Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கை”….. ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்….!!!!!!

போதை பொருள் பயன்பாட்டற்ற மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை தாங்கி ஆலோசிக்கப்பட்டதாவது, மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க காவல்துறையின் மூலம் மாவட்ட எல்லைகளில் போதைப்பொருள் கடத்துவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. “கிரிவலம் செல்ல உகந்த நேரம்”…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!!!!

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இங்கிருக்கும் மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். அந்நேரத்தில் திருவண்ணாமலை நகரமே விழாக்காலம் போல் மக்கள் கூட்டம் இருக்கும். இந்த நிலையில் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி நாளை அதிகாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிபோடு செம! மாஸ்…. ஆஸ்கர் விருதில் அதிரடியாக நுழையும் RRR….. 16 பிரிவுகளில் போட்டி…. குஷியில் ரசிகர்கள்….!!!!

RRR திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஆலியா பட் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆன ஆர்ஆர்உர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பொது பிரிவில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை”….. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகர் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்….!!!!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார். பாலிவுட் சினிமாவின் பிரபலமான பழம்பெரும் நடிகர் அருண் பாலி. இவருக்கு வயது தற்போது 79. இவர் ஸ்வாபிமான், சாணக்கியா போன்ற பல ஹிந்தி தொடர்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 3 இடியட்ஸ் உட்பட பல பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து அருண் பாலி நடித்துள்ளார். இந்நிலையில் இயங்கு தசை சோர்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அருண்பாலி மும்பையில் உள்ள அவர் வீட்டில் நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“திருவண்ணாமலையில் உரம் கட்டுப்பாடு”…. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை….!!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான 1459 டன் யூரியா, 418 யூரியா, 215 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் மணலி மற்றும் காட்பாடி முண்டியம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் மற்றும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்கள். அப்போது பேசிய வேளாண்மை இணை இயக்குனர், நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் 6” போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. புகைப்படத்துடன் முழு லிஸ்ட் இதோ….!!!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், பிக்பாஸ் சீசன் 5 வரை நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்திகாவும், 3-வது சீசனில் முகினும், 4-வது சீசனில் ஆரியும், 5-வது சீசனில் ராஜுவும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனுக்காக ரசிகர்கள் மிகுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பு நிறைந்த பாராட்டு…. “ரஜினி, கமலுக்கு நன்றி” பொன்னியின் செல்வன் பிரபலத்தின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு கடந்த 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் ரகுமான், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீஸ் ஆனதிலிருந்து பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: பேருந்து தீப்பிடித்து எரிந்தது…. 8 பேர் மரணம்… பெரும் பரபரப்பு…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நேற்று இரவு ஓடும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும்பணி நடைபெற்று வருகிறது. முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Categories
அரசியல்

புரோ கபடி லீக் 2022: இன்று குஜராத்துடன் மோதும் தமிழ் தலைவாஸ்…!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டு புரோ கபடி தொடரின் எட்டு சீசங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது சீசன் நேற்று தொடங்குகியது. இந்த ஒன்பதாவது சீசனில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் ஜெயின்ஸ், ஹரியானா ஸ்ரீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டான்ஸ், யூ மும்பா, யுபி யோதாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளிலிருந்து, அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

என்னடா சோதனை..! நேற்று முன்தினம் எருமை மாடு…. நேற்று பசு மாடு…. மீண்டும் விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்….!!!!

இந்தியாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை சென்ட்ரலில் இருந்து குஜராத் காந்தி நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. காலை 11.15 மணிக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது ரயில் மீது எருமை மாடுகள் மோதியது. இதில் ரயிலின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. ரயிலின் முன்பாகமானது பிளாஸ்டிக் பைபரில் தயாரிக்கப்பட்டது. இதில் ரயில் இன்ஜினுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து சேதமடைந்த முன்பகுதி 24 மணி நேரத்திற்குள் மாற்றப்பட்டது. மேலும் எருமை மாடு உரிமையாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! மாஸ்…. “காபி வித் காதல்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி…. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் சுந்தர் சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், யோகி பாபு, பிரதாப் போத்தன், அருணா பால்ராஜ், சம்யுக்தா, பேபி விர்த்தி, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு தேவாலயம் கூட பாக்கி இருக்காது; ஒரு மசூதி கூட பாக்கி இருக்காது – எச்சரித்த கே.பி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது,  ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலே இருக்கிறதா ? ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு தேசவிரோத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? ஆர்எஸ்எஸ் ஐ விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? நான் மோடியை பார்த்த கேட்கிறேன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து கேட்கிறேன், இப்படி நீதிமன்றத்திலே பயங்கரவாத குண்டு வெடிப்பிற்கு காரணம் நாங்கள் தான் என்று ஒரு அமைப்பு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை…. மீறினால் என்ன தண்டனை தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை தண்டனை […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா செல்ல…. இனி இந்த வாகனங்களில் தான்…. பள்ளிகளுக்கு பரந்த உத்தரவு….!!!!

கேரளாவில் பள்ளிகளில் இருந்து சுற்றுலாவிற்கு செல்ல கடும் நிபந்தனை விதித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே சுற்றுலா செல்ல பள்ளிகள் பயன்படுத்த வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய அனுமதி கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணத்தின் விவரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை போக்குவரத்து துறையின் கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள்?….. பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் 21ஆம் தேதி ஆன வெள்ளிக்கிழமை அன்று பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தென் மாவட்ட விரைவு ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை மற்றும் செங்கோட்டை விரைவு ரயில்களில் காத்திருப்பு பயனியர் பட்டியலில் 320 பேர் உள்ளனர். ஆம்னி பேருந்துகளில் பழக்கமான நாட்களை விட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆண்கள் மட்டும்தான் அத செய்வாங்களா” பெண்களாலும் எல்லாம் முடியும்…. பிரபல நடிகை பேட்டி….!!!!

பிரபலமான கலர் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக 2 மெகா தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி வருகிற 10-ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஜமீலா என்ற தொடரும், இரவு 9 மணி அளவில் உள்ளதை அள்ளித்தா தொடரும் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த 2 தொடர்களுமே பெண்கள் சாதிக்க துடிப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜமீலா தொடரில் ஹீரோயின் ஆக நடிக்கும் தன்வி ராவ் சீரியல் குறித்து பேட்டி அளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை….. ராமேஸ்வரம்- மதுரைக்கு கூடுதல் ரயில் வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் மற்றும் மதுரை இடையே பயணிகளின் வசதிக்காக வருகின்ற அக்டோபர் பத்தாம் தேதி முதல் கூடுதலாக வாரம் மூன்று முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வசதி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். அதன்படி ராமேஸ்வரம் மதுரை வாரம் மூன்று முறை சிறப்பு கட்டண ரயில் ராமேஸ்வரத்தில் காலை 60 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரை வந்து […]

Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. அக்டோபர் 10 கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 10ஆம் தேதி முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் குறைந்த கட்டடமே வசூல் செய்யப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்க விரும்புகிறார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கருவை கலைக்கவே இந்த நாடகம்…. திவ்யா கணவர் அர்ணவ் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன திவ்யா தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய கணவர் அர்னாவ் செல்லம்மா சீரியலில் நடித்துவரும் நடிகையுடன் நெருக்கமாக இருப்பதால் அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் என்னை சந்திப்பதில்லை. என்னை பிளாக் செய்துவிட்டார் அத்துடன் செல்லம்மா சீரியல் நடிகையும் தன்னை டார்ச்சர் செய்து வருகிறார் என்று பரபரப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதாவது தங்கள் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தேர்வு எழுதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. தளபதி 67 திரைப்படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்…. யார் தெரியுமா….?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம் உள்ளிட்டோர்  முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடிக்கான  அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் கட்டடங்கள் விரைவில் கட்டப்படும் என கூறியுள்ளார்.மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார் m

Categories
மாநில செய்திகள்

ரயிலில் பட்டாசுகளை எடுத்து சென்றால் சிறை தண்டனை…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் பண்டிகை நெருங்கி விட்டதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதேசமயம் தங்கள் ஊர்களில் பட்டாசு விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் வெளியூர்களிலிருந்து பட்டாசை வாங்கி செல்வதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராத விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி வரைக்கும் உங்களுக்காக….. எந்தெந்த வழித்தடத்தில்….? தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் 24 ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

இணையதளம் மூலம் மரக்கன்று…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்தும் வகையில் புதிய முயற்சியாக இணையதளம் மூலம் மரக்கன்று பெற்றுக்கொள்ளலாம் என்று பசுமை தமிழ்நாடு இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் www.greentnmission.comஎன்ற இணையதளத்தில் பயன்பாட்டாளர்கள் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 18005997634 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் என அனைவரும் மரக்கன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போட்டோ எடுத்து…. ஷட்டரை மூடினர்…. பிரபல நடிகைக்கு நேர்ந்த ஷாக்…!!!

‘ராண்டு’ உள்ளிட்ட மலையாள சினிமாக்களில் நாயகியாக நடித்தவர் அன்னா ரேஷ்மா ராஜன். இவர், சிம் கார்டு வாங்குவதற்காக ஆலுவாலிலுள்ள ஒரு ஷோரூமுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நடந்த தகராறு குறித்து பேசி உள்ளார். வழக்கமாக நான் எப்போதும் பொது இடத்திற்கு செல்லும் பொழுது யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து கொண்டு ஷால் கொண்டு தலை முடி விட்டு தான் போவேன். அப்படிதான் சிம்கார்டு வாங்குவதற்கும் சென்றேன். அங்கிருந்த பெண் ஊழியர் சரியாக நடந்துக்கொள்ளாததால், அவரை […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டுல வேலைனு சொல்றாங்களா? உஷார்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை……!!!

வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் அதனை உஷாராக அணுக வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சமீபகாலமாக பல மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலவித நூதன மோசடிகளிலும் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது.அதனால் மத்திய அரசு முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் அதனை உஷாராக […]

Categories
தேசிய செய்திகள்

கோபிமஞ்சூரியன் சாப்பிட மறுத்த பாட்டி….. ஒரே போடு போட்டு கொன்ற பேரன்….. பரபரப்பு சம்பவம்…..!!!

கர்நாடக மாநிலத்தில் சசிகலா (46), அவரின் மகன் சஞ்சய் (26) இருவரும் பெங்களூரில் உள்ள சசிகலாவின் தாயார் சாந்தகுமாரி (69? வீட்டிற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்றுள்ளனர். அப்போது தனது பாட்டி சாந்தகுமார் இடம் கோபி மஞ்சூரியன் கொடுத்து சாப்பிடுமாறு சஞ்சய் வற்புறுத்தியுள்ளார்.ஆனால் சாந்தகுமாரி அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் கையில் வைத்திருந்த பாத்திரத்தால் சாந்தகுமாரியின் தலை மீது ஓங்கி அடித்துள்ளான். அதனால் காயம் ஏற்பட்ட சாந்தகுமாரி சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ரேஷன் அட்டையில் திருத்தும் செய்ய இன்று சிறப்பு முகாம்….. உடனே கிளம்புங்க…..!!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விநோதமா பேசுறாங்க..! அரை கிறுக்கு பயலுவ… மெண்டல் ஆஸ்பத்திரில சேக்கணும். ஆர்.எஸ்.எஸ்_யை வச்சு செய்த கம்யூனிஸ்ட் ..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒரு ஆட்சி நடக்கிறது, இன்னொரு பக்கம் ஆளுநர் தலைமையில் ஒரு போட்டி ஆட்சி நடப்பதும் பகிரங்கமான உண்மை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதற்கு இரண்டாம் தேதி பேரணி என்று கேட்டால் அவர் சொல்கிறார், வினோதமாக…. அம்பேத்கருடைய நூறாவது ஆண்டு கொண்டாடப் போகிறோம் என்கிறார்கள். அம்பேத்கருடைய 136 வது ஆண்டு கொண்டாடிவிட்டோம் நாம், யாராவது கொண்டாடுவார்களா ?ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு கால அட்டவணை வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கணினி வழி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான அட்டவணையை http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் தேவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதித்து 1- ஐ தேர்வர்கள் இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அனுமதிச்சீட்டு இரண்டை […]

Categories
மாநில செய்திகள்

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு….. தேர்வுகள் இயக்ககம் போட்ட அதிரடி உத்தரவு …!!!!

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பான முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரைகளை அனுப்புமாறு மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.  புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக பள்ளிகள் அனுப்பும் கருத்துருக்களை பரிசீலனை செய்து, அப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அதுபற்றிய கருத்துருகளை தேர்வுத்துறையிடம் அக்., 27 காலை 10 மணிக்கு நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின்படி தரப்படும் கருத்துருக்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே..! நம்ம ஸ்ருதி ஹாசனா இது…? இப்படி ஆயிட்டாரே…! என்ன ஆச்சி…. ரசிகர்கள் ஷாக்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இந்நிலையில் ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் அந்த புகைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மானம் போச்சு…. மரியாதை போச்சு….. எல்லாம் போச்சு…. பிரபல தமிழ் நடிகை ட்வீட்…!!!

நடிகை மகிமா நம்பியார் முதன் முதலில் 15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். இதனை அடுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகினார். சாட்டை திரைப்படத்தில் அறிவழகி என்ற கதாபாத்திரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவியாக நடித்தார். அதன் பின்னர் பள்ளி படிப்பை முடித்து அவர் நான்கு திரைப்படங்களில் நடித்தார். இந்நிலையில் நடிகை மஹிமா நம்பியார் CS அமுதன் இயக்கத்தில் ரதம் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. அப்போது […]

Categories
வேலைவாய்ப்பு

20,000 பணியிடங்கள் அறிவிப்பு… மிஸ் பண்ணாதீங்க..! இன்று கடைசி நாள்…. உடனே…!!!!

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Group B மற்றும் C. காலி பணியிடங்கள்: 20,000. வயது: 18 -30. கல்வித்தகுதி: டிகிரி. சம்பளம்: 25,500 – 1,51,100. தேர்வுக் கட்டணம் 100. தேர்வு: Combined Higher Secondary Level. மேலும், விவரங்களுக்கு (ssc.nic.in) இங்கு கிளிக் செய்யவும். இன்று கடைசி நாள்.

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் பெண்ணிடம் அத்துமீறிய 2 எம்எல்ஏக்கள்…. பெரும் பரபரப்பு…!!!

மத்திய பிரதேசத்தில் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுனில் ஷரப், சித்தார்த் குஷ்வாகா என்ற இரு எம்எல்எக்களும் மதுபோதையில் ரயிலில் பயணம் செய்தனர். அப்போது, ரெயிலில் 2 எம்.எல்.ஏ.க்கள் பயணித்த அதே ஏசி வகுப்பில் குழந்தையுடன் தனியாக வந்த பெண்ணுக்கு அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுபற்றி அப்பெண் கணவருக்கு போன் மூலம் தெரிவிக்கவே, அவர் ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே போலீசை டேக் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் போண்டாமணியை ஏமாற்றிய மோசடி மன்னன்…. ரூ.1 லட்சம் திருடு போனது எப்படி….? பகீர் பின்னணி இதோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் போண்டாமணி. இவர் சென்னை போரூரில் உள்ள ஐயப்பன் தாங்கல் பகுதியில் வசித்து வருகிறார். சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்‌. அப்போது நடிகர் போண்டாமணியை பார்ப்பதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரத்தீவ் என்பவர் வந்துள்ளார். இவர் போண்டாமணியிடம் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர் என்று கூறி அவருடனே மருத்துவமனையில் தங்கி அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மானம் போச்சு மரியாதை போச்சு” நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…. விஜய் ஆண்டனியால் பிரபல நடிகை திடீர் கோபம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இசை அமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி‌. இவர் தற்போது வள்ளிமயில், மழை பிடிக்காத மனிதன், கொலை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் ரத்தம் என்ற திரைப்படத்தை சி.எஸ் அமுதன் இயக்குகிறார். இப்படத்தில் மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் அமுதன் தன்னுடைய வலைதள பக்கத்தில் நடிகை மகிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன் ரத்தம் பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! விசாரணைக்கு வந்த இடத்தில் பண்ற வேலையா இது…. நடிகர் அர்னவ் செயலால் ரசிகர்கள் ஷாக்….!!!!

தமிழில் தற்போது செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திவ்யா 2-வதாக செல்லம்மா தொடரில் நடித்து வரும் சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 பேரும் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! எம்புட்டு வளர்ச்சி…. ஐஸ்வர்யா ராஜேஷை பின்னுக்கு தள்ளிய பிரபல நடிகை…. வியப்பில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் பிரியா பவானி சங்கர். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் யானை திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது ருத்ரன், […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இன்றைய இழப்பை தவிர்க்கமுடியும். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். மனதில் அமைதி நிறைந்திருக்கும். அனைவரும் உங்களிடம் அன்போடு நடந்துக் கொள்வார்கள். உழைத்து சம்பாதிக்கக்கூடிய திறமைகள் வெளிப்படும். பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். கவனத்தை கையாள வேண்டும். எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள். ஆடம்பர பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். மனதிற்கு பிடித்தமான பொருட்களை வாங்கக்கூடும். குடும்பத் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! அரசு உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். மனதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் முன்கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிலும் கவனமாக இருந்தால் முன்னேற்றம் உண்டாகும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் விலகிச்செல்லும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கக்கூடும். உங்களின் மனதில் உள்ளவற்றை மனைவியிடம் வெளிப்படுத்துங்கள். தொழிலுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கும்பொழுது இல்லத்தில் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. தேவையில்லாத மனக் குழப்பத்திற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்..! மனமகிழ்ச்சி உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிறருக்கு நன்மை கொடுக்கும் நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முடிவுகளை எடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் வந்துசேரும். அக்கம்பக்கத்தினரிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தாருடன் பேசும்பொழுது எச்சரிக்கை தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதத்தை வெளிப்படுத்த வேண்டாம். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! சிக்கல்கள் தீரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வரவு வருவதில் சிக்கல் ஏற்படும். எந்தவொரு வேலையும் தொடங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரையும் நம்ப வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். மருத்துவ செலவுகள் உண்டாகும். பேச்சில் அன்பை வெளிப்படுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவரையும் அனுசரித்துச் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! அக்கறை உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அலுவலகத்தில் உங்களுக்கு நல்லப்பெயர் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களின்மீது மரியாதை கொள்வார்கள். நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தினரும் உங்களை மதித்து நடப்பார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வீண்பழி உண்டாகும். சில நபர்கள் உங்களை தூண்டும் வகையில் பேசுவதால் நீங்கள் கோபத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் மேலோங்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும். பயணங்களின் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பழைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! உறுதித்தன்மை இருக்கும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும். வருமானத்தை அதிகமாக்க கடுமையாக உழைப்பீர்கள். வெற்றிகரமாக எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். இன்று நீங்கள் புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தெய்வீக நம்பிக்கையில் நாட்டம் செல்லும். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். மனதில் உறுதித்தன்மை அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! முயற்சிகள் கைகூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! எவருக்கும் ஏமாற்ற நினைக்காதீர்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு, அதனால் மனவருத்தம் உண்டாகும். திருமண முயற்சிகள் மேற்கொள்வதற்கு சாதக முயற்சிகள் உண்டாகும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். எதையும் கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாக செல்வது நல்லது. திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். இன்று புதிதாக வேலை தொடங்ககூடிய வாய்ப்புகள் உண்டாகும். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு […]

Categories

Tech |