Categories
மாநில செய்திகள்

BREAKING: உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு – பெரும் பரபரப்பு …!!

வேல்முருகன் என்ற நபர் சென்னை படப்பையை சேர்ந்த இவர் சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை அந்த பகுதியில் இருக்கக்கூடிய அதிகாரிகளை கேட்டுள்ளார். ஆனால் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.இது தொடர்பாக தலைமைச் செயலகம் சென்றுள்ளார். தலைமைச் செயலகத்திலும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. முதலமைச்சருடைய தனி பிரிவுக்கு மனு அளித்து கேட்டுள்ளார்,  அங்கேயும் அவருக்கான சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து எல்லா இடத்திலும் அவர் சாதி சான்றிதழ் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால் கிடைக்கவில்லை. கடைசியாக விரக்தி அடைந்து இருக்கிறார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகளுடன் மாமனார் வீட்டிற்கு சென்ற நபர்….. பெண் செய்த செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சிறுமியிடம் நகையை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிளந்தூர் ராதாநல்லூர் தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயது உடைய அபிக்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் தனது மகளுடன் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் அரசு பேருந்தில் மயிலாடுதுறைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலை பேருந்து நிறுத்தத்தில் அபிக்ஷாவை கையில் பிடித்துக் கொண்டு தினேஷ்குமார் இறங்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய பாலம்… நடுவழியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்… வாகன ஓட்டிகள் கவலை…!!!!

கிரீமிய தீபகற்பத்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட தரைபாலமானது கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைக்கப்பட்டதில் தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் ரஷ்யா கிரீமியா இடையேயான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வாகன ஓட்டிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் நடுவழியில் சிக்கித் தவிப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மருத்துவச் சுற்றுலா பேக்கேஜ்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர்.தங்களின் பயணிகளுக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே அப்போது சிறப்பு ரயில்களை இயக்குவது மட்டுமல்லாமல் விதவிதமான டூர் பேக்கேஜ்களை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது பயணிகளின் பயணம் மற்றும் சுற்றுலா அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதமாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் சமீபத்தில் தனது பயணிகளுக்காக ஆன்லைன் மருத்துவச் சுற்றுலா தொகுப்புகளை தொடங்கியுள்ளது. ரயில் பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஹெல்த் பேக்கேஜ்களை வழங்க […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டாக்டர் இல்லாத “அவசர சிகிச்சை பிரிவு” சிரமப்படும் நோயாளிகள்….. பொதுமக்களின் கோரிக்கை….!!

அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் இல்லாததால் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, பல்வேறு இடங்களில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவசர […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்டர் பண்ணது வாட்ச்…. ஆனா வந்தது இதுவா?…. கடுப்பான பெண்…. பின் நடந்த சம்பவம்…..!!!!

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதில் வேறு பொருட்கள் வரும் சம்பவம் சமீப காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மேற் குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக் கடிகாரத்திற்கு பதில் மாட்டுசாணத்தை அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்திலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த கட்சியினை புது உச்சத்திற்கு கொண்டு செல்வேன்”…. மல்லிகார்ஜூன கார்கே பேச்சு….!!!!

கூட்டுத் தலைமை மீது தனக்கு நம்பிக்கை உள்ளது. இதனால் எல்லா உறுப்பினர்களுடனும் இணைந்து பணிபுரிந்து காங்கிரஸ் கட்சியினை புது உச்சத்திற்கு கொண்டுசெல்வேன் என காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூனகார்கே கூறியுள்ளார். வட கிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியினரிடம் அவர் நேற்று உரையாற்றியபோது “உதய்பூர் பிரகடனத்தை அமல்படுத்துவதே என் முக்கியமான நோக்கம் ஆகும். பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியல், பழங்குடி இனத்தவர் உள்ளிட்ட 50 வயதிற்கும் குறைவானவர்களை கட்சி பொறுப்புகளில் நியமித்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவேன். நான் […]

Categories
வேலைவாய்ப்பு

Degree, Diploma, Engineering படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.60,000 சம்பளத்தில்…. ONGC நிறுவனத்தில் வேலை….!!!!

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: transport officer, programming officer, geo physicist, geologist காலி பணியிடங்கள்; 871 கல்வி தகுதி: Degree, Diploma, Engineering சம்பளம்: ரூ.60,000 – ரூ.1,80,000 வயது: 28-40 விண்ணப்ப கட்டணம்: ரூ.300 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 12 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு recruitment.ongc.co.in, www.ongcindia.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மாணவனை கடத்திச் சென்று உல்லாசம்” 3 மாத கர்ப்பத்துடன் இளம்பெண் கைது… சேலத்தில் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சூர்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு கிளம்பிய சூர்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சூர்யாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் […]

Categories
சினிமா

OMG: இளம் நடிகர் புற்றுநோயால் மரணம்…. பெரும் சோகம்….. இரங்கல்…..!!!!

அண்மையில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட செலோஷோ (தி லாஸ்ட் ஷோ)என்ற திரைப்படத்தில் நடித்த 15 வயது சிறுவன் ராகுல் கோலி புற்றுநோயால் காலமானார்.குஜராத்தி மொழியிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ஆறு சிறுவர்களில் ஒருவராக மனு என்ற கதாபாத்திரத்தில் ராகுல் நடித்துள்ளார். இவர் பல நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரை உலகிர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து.இவர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 11ஆம் தேதி […]

Categories
சினிமா

BIGGBOSS வீட்டுக்குள் மோதல் Start…. கதறி அழுத பிரபல நடிகை….. வைரலாகும் வீடியோ…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதுவரை அதில் 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அண்மையில் ஆறாவது சீசன் தொடங்கியது. மிக பிரம்மாண்டமாக 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். பத்து பெண் போட்டியாளர்கள், ஒன்பது ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் உள்ளே சென்றுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்த இரண்டாவது நாளே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது பிக் […]

Categories
மாநில செய்திகள்

“சூழ்ச்சியை உடைத்து, ராஜாங்கம் நடத்து” முதல்வரை வாழ்த்திய கவிஞர் வைரமுத்து…. எதற்காக தெரியுமா….?

திமுக கட்சியின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் சுமூகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கட்சியின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை அவருடைய வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் வைரமுத்து பகிர்ந்துள்ளார். அதோடு முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி ஒரு கவிதையையும் பதிவு செய்துள்ளார். அதில் திமுக […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி….. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா…..? வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவில் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி பணியில் இருந்தவர்கள் மற்றும் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்ச 6 மாதங்கள் பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும். இந்த போனஸ் கண்க்கிடுவதற்கு அதிகபட்ச தொகையாக ரூபாய் 7000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி மாநில அரசில் உற்பத்தி சம்பந்தப்பட்ட போனஸ் பெறாத […]

Categories
தேசிய செய்திகள்

தன்னாட்சி அதிகாரம் பெற விரும்பும் கல்லூரிகளுக்கு…. யுஜிசி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி உயர் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்க கல்லூரிகளுக்கு புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தன்னாட்சி அதிகாரத்தை பெற விரும்பும் கல்லூரிகள் இனி நேரடியாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு கல்லூரி குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும். அதன் பிறகு என்பிஏ கமிட்டியின் ஏ சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இதனையடுத்து தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் புதிய படிப்புகளை […]

Categories
மாநில செய்திகள்

இதை பற்றி மட்டும்தான் பேசணும்…. ஓபிஎஸ் குறித்து யாரும் பேசக்கூடாது?…. இபிஎஸ் கட்டளை….!!!!!

வருகிற 17ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கலந்துகொள்ள இருக்கிறது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், ஓபிஎஸ் குறித்தும் எதுவும் பேசக்கூடாது என்று இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உட்க்கட்சி விவகாரம், நீதிமன்ற வழக்குகளை கையாளுவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வருகிற 17 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்ற நிலைக்குழு இந்தி திணிப்பு…. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த வைகோ….!!!!

ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை தொடர்பாக வைகோ கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்துத்துவ சக்திகள் கூப்பாடு போட்டு வருகின்றனர். இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, ஒரே மொழி அது சமஸ்கிருதம் (அல்லது) இந்தி மொழி என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு, கட்டாயமாக திணிக்க முனைந்திருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது ஆகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அரசியலமைப்புச் […]

Categories
தேசிய செய்திகள்

தாய் நாட்டிற்காக போராடிய நாய்…. குண்டடி பட்டும் தீவிரவாதிகளுடன் மோதல்….‌ குவியும் பாராட்டு…..!!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆனந்தநாத் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தீவிரவாதிகளை தேடும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தில் கடுமையான முறையில் பயிற்சி பெற்ற ஜூம் எனும் நாய் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டிற்குள் நுழைந்தது. அந்த நாயை பார்த்து அதிர்ச்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருங்கிணைப்பாளர் நான் தான்…! என்னிடம் கேட்கனும்…. சபாநாயகருக்கு ஓபிஎஸ் 2ஆவது முறையாக கடிதம்…. அதிர்ச்சியில் ஈபிஎஸ் தரப்பு..!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் 2ஆவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையிலும் கடிதம் அளித்திருந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு 2ஆவது முறையாக கடிதம் எழுதினார். அதாவது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததை சுட்டிக்காட்டி இந்த கடிதமானது எழுதப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வில் கட்சி சார்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. பிரபல கல்லூரி. ” கேண்டீனில் 2 மாணவிகள் மோதல்”…. வைரலாகும் வீடியோ….!!!!!

 கல்லூரி மாணவிகள் 2 பேர்  மோதிக் கொண்ட  காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடகா  மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில்  தயானந்த சாகர் என்ற பொறியியல்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் அமைந்துள்ள கேண்டீனில் நேற்று மாணவர்கள் சாப்பிட வந்துள்ளனர். அப்போது திடீரென 2  மாணவிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவி மறறொரு மாணவியின் கன்னத்தில் அடித்துள்ளார். இதனையடுத்து அடி வாங்கிய மாணவி பதிலுக்கு பலமுறை அந்த மாணவி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!…. இனி ரயில்களில் குளு குளு தான்….. பலே பிளான் போட்ட CMRL…..!!!!

சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகரில் உள்ள பகுதிகளை இணைக்க கூடிய வகையில் Suburan எனப்படும் புறநகர் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி, சென்னை கடற்கரை முதல் தாம்பரம், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு ,சென்னை மூர் மார்க்கெட் முதல் கும்மிடிப்பூண்டி, சென்னை மூர் மார்க்கெட் முதல் திருவள்ளுவர் ஆகிய வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றில் கடற்கரை […]

Categories
மாநில செய்திகள்

அடேய் என்னடா இது!…. ஒரு ரூம்ல 2 டாய்லெட் விவகாரம்….. சிப்காட் திட்ட அலுவலர் விளக்கம்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு ரூ.1,80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக திட்ட அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து இந்த அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகையுடன் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா, பொறியாளர் கார்த்திக், உள்ளாட்சி அமைப்பு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஓ இவர்தான் சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி அடுத்த மாதம்  பதவி ஏற்கிறார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் உள்ளார். இவர்  அடுத்த மாதம் 8-ஆம் தேதி  பணி நிறைவு பெறுகிறார். இந்நிலையில் ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதேபோல் யு.யு லலித் அடுத்த மூத்த தலைமை நீதிபதியாக நியமிக்க டி.ஒய். சந்திரகுட் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிளாமர் லுக்குக்கு ஷிப்ட் ஆன நடிகை கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. ஃபயர் விடும் ரசிகர்கள்…!!!!!

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். 2000 வருடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2013 ஆம் வருடத்தில் கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இதனை அடுத்து தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி […]

Categories
மாநில செய்திகள்

இது மட்டும்தான் திமுக-வின் கொள்கை…. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி ஸ்பீச்…..!!!!

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது ” “தாங்கள் வலுவாக இருப்பதை பார்த்து பயம் கொண்டதால், அதிமுக உடைந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க பொதுக் குழுவில் முதல்வர், மேளத்திற்கு இருபக்கமும் அடி என்பதுபோல தனது நிலைமை இருக்கிறது என பேசினார். இதுவரையிலும் எந்த முதல்வரும், எந்த காலகட்டத்திலும் பேசாததை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“யப்பா.. எல்லா பேப்பர்லையும் வந்துட்டு…. ரொம்ப குசும்பு புடிச்சவுங்களா இருக்காங்களே …!!

மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பெருந்தலைவர் காமராஜரும் மக்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டிருக்கிறார். நம்ம தலைவர் பொன்மன தலைவன் புரட்சித்தலைவன் சரித்திர நாயகன் அவரும் உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதே மாதிரி நம்ம அம்மா உணவகம் கொண்டு வரும்போது உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் நம்ம முதலமைச்சர் சாப்பிட்டார் பாருங்க… இந்தா இருக்காங்க பாருங்க ஊடகங்கள்… மதுரைக்காரங்களே குசும்புக்காரர்கள்…  அதோட நம்ம மீடியாக்கள் ரொம்ப குசும்பு பண்ணுவாங்க, நம்மகிட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : என்னிடம் ஆலோசிக்க வேண்டும்….. சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவாக இருந்தாலும் தன்னை கலந்து  ஆலோசிக்க வேண்டும் என ஓபிஎஸ் அதில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையில் கடிதம் அளித்திருந்தார்.. இந்த நிலையில் சபாநாயகருக்கு  இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவை 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில் ஓபிஎஸ் கடிதம் […]

Categories
கிருஷ்ணகிரி திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ 18 வசூலித்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ்….. “ரூ 2,10,000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்..!!

சென்னை மயிலாப்பூர் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸுக்கு ரூ 2,10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் கடந்த 18. 08 2013 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் இயங்கி வரும் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸில் ஒரு உள்ளாடை வாங்கி உள்ளார். இந்த உள்ளாடை மதிப்பு 260. ஆனால் 278 ரூபாய் வசூல் செய்துள்ளது ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ். இதையடுத்து அவர் வீட்டுக்கு சென்றதற்குப் பின் கூடுதல் வசூல் செய்திருப்பதாக அந்த நிறுவனத்திடம் புகார் செய்துள்ளார். அந்த நிறுவனமும் அவருக்கு மீதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகளை வீட்டில் விட்டு சென்ற தாய்….. விளையாடிய சிறுமிக்கு நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டியில் ஓட்டுனரான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜீவபிரீத்தி(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் வேலைக்கு சென்ற பிறகு உடல் நலம் சரியில்லாத சரஸ்வதி அவரது தாயுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் ஜீவபிரீத்தி தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு சிறுமி சேலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

120 அடி ஆழமுடைய கிணறு….. அபயகுரல் எழுப்பிய 10-ஆம் வகுப்பு மாணவி….. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

கிணற்றுள் தவறி விழுந்த சிறுமியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பாளையத்தில் விவசாயியான மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுமிதா(15) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி பெருந்துறையில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மதுமிதா வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் கிணற்றுக்கு சென்று மின் மோட்டாரை இயக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக கால் தவறி 120 அடி ஆழமுடைய கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 10 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம்: 2025 ஆம் ஆண்டு இவ்வளவு கோடி உயருமா?…. வெளியான தகவல்…!!!

இந்தியாவில் விண்வெளி சூழலியல் மேம்பாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மீது கவனம் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய விண்வெளி பொருளாதாரத்தில் தனியார் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் மத்திய அரசின் நேரமறையான திட்டங்களின் காரணமாக இந்தியாவின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு 9.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம், 2025 ஆம் ஆண்டு 12.8 மில்லியன் டாலராக உயரும் என்று […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்தவ வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க கோரிய மனு…. நான்கு வாரங்களுக்குள்…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பொள்ளாச்சியை சேர்ந்த கால்நடை மருத்துவர் விஜயன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கிறிஸ்துவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து 1993ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது எனவும், முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த உத்தரவு பிறவிக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்துக்கு அனுப்பி மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து உரிய ஆதாரங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு முறையிட்ட […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: கோவில் பெயரில் தனிநபர் இணையதளம் – முடக்க உத்தரவு …!!

60ம் கல்யாணத்திற்கு பிரசித்தி பெற்றதற்ற  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் பெயரில் தனிநபர் இணையதளத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பவர் தான் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினை இன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு என்பது நீதிபதி மகாதேவன் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தமிழகத்திலே  மிகவும் பிரசிதி பெற்ற கோவில.  […]

Categories
மாநில செய்திகள்

சம்பா சாகுபடி பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் 2,25,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள்ளாக ஒட்டுமொத்த சம்பா சாகுபடி செய்து முடிக்க நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலமாக இந்த சம்பா சாகுபடி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் பாதிப்பின் காரணமாக சம்பாசாகுபடி பாதிக்கப்பட்டால் விவசாயிகள் உரிய இழப்பீடு பெறுவதற்காக ஏற்றவாறு பிரதம மந்திரி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்கள் உணர்வுகளை வியாபார நோக்கில் அணுகுவதா? நீதிபதி கேள்வி …!!

மக்களின் உணர்வுகளை வியாபார நோக்கத்தில் அணுக கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியிருக்கிறார்கள். கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவது குற்றம் என்றும்,  தனிநபரில் நடத்தும் இணையதளங்கள் உடனடியாக முதுக்கப்படுவதை இந்து சமய அறநிலைத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற  நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். கோவில் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவதை எதிர்த்து ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: மத்திய அரசுக்கு தமிழக அரசு திடீர் கடிதம் …!!

விவசாயிகளிடம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. 22 சதவீத வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து மத்திய அரசின் உணவு பொருள் வழங்கல் துறைச் செயலாளருக்கு, தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த பெற்றோர்…. 3 சிறுவர்களின் சடலம் மீட்பு…. பரபரப்பு சம்பவம்….!!#

தண்ணீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய நந்த கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்த கிஷோரும் அதே பகுதியில் வசிக்கும் சிபினேஷ்(10), ராகவன்(10) ஆகிய சிறுவர்களுடன் தாமரை குட்டை என்ற இடத்திற்கு சைக்கிளில் சென்று கல்குவாரி குட்டையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் மூன்று சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆதார் கார்டு எடுத்து வருகிறேன்” கல்லூரி மாணவி மாயம்….. போலீஸ் வலைவீச்சு….!!!

காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஏமாகவுண்டனூர் சேக்கன்துறை பகுதியில் தர்மேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷினி(19) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வர்ஷினிக்கு காரைக்குடியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த பெற்றோர் வர்ஷினியை கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஆதார் கார்டு எடுத்து வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

புனேவை சேர்ந்த தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்தினுடைய உரிமத்தினை இந்திய ரிசர்வ் வங்கியானது ரத்துசெய்து இருக்கிறது. வங்கியில் கடன் வழங்குவதற்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்ட வாய்ப்புகள் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. இதன் எதிரொலியாக நேற்று முதல் தி சேவாவிகாஸ் கூட்டுறவு வங்கி தன் வணிகத்தை நிறுத்துகிறது. வங்கி சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படையில், டெபாசிட் காப்பீடு மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனிடம் இருந்து (டிஐசிஜிசி) 99 % […]

Categories
தேசிய செய்திகள்

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள்… 4-வது பட்டியல் மத்திய அரசிடம் ஒப்படைப்பு….!!!!

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்களின் விபரங்கள் அடங்கிய 4வது பட்டியலை சுவிட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் வழங்கி இருக்கிறது. சுவிட்சா்லாந்திலுள்ள வங்கிகள், தங்களின் வாடிக்கையாளா்களது பணத்துக்கும் ரகசிய விபரங்களுக்கும் அதிகளவிலான பாதுகாப்பு அளிப்பதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் பணத்தை அங்கு சேமித்து வைத்து இருக்கின்றனர். இதற்கிடையில் சில செல்வந்தா்கள் வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத முறையில் ஈட்டிய பணத்தை கருப்புப் பணமாக சேமித்துவைக்க சுவிஸ் வங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். சுவிஸ் வங்கிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல!… 5 பயங்கரவாதக் குழுக்கள்…. வெறும் 10 நாட்களில்…. காவல்துறை அதிரடி…..!!!!

பஞ்சாப் காவல் துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில் சென்ற 10 தினங்களில் மட்டும் 5 பயங்கரவாதக் குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அவர்களிடம் இருந்து 4 ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் என 25 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பஞ்சாப் காவல் துறை எடுத்து வருவதாக ஐஜிபி சுக்செயின் சிங் கில் தெரிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா லக்ஷிமியின் அம்மு படம்… வெளியான டிரைலர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!!

மலையாள‌ திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. அவர் நடிப்பில் வெளியான மாய நதி, வரதன், காணக்கானணே போன்ற மலையாள திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தமிழில் ஆக்சன், ஜகமே தந்திரம், கார்க்கி போன்ற படங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளார். அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. இந்த  சூழலில் தெலுங்கில் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல்” ஆளும் கட்சி எம்எல்ஏ அதிரடி கைது….. பெரும் பரபரப்பு….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரி ஆக பார்த்தா சட்டர்ஜி (69) என்பவர் இருக்கிறார். இவர் மாநில கல்வித்துறையின் மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். முந்தைய காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஹைகோர்ட் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையின் போது சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: கேரளாவில் தமிழக பெண் நரபலி; போலீஸ் விசாரணையின் திடுக் தகவல் …!!

கேரளாவில் தமிழக பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கொச்சியில் வசித்து வந்த பத்மா மற்றும் காலடியைச் சேர்ந்த ரொஸாலி ஆகியோரை லைலா தம்பதி நரபலி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இரண்டு பேரையும் ஏமாற்றி அழைத்து வந்த தரகரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கொச்சியில் வசித்த பத்மாவுடன் தமிழ்நாட்டில் உள்ள அவரது உறவினர்கள் பேச முயன்ற போது தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பத்மாவுடன் தொடர்பு கொள்ள முடியாதது குறித்து கேரள போலீசுக்கு அவரது உறவினர்கள் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. தீபாவளி போனஸ் எவ்வளவு தெரியுமா ?….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாசம் 31 ஆம் தேதி பணியில் இருந்தவர்கள், கடந்த நிதி ஆண்டில் குறைந்த பட்சம் […]

Categories
மாநில செய்திகள்

வாடகை தாய் முறை என்றால் என்ன….? இதற்கு சட்டம் சொல்லும் விதிமுறைகள் என்னென்ன…..? இதோ சில தகவல்கள்….!!!!

பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாராவும்-விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றடுத்துள்ளனர். இவர்களுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக நயன் மற்றும் விக்கிக்கு திருமணம் நடந்த நிலையில் நான்கு மாதத்தில் எப்படி குழந்தை என பல்வேறு தரப்பினும் கேள்வி எழுப்பி வருவதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது. வாடகை தாய் மூலமாக குழந்தையை பெற்றெடுத்தார்களா இல்லையெனில் தத்தெடுத்துள்ளார்களா என்ற சந்தேகம் தான் தற்போது வலுத்துள்ளது. இந்நிலையில் வாடகை தாய் என்றால் என்ன […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் மின்னல் வேட்டை”….. இரண்டே நாட்களில் இவ்வளவு கைதா?…. ரவுடிகளுக்கு செக் வைத்த போலீசார்….!!!!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க கூடிய வகையில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க டிஜேபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்‌. இதற்கு ”ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்திற்குள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ள ரவுடிகளுக்கு குறி […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம்…. உள்ளே சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் அழுகிப்போன நிலையில் ஆறு பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கடுமையாக நாற்றம் வீசுகிறது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் அதோடு ஒத்துப்போனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரையில் EPS எனும் புயல்…! தானாக கூடிய கூட்டம்… மெய்சிலிர்த்து போன செல்லூர் ராஜீ …!!

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ராஜன் செல்லப்பா அற்புதமாக உரை நிகழ்த்தினார். எங்கள் ஆட்சியில் என்னென்ன செய்தோம் ? என்னென்ன திட்டங்களை முதலமைச்சர் கொடுத்தார் ? வரும்போது எல்லாம் ஒரு திட்டங்களோடு வருவார். ஒன்று தொடங்கி வைப்பார், ஒன்று திறந்து வைப்பார் என்று அழகாக சொன்னார். எடப்பாடி எனும் புயல் மதுரையிலே மையம் கொண்டிருக்கிறது என்று ஆர்.பி உதயகுமார் சொன்னார். இது மக்கள் எழுச்சி. மக்களுடைய உணர்வுகளை காண்பிக்கின்ற கூட்டம். இது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முடிவடைந்த பணி….. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டம்…. அமைச்சர் தகவல்.!!

வண்டலூர் – கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நான்கு இடங்களாக பிரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியூருக்கு பேருந்துகள் செல்லக்கூடிய நிலை இருக்கிறது. அதேபோல நாளுக்கு நாள் சென்னையில் மக்கள் போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு வெளியூர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் அதிகரித்துக் வரக்கூடிய காரணத்தால் […]

Categories

Tech |