Categories
உலக செய்திகள்

“மக்கள் இனி புதிதாக வாங்கிய கை துப்பாக்கிகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியாது”…? கன்னட பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

மக்கள் இனி புதிதாக வாங்கிய கை துப்பாக்கிகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியாது என கன்னட பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனடாவில் கைதுப்பாக்கிகளின் விற்பனை வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதற்காகவும் இது உடனடியாக அமல்படுத்தப்படும் என அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடா நாடாளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதம் மேற்கொண்டு வருகின்றனர். புதிய கை துப்பாக்கி முடக்கம் ஒரு உடனடி […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் ஆன 2 மாதங்களில்… குளியல் அறையில் புதுமண டாக்டர் தம்பதி மர்ம மரணம்…. காரணம் என்ன…?

தெலுங்கானாவில் குளியலறையில் புதுமண தம்பதியினர் மர்மமான உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் காதர் பாக் என்னும் பகுதியில் சையது நிசாருதீன் (26), உம்மி மொகிமீன் சைமா (22) என்னும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சையது சூரியா பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார் அவரது மனைவி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvNZ : ஆரம்பமே அதிரடி…. “ஆலன்- கான்வே அபாரம்”…. 201ஐ சேஸ் செய்யுமா ஆஸி.?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 200 ரன்களை குவித்துள்ளது.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் […]

Categories
தேசிய செய்திகள்

பஸ்சும்,லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 15 பேர் பலி… உ.பி முதல் மந்திரி இழப்பீடு அறிவிப்பு…!!!!

மத்திய பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி என்னும் பகுதி அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும் லாரியும் எதிரெதிரே மோதி கொண்டது. இந்த விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர் மேலும் 40 பேர் காயமடைந்து இருக்கின்றனர். அவர்களில் 20 பேர் உத்திரப்பிரதேசத்தில் பிரக்யா ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

தெரு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் சோனியா என்னும் ஐந்து வயது சிறுமி தெருவில் வந்து கொண்டிருந்தபோது சுமார் ஆறு தெரு நாய்கள் சிறுமியை தாக்கியுள்ளது. கூலித்தொழிலாளியான அவரது தந்தை வேலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சிறுமி  தனியாக இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறுமி பெடியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அதன் பின் அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் சிறுமி சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் வைத்திருப்போருக்கு புது வசதி அறிமுகம்…. அதுவும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்?… வெளியான சூப்பர் தகவல்…..!!!!

ஆதார் வழங்கக்கூடிய அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) அவ்வப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பொதுமக்களின் வசதிக்கேற்க ISRO உடனான ஒப்பந்தத்தின்கீழ் புவன் ஆதார் போர்ட்டலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக ஆதார் பயனாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை எளிதாகக் கண்டறியலாம். இந்த புது அம்சத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். இதன் சிறப்பம்சம் என்னவெனில், பயனாளர்கள் ஆதார் மையத்தின் தகவலை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். ஆதார்சேவை மையத்தின் இருப்பிடத்தினை கண்டறிவது […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்… 16% மக்கள் உணவு பாதுகாப்பின்மை நெருக்கடி… உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்…!!!!!

பாகிஸ்தானில் 16 சதவிகிதம் மக்கள் உணவு பாதுகாப்பு நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக உணவு மற்றும் வேளாண் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் முதல் பெய்துவரும் கனமழையின் காரணமாக பல்வேறு நகரங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் நிவாரண முகாம்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இது தவிர தோல் நோய், மலேரியா பல்வேறு வியாதி தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“தாய் மொழி கண், மற்ற மொழிகள் கண்ணாடி”… நிறைய மொழி பேசத் தெரிஞ்சா நல்லது தானே…. வெங்கையா நாயுடு பளீச்…!!!!

இந்திய ஒளிபரப்பு கூட்டமைப்பின் செய்திகளின் எதிர்காலம் என்ற கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பில் 65 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய சக்தியின் கூட்டமைப்பு ஆகும். ஊடகங்கள் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும். தாய்மொழி வளர்ச்சி தவிர பிற மொழிகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும். தாய்மொழி என்பது கண் போன்றது. […]

Categories
உலக செய்திகள்

“மக்கள் மீது அமெரிக்க ஏவுகணை பயன்படுத்தி தாக்குதல்”…? 4 பேர் பலி… ரஷ்யா குற்றச்சாட்டு..!!!!!

ரஷ்ய பொதுமக்கள் மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது எட்டு மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படையெடுப்பின்போது டொனட்ஸ்க், லூகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா போன்ற நான்கு பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா அவற்றை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது அந்த நாட்டு அதிபர் புதின் அறிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

மாருதி சுஸுகி ஆலை வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்…. அச்சத்தில் தவிக்கும் தொழிலாளர்களுக்கு அட்வைஸ்….!!!!

ஐஎம்டி மானேசரிலுள்ள மாருதி சுஸுகி ஆலையின் வளாகத்தில் சிறுத்தை ஒன்று காணப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவா் நேற்று தெரிவித்தாா். இதனையடுத்து வனத்துறை குழுவினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். எனினும் சிறுத்தையை வளாகத்திற்குள் மற்றும் வெளியே கண்டுபிடிக்க முடியவில்லை என மூத்த வன அதிகாரி தெரிவித்தாா். கடந்த புதன்கிழமை காலை 7:20 மணியளவில் வளாகத்திற்குள் சிறுத்தை உள்ளதை பாா்த்து ஒரு தொழிலாளி எச்சரிக்கை எழுப்பியதை சிசிடிவி கேமராக்கள் வாயிலாக காவல்துறையினர் கண்டறிந்தனா். அதன்பின் மாருதி நிா்வாகம் தொழிலாளா்களுக்கும், மற்றவா்களுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிம் உடையில் பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்…. செம வைரல்….!!!

ஐஸ்வர்யா மேனன் ஜிம் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம்ரவி. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் கணினி தமிழ் விருது”…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசு முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப உலகம் முழுவதும் கணினி மொழி தமிழ் வழி பரவ செய்யும் வகையில், கணினி தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருட்களை உருவாக்குபவர்களை ஊக்கப்படுத்துவதற்காக விருது வழங்கப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பித்தவர்கள் பட்டியல் பரிசீலனையில் இருக்கிறது. அதன் பிறகு தற்போது கடந்த 2021-ம் ஆண்டுக்கான கூடுதல் விண்ணப்பங்களும், நடப்பாண்டில் தனியார் நிறுவனத்திடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு செம!… ஓடிடியில் ரிலீசாகும் பொன்னியின் செல்வன்…. எப்போது தெரியுமா….?

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுவரை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 470 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பல திரையரங்கில் இந்த படம் ஓடிக் கொண்டிருப்பதால் இந்த படத்தின் வசூல் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. திடீர் நிலச்சரிவு….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் சாமோல் மாவட்டம் தரலி பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மீது பாசறைகள் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பீந்தர் பள்ளதாக்கில் உள்ள பைங்கர் கிராமத்தில் நேற்று மற்றும் இன்று இரவு ஒரு மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது என்று தரலி துணை பிரிவு நீதிபதி ரவீந்திர குமார் ஜீவந்த தெரிவித்துள்ளார் க்ஷ

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. தமிழக துணைவேந்தர் பதவி 50 கோடிக்கு விற்பனை…. முன்னாள் ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

பஞ்சாப் மாநில லூதியாணாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமித்தது தொடர்பாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் முதல்வர் பகவந்த் மானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசியல் சட்டம் தன் கையில் உள்ளது என்றும் தனக்கு யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதனை […]

Categories
தேசிய செய்திகள்

மாசு இல்லா தீபாவளி பிரசாரம்: 51,000 தீபங்களை ஏற்றிய அரசு…. வெளியான தகவல்….!!!!

மாசு இல்லா தீபாவளிக்கான பிரசாரத்தை துவங்கும் அடிப்படையில், தில்லி அரசானது நேற்று கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்களை ஏற்றியது. சென்ற 2 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் அனைத்து வித பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை முழுமையான தடையை தில்லி அரசு செப்டம்பா் மாதம் மீண்டும் விதித்தது. தில்லியில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை ஜெயில் தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: 10 லட்சம் பேருக்கு அரசு வேலை…. மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்த இந்திய பிரதமர்…..!!!!!

மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை வருடத்தில் 10 லட்சம் நபர்களுக்கு பணிநியமனம் வழங்கும் மாபெரும் திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி இன்று துவங்கி வைத்தார். அத்துடன் தொடக்க நிகழ்ச்சியின் போது 75,000 நபர்களுக்கு பணி நியமன கடிதங்களானது வழங்கப்பட இருக்கிறது. வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பிரதமர் பங்கேற்று, அரசு வேலை வாய்ப்புப் பெற்றவர்களிடையே உரையாற்றி வருகிறார். சென்னையில் இத்திட்டத்தின் கீழ்  அரசுப் பணியில் இணைந்தவர்கள், அயனாவரத்திலுள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து காணொலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர்.சியின் ”காபி வித் காதல்”…. கவனம் ஈர்க்கும் பாடல் ரிலீஸ்…. நீங்களே பாருங்க….!!!

காப்பி வித் காதல் படத்தின் புதிய பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காபி வித் காதல்”. இந்த படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா, ரைசா, ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ‘மாற்றம்’ […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸை வாட்ஸ் அப்பில் சேமிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!!

பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆர்சி புத்தகம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆயுள் காப்பீட்டு சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப்பில் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. அதாவது உங்கள் மொபைல் போனில் +91-9013151515 என்ற எண்ணை சேமித்து வைத்து டிஜி லாக்கர் என்று டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும். தற்போது உங்கள் டிஜி லாக்கர் கணக்கை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம் போட்டு காண்பித்த தாத்தா” சிறுமிகள் கூறிய அதிர்ச்சி தகவல்….. விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிய சம்பவம்….!!!

முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாத்தாவும், அதே பகுதியில் வசிக்கும் திருமண புரோகரான பழனிசாமி(65) என்பவரும் ஒன்றாக அமர்ந்து டிவியில் படம் பார்ப்பது வழக்கம். தனது தாத்தாவோடு சிறுமி அடிக்கடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்ற டிவி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்…. புதுமண தம்பதி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!

திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கேஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி ஜெய்சங்கருக்கும் தாய் மாமன் மகளான சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினர் தேனிலவுக்காக குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானலுக்கு சென்று விட்டு கடந்த 14-ஆம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கராத்தே மாஸ்டரிடம் ரூ.21 3/4 லட்சம் மோசடி… நண்பர்கள் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கராத்தே மாஸ்டரிடம் 21 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சாரதா மில் ரோட்டில் கராத்தே மாஸ்டரான சௌகத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக தனது வீட்டை 3 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்து கடன் பெற முடிவு செய்தார். அப்போது சௌக்கத்துக்கு அறிமுகமான நாகூர் மீரான் என்பவர் வங்கியில் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் 3 கோடி […]

Categories
மாநில செய்திகள்

“இளம் விதவைகளை உருவாக்கிறீங்க” அட்லீஸ்ட் மூணு நாளுக்காவது அத மூடுங்க‌….. பொங்கி எழுந்த வானதி சீனிவாசன்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குஜராத் சமாஜத்தில் மோடியின் மகள் என்ற திட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தின்படி 5 வயது முதல் 12 வயது வரை உள்ள தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்‌‌. அவர் பேசியதாவது, கல்வி கற்ற மற்றும் திறமை வாய்ந்த குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!!!

தொழிலாளியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் இருக்கும் பழக்கடையில் குப்புசாமி என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் பிறந்த குப்புசாமியின் உடலை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் அருண்குமார் என்பவருடன் குப்புசாமி மது அருந்தியது தெரியவந்தது. இதனால் அருண்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

10 வருஷத்துக்கு முன் காணாமல்போன பெண்ணை…. கண்டுபிடித்த போலீசார்…. நடந்தது என்ன?…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!!!

திருவனந்தபுரம் மாவட்டம் நல்லிகோடு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயது பெண் சென்ற 2012ஆம் வருடம் மேமாதம் 6-ம் தேதி காணாமல் போனார். இதனால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. அதன்பின் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடிவந்தனர். எனினும் அப்பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையில் அண்மையில் கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுத்து கொல்லப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலதிபரிடம் 1 3/4 கோடி ரூபாய் மோசடி…. தம்பதி மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை…!!!

தொழிலதிபரிடம் 1 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் பசந்த் சோனி என்பவர் ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த மனோகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மனோகரனும், பசந்த் சோனியும் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலதிபர் மனோகரனை தொடர்பு கொண்டு தனக்கு ஜவுளி அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். அதன் முன்பணமாக பல்வேறு தவணைகளாக 1 கோடியே 86 லட்சத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து…. விபத்தில் சிக்கி 10 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரிமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சின்னேரிபாளையம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10 பயணிகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பொது இடங்களில் இதை செய்யக்கூடாது” அதிகாரிகளின் அதனுடைய நடவடிக்கை….!!!

பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், பூபதி, சங்கரன் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொது இடங்களில் புகைபிடித்த குற்றத்திற்காக பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனை அடுத்து புகை பிடித்தல் தடை செய்யப்பட்ட பகுதி என்று பதாகைகள் வைக்காத வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடமிருந்தும் அதிகாரிகள் அபராதம் வசூல் செய்தனர். இவ்வாறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள் வானிலை

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தாழ்வான பகுதியில் தேங்கிய மழை நீர்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடையநல்லூர், ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருவம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மலையின் தாழ்வான பகுதியில் குளம் போல தேங்கி நின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு…. என்னென்னு தெரியுமா?…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

ரேஷன்கார்டு பயனாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகளானது பலவித சலுகைகளை அறிவிக்கிறது. அண்மையில் மத்திய அரசானது இலவச ரேஷன் எனும் திட்டத்தினை டிசம்பர் மாதம் வரையிலும் நீட்டித்தது. இதையடுத்து மாநில அரசுகளும் ரேஷன் பயனாளர்களுக்கு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பலவித அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் உத்தரபிரதேசம் அரசு, ரேஷன் பயனாளர்களுக்கு தீபாவளிபரிசு வழங்கி இருக்கிறது. தீபாவளியையொட்டி ரேஷன் பயனாளர்களுக்கு இனிப்புகள் தயாரிக்க அரசு சலுகை விலையில் சர்க்கரை வழங்க இருக்கிறது. அம்மாநிலத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் விநியோகமானது […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்தபடியே ஆதார் கார்டை சரிபார்ப்பது எப்படி?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார்அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஏனெனில் அனைத்து முக்கிய பணிகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ஆதார்கார்டை அடிக்கடி ​​இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் தரவுத் தளத்திலிருந்து சரிபார்க்கப்பட வேண்டும். அப்போது தரவுத் தளத்திலுள்ள தகவல்களுடன் உங்களது ஆதார்கார்டு விபரங்கள் பொருந்துகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். ஆதார்கார்டு வாயிலாக பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெறுகிறது. இது போன்ற மோசடி குற்றங்களை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் […]

Categories
சினிமா

“வெறும் உளவாளியா அசாதாரண உளவாளியா?”…. சர்தார் திரை விமர்சனம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்….. குடிகாரர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்…. மாநில அரசு அதிரடி….!!!!

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு மதுபான பொருட்கள் விற்பது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் பீகார் அரசு ஒரு புதுமையான முயற்சியை கையில் எடுத்து உள்ளது. அதாவது அங்கு மது அருந்து சிக்குபவர்களின் வீட்டில் வாசலில் ஒரு போஸ்டரை போலீசார் ஒட்டுகின்றனர். அந்த போஸ்டரில் முதல் முறையாக பிடிபட்டால் அபராதம் செலுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து மீண்டும் மது அருந்தி பிடிப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 52,000 வீடுகளில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் படத்தை எந்த ஓடிடி நிறுவனத்துக்கும் விற்பதில்லை” காரணம் இதுதான்?…. லெஜண்ட் சரவணன் எடுத்த அதிரடி முடிவு….!!!!

தன் கடையின் விளம்பரங்களில் நடித்து அதிகம் பாப்புலரான லெஜண்ட் சரவணன் சோலோ ஹிரோவாக அறிமுகமாகிய திரைப்படம் “தி லெஜண்ட்”. பாலிவுட் ஹீரோயின், ஹரிஷ் ஜெயராஜ் இசை, விவேக் உள்ளிட்ட பல்வேறு பெரிய நடிகர்கள் இருக்கும் நட்சத்திர பட்டாளம் வைத்து அவரே அப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆன போதே அதிகம் ட்ரோல்களை சந்தித்தது. அத்துடன் படம் ஓடிடியில் வெளியானால் இன்னும் அதிகம் ட்ரோல்க்ளை சந்திக்கலாம் என்பதால், இப்போது லெஜண்ட் சரவணன் ஒரு அதிரடி முடிவெடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SK, கார்த்தி படங்கள் வெளிவந்த நிலையிலும் மாஸ் காட்டும் பொன்னின் செல்வன்….. மரண மாஸ் தகவல்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர்ஜ இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியே பெற்று உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை மட்டும் ரூ.465 கோடி கடந்து வசூல் செய்து வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று இரு முன்னணி நட்சத்திரம் படங்கள் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடிக்கும் […]

Categories
Uncategorized

“இவர் முந்தைய சீசன் போட்டியாளரை காப்பி அடிக்கிறார்”….. அசீம் பரபரப்பு குற்றசாட்டு….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவராக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராங்க் டாஸ்க் பெயரில் பல போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்ட விஷயம் பரபரப்பை கிளப்பியது. அசிம் போட்டியாளரை வாடி போடி என கூறியது பதிலடிக்கு ஆயிஷா செருப்பை கழட்டி […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கூடுதல் கட்டணம்…. உங்கள் பணம் உங்களுக்கே…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கியுள்ளனர். பேருந்து, ரயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டது. ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. பண்டிகை கால கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில தனியார் ஆப்ரேட்டர்கள் இஷ்டத்திற்கு வசூலிக்கப்படுகிறார்கள். இதனை போக்குவரத்து துறையை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தமிழக முழுதும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எத்தனை கோடி கொடுத்தாலும் அது மட்டும் முடியாது”….. சரவணா ஸ்டோர் அண்ணாச்சி திடீர் முடிவு?… சோகத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் தி லெஜன்ட் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள். ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் மாடலான நடிகை ஊர்வசி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சரவணன் அருள் தான் தயாரித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி பெரிதாக எடுபடவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஷி கண்ணாவின் ரசிகர்களின் மனதை ஈர்க்கும்…. கியூட் PHOTO….!!!!

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தொடர்ந்து அடங்கமறு, அயோக்கியா, சங்கத் தமிழன், துக்ளக், தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ராஷிகண்ணா லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.  

Categories
சினிமா தமிழ் சினிமா

“நல்ல கருத்து பெருசா ஜெயிக்கும்”…. சர்தார் மற்றும் பிரின்ஸ் திரைப்படத்திற்கு…. வாழ்த்து தெரிவித்த சூர்யா….!!!

“சர்தார்” மற்றும் “பிரின்ஸ்” திரைப்படகுழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகாத தீபாவளியாக அமைந்துவிட்டது. சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படமும் கார்த்தியின் “சர்தார்” திரைப்படம் வெளியாக இருக்கின்றன. டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களுக்குப் பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கின்றது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்….. “பொன்னியன் செல்வன்” திரைப்படத்தில்…. ராட்சச மாமனே பாடல்…. வீடியோ செம வைரல்….!!!

“பொன்னியன் செல்வன்” திரைப்படத்திலிருந்து “ராட்சசன் மாமனை” பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.  கல்கியின் வரலாற்றை புதியதாக “பொன்னியன் செல்வன்” திரைப்படமாக இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் இந்த திரைப்படம் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. அதற்கான […]

Categories
சினிமா

அம்மாடியோ! கழுத்தில் 3 கிலோ நகையுடன் நடிகர் நகுலின் மனைவி…. வெளியான புகைப்படம்…. வாயடைத்து போகும் பெண்கள்….!!!!

பொதுவாக பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் பிரியம் உண்டு. வித விதமான நகைகளை அணிய வேண்டும் என அவர்களுக்கு எப்போதும் ஆசை இருக்கும். இதனால் பெண்கள் போட்டி போட்டு நகைகளும் வாங்குவார்கள். இந்நிலையில் நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி தனது கழுத்தில் 3 கிலோ தங்கத்தில் செய்த நெக்லேஸ் ஒன்றை அணிந்து இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வடிவத்தில் அந்த நெக்லேஸ் இடம்பெற்றுள்ளது. அந்த போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும், பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த படம் தான் எல்லாத்தையும் கொடுத்தது”…. தனுஷ் சாருக்கு நன்றி…. தெரிவித்த விக்னேஷ் சிவன்….!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. இந்த திரைப்படம் வெளியாகி 7 வருடங்களான நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளார். நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகளாகின்றது என்றும் சொல்லலாம். நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருவருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு…. படப்பிடிப்பு தளத்தில் காயம்…. பதற்றத்தில் ரசிகர்கள்….!!!

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு “வீரம்” ரீமேக் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்துள்ளார். இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. இந்தத் திரைப்படத்தின் தோல்வியினால் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு ஹிந்தி படங்களில் நடித்து வந்த பூஜா ஹெட்டேவுக்கு தெலுங்கில் வெற்றி பெற்ற அல வைக்குந்தபுரமுலோ திருப்புமுனையாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மை போன்ற பாடல்கள் தேசிய அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. NO அபராதம்…. மாநில அரசு அசத்தல அறிவிப்பு….!!!

வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறூருக்கு கடுமையான அவதாரத்தை விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவருக்கு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி வாகனத்தை இயக்குவதற்கு, தலை கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு என அனைத்து குற்றங்களுக்கும் அபதாரம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கிலி கூறியது, தீபாவளி பண்டிகை முன்னிட்டு 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து குஜராத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து…. முதலில் வெளியேறும் போட்டியாளர் யார்?…. வெளியான தகவல்….!!!!

விஜய் டிவி-யில் பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாக ஆரம்பித்ததிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு சீரியல்கள் வேறு நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். 100 நாள்கள் ஓடக்கூடிய இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவற்றில் யார் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். இப்போது போட்டியாளர்கள் இடையில் பல பிரச்சனைகள், சண்டைகள் எழும்பி வருகிறது. இதற்கிடையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்…. முடிவுக்கு வரப்போகுதா?…. சோகத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சின்னத் திரையில் மிகவும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் சன் டி.வி. இதில் காலை முதல் இரவு வரை ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக சில தொடர்கள் 1000, 2000 எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் சிலர் சீரியல்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்துள்ளனர். இதனிடையில் சந்திரலேகா சீரியல் பல ஆண்டுகளாக ஓடுகிறது. இப்போது சன் டி.வி-யில் டிஆர்பியில் டாப்பில் இருந்துவந்த ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சோகசெய்தி வந்துள்ளது. அதாவது, இந்த தொடர் விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: பெண் போட்டியாளரை அலெக்கா தூக்கிய அசல் கோளார்…. லீக்கான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!!

பிக்பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம்சுளிக்க வைத்திருக்கிறது. மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என அடுத்தடுத்து பல்வேறு பெண்களிடம் மோசமான வகையில் அசல் கோளார் நடந்துகொள்கிறார். இதனை பார்த்து வரும் ரசிகர்கள் பல பேரும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். 😳😳 Kolaaruuu #Asalkolaar #GPMuthuArmy #GPMuthu #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/neKeZMMh7G — Dr Kutty Siva (@drkuttysiva) October 22, 2022 இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “ரயில் டிக்கெட் புக் செய்த பிறகும் இந்த வசதியை மாற்றிக் கொள்ளலாம்”…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்கின்றனர். சென்னை, டெல்லி உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து பயணம் மேற்கொள்பவர்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயிலில் முன்பே பதிவு செய்து வைத்து பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு முன் பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் புறப்படும் இடத்தை தேர்வு செய்து வைத்திருக்கின்றார்கள் ஆனால் தற்போது சூழல் வேறாக இருக்கும். அதனால் நீங்கள் புறப்படும் இடத்தை மாற்ற வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட பயணிகள் ரயில் புறப்படுவதற்கு […]

Categories

Tech |