மூதாட்டியிடருந்து தங்க சங்கிலியைப் பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மூப்பனூர் பகுதியில் சண்முகம்-சுப்பையாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த பத்தாம் தேதி மூதாட்டி 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் கலிங்கியத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். பின்னர் அவர்கள் முதட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலி பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். […]