ட் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

பணத்தை சேமித்துவைக்க வேண்டுமென அனைவரும் நினைப்பார்கள். அதற்கு பல்வேறு வழிகள் உள்ளதால், இவற்றில் எப்போதும் மக்களுக்கு ஒரு சந்தெகம் இருந்து கொண்டே இருக்கும். நீங்களும் உங்களது பணத்தைச் சேமிக்க விரும்பினால், இப்பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உதவியாக இருக்கும். இவற்றில் ஒரு லாபகரமான அரசாங்கத் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளாலாம். இதனிடையில் இவற்றில் முதலீட்டாளர்கள் நல்லஒரு லாபத்தினை ஈட்டலாம். எஸ்.பி.ஐ, தபால் நிலையம் ஆகியவை சேமிப்புத்திட்டத்துக்கான சிறந்த இடங்களாக பார்க்கப்படுகிறது. எனினும் பல சமயங்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு […]

Categories
உலக செய்திகள்

சூரியனில் 2 லட்சம் நீளம் உள்ள இழை வெடிப்பு…. பூமிக்கு பெரிய ஆபத்தா….? நிபுணர்கள் கணிப்பு….!!!!

சூரியன் அமைதியாக இருக்கின்றது என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் சூரியனில் 2 லட்சம் கிலோ மீட்டர் நிளமும் உள்ள ஒரு இழை வெடித்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீண்ட இழை சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் வெடித்துள்ளது. இந்த வெடிப்பில் இருந்து வெளிவரும் சிதறல்கள் பூமியை நோக்கி வரப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் வெடித்த இடத்தில் இருந்து கரோனஸ் மாஸ் எஜெக்ஷன் வெளிவரும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய ஆற்றல்மிக்க மற்றும் […]

Categories
உலக செய்திகள்

சீன நாட்டில் முக்கிய சேவை நிறுத்தம்… கூகுள் நிறுவனத்தின் திடீர் முடிவு…!!!

கூகுள் நிறுவனமானது, சீன நாட்டில் பல சேவைகளை நிறுத்திக் கொண்டிருந்த நிலையில் மொழிபெயர்ப்பு சேவையை தற்போது நிறுத்தியிருக்கிறது. கூகுள் நிறுவனமானது, உலக நாடுகலில் பல்வேறு சேவைகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகை அதிகமுடைய சீன நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியுள்ளது. இது, அந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவு என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது கூகுள் நிறுவனத்தினுடைய சேவைகள் ஹேக் செய்யப்படுவது, சீன நாட்டில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள், கூகுள் வழங்கும் சேவைகளை காட்டிலும் மிகச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பொன்னியின் செல்வன்” படக்குழுவுக்கு கமல் கொடுக்கும் சர்ப்ரைஸ்…. என்னன்னு தெரியுமா….?

பொன்னியின் செல்வன் பட குழுவுக்கு கமல் ட்ரீட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிப்பு”…. சிறுவன் உள்பட 2 பேர் கைது….!!!!!

மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் ஒரு சிறுவனை தேடி வருகின்றார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அகில் வர்கிஸ் பால் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருக்கின்றார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு 10:30 மணி அளவில் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். காற்று வாங்கியபடி அவர் மணற்பரப்பில் நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று நபர்கள் வர்கீஸ் […]

Categories
உலக செய்திகள்

எங்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது…. பிரபல நாட்டில் “உருவாக்கப்பட்ட இந்து கோவில்”…. மகிழ்ச்சியில் இந்தியர்கள்….!!!!!

பிரபல நாட்டில் இந்தியர்களின் பல ஆண்டு கனவுகளை  நிறைவேற்றும் வகையில் இந்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பழமை வாய்ந்த ஒரு இந்து கோவிலை புதுப்பிப்பதற்கான  அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு  நடைபெற்றது. இந்நிலையில் தற்போது பணிகள் முடிந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதனை அந்நாடு  அரசின் சகிப்புத்தன்மைத்துறை மந்திரி  திறந்து வைத்தார். இதனால் துபாய் வாழ் இந்தியர்களின் 10 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் 16 தெய்வங்கள் உள்ளது.  […]

Categories
உலக செய்திகள்

“நான்கு பேரையும் நான்தான் கொலை செய்தேன்”… மனம் திறந்த குற்றவாளி… பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

பிரித்தானியாவில் குற்றவாளி ஒருவர் நான்கு பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெர்பிஷையரில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் 11 வயது லேசி பென்னடம், 13 வயது சகோதரர் ஜான் பால் பென்னட், அவர்களது தாய் டெர்ரி பாரிஸ்(35) மற்றும் லேசியின் 11 வயது தோழி கோனி ஜெணட் போன்றோரை கொலை செய்த குற்றத்திற்காக டேமியன் பெண்டலை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் டெர்பி கிரவுன் கோர்ட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நவராத்திரி ஸ்பெஷல்”…. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உடையில் அதிதி…!!!!!!

அதிதி நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின் மகள் அதிதி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றார். இவருக்கு முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் அதிதி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை…. கால்பந்து நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!!

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் வன்முறை வெடித்து 174 பேர் சம்பவத்தில் அந்த கால்பந்து நிறுவனத்திற்கு 13 லட்சம் அபராத விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசிய நாட்டின் மலாங் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில், மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதன் பிறகு மக்கள் அங்குமிங்கும் ஓடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 174 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 180 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரத்த ஆறு ஓடும்னு சொன்னாங்க!…. ஆனா இப்போ!…. அமித்ஷா அதிரடி பேச்சு…..!!!!

ஜம்மு காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக அமித்ஷா சென்றுள்ளார். இதையடுத்து அமித்ஷா வைஷ்ணவி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அப்போது அமித்ஷா பேசியதாவது “ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் என்று சிலர் கூறினர். இந்த நிலையில் மோடி என்ற முழக்கம் மட்டுமே இப்போது எதிரொலிப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி இளைஞர்கள் கைகளில் கற்களுக்கு பதிலாக புத்தகங்கள் மற்றும் மடிக்கணினிகளை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!!

கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி கிராமம் சிலுவை பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (38) திரு பிரித்திவிராஜ் (36) திரு தாவீது ராஜா (30) திரு பிரவீன் ராஜ் (19) திரு ஈசாக்(19) மற்றும் செல்வன் அண்டோ கெர்மஸ் ரவி போன்ற 6 பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் […]

Categories
மாநில செய்திகள்

“காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே”.. வழிப்பறி செய்த மர்ம நபர்கள்… பெரும் பரபரப்பு..!!!!!

ராணிபேட்டையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு ரத்தினகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நந்தியாலம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேல் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மர்ம நபர்கள் வழிப்பறி செய்ய முயற்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிரஞ்சீவி நம்பிக்கையை காப்பாற்றிய “காட்பாதர்”….. விஜயதசமி வெளியீட்டில் முன்னணி….!!!!!

சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள காட்பாதர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இப்படத்தை மோகன் ராஜா இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் சிறுமியை படுகொலை செய்த போலீசார்….. போராட்டங்களை தடுக்க முடியாமல் திணறும் அரசு….!!!!

போராட்டத்தில் கலந்து கொள்ள   சென்ற 17 வயது சிறுமியை போலீசார் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது.  கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவின் ஏவுகணை சோதனை… “சொந்த நாட்டிற்கு உள்ளே விழுந்து வெடிப்பு”… பெரும் பரபரப்பு…!!!!

வடகொரியா அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தி உலக நாடுகளை எப்போதும் பரபரப்பாகவே வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில்  வடகொரியா நேற்று அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட ஏவுகணையை சோதனை செய்து இருக்கின்றது. வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பானின் வான் பரப்பை கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்திருக்கின்றது மேலும் இந்த ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ!…. 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்….. வியக்க வைக்கும் பின்னணி….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் காகயன் மாகாணத்தில் ரஷித் மங்காகோப் என்பவர் வசித்து வருகிறார். 78 வயதுடைய அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். அவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ‌ஹலிமாவுக்கு 18 வயது பூர்த்தியாகி உள்ளது. இந்நிலையில் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பேசிய ரஷித் மங்காகோபின் மருமகன் பென் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்திரிக்கையாளராக வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை”..‌‌… பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!!

பிரபல நடிகை தனது நீண்ட நாள் ஆசை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ஹீனா கான் முதலில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்செயலாக பாலிவுட் பக்கம் திரும்பினார் இவர் தற்பொழுது பாலிமர் திரையுலகுக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது. சென்ற 2009 ஆம் வருடம் முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்மை வேடத்தில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பொழுது தனது நீண்ட கால விருப்பம் […]

Categories
தேசிய செய்திகள்

“அற்ப விஷயங்களுக்காக மக்கள் அனைவரும் சண்டையிடக்கூடாது”…. மோகன் பகவத் வேண்டுகோள்….!!!!

தசராவை முன்னிட்டு நாகப்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டமும், மத சார்ந்த சமமற்ற நிலையை தடுத்து கட்டாய மதமாற்றத்தை தடுப்பதுமே ஆகும். இவை இரண்டும் அசட்டை செய்யாமல் உடனே கவனிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மதம் சார்ந்து மக்கள் தொகையில் சமமற்ற நிலை உருவாகினால் அது தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலையை உருவாக்கும். அதனைத் […]

Categories
மாநில செய்திகள்

கலைஞர் பேனா நினைவு சின்னம்…. தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதம்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் அடிப்படையில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்துக்கு அருகில் கடலில் தமிழ்நாடு அரசு சார்பாக ரூபாய்.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டுமானத்திற்கு “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்” என்று பெயரிடப்பட இருக்கிறது. இத்திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது. இந்த […]

Categories

Tech |