Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvSL : தொடக்கம் சொதப்பல்….. “பிலிப்ஸ் அதிரடி சதம் 104″….. இலங்கைக்கு சவாலான இலக்கு..!!

இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 167 ரன்கள் குவித்தது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மர்ம நபர்களின் தாக்குதல்”…. அமைச்சர் ரோஜாவின் கணவர் வீட்டில் இப்படி ஒரு சம்பவமா…..? பெரும் பரபரப்பு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் ஆர்.கே செல்வமணி. இவர் புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகையும், ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருக்கும் ரோஜாவின் கணவரும் கூட. சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் ஆர்.கே. செல்வமணி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய காரை வீட்டில் விட்டுவிட்டு வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த சில மர்ம நபர்கள் கல்லை எடுத்து காரின் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து […]

Categories
மாநில செய்திகள்

மனநல காப்பகத்தில் மலர்ந்து காதல் ஜோடிக்கு திருமணம்… “அமைச்சர் வழங்கிய கல்யாண பரிசு”…? மகிழ்ச்சியில் மணமக்கள்…!!!!!

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பணி நியமன ஆணையை வழங்கி மணமக்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார். கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில்  சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த மகேந்திரனுக்கும், வேலூரைச் சேர்ந்த தீபாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கீழ்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் நேற்று இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. மனநல காப்பகத்திற்கு வெளியே உள்ள கோவிலில் மருத்துவம் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

நான்சி பெலோசியின் கணவரை சுத்தியலால் தாக்கிய மர்ம நபர்… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

நான்சி பெலோசியின் கணவரை தாக்கிய சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் ஆன நான்சி பெலோசி கடந்த சில மாதங்களுக்கு முன் தைவானுக்கு பயணம் மேற்கொண்டு சீனாவின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். நான்சி பெலோசியின் வீடு சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து நான்சி கணவர் பால்பெலோசி சுத்தியலால் கை, கால்கள் தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்ப […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை மது கடைகள் மூடல்…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தி முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஏங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும் மது கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபான விற்பனை, மதுபானங்களை கடத்தல்,அவற்றைப் பதுக்கி வைத்தல் போன்றவற்றை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

பாஸ்போர்ட் விவகாரம்… இலங்கை மந்திரி மீது விசாரணை… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

இலங்கை மந்திரியான டயானா கேமேஜ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராக இருப்பினும் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எம் பி ஆவதை தடை செய்வதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டயானா காமெேஜுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில் அதனை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் டயானா கேமேஜ் எப்படி இலங்கை பாஸ்போர்ட் பெற்றார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நெடுஞ்சாலையில் நிர்வாணமாக… திடீரென ஒரு சித்தர்….. என்ன நடக்கிறது?…. அதிர்ச்சி சம்பவம்….!!!

கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் சுப்பிரமணி என்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் சுற்றி வந்துள்ளார்.அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் அவரை நெடுஞ்சாலை சித்தர் என்ற பெயரில் சாமியாராக மாற்றி கொட்டகை அமைத்து தங்க வைத்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் உடம்பில் ஒட்டு துணிவும் இல்லாமல் நிர்வாணமாக உடல் முழுவதும் விபூதியை பூசி அவரை சித்தர் என பொதுமக்கள் நம்ப வைத்துள்ளனர். அதனை நம்பி அவரை வழிபட பொதுமக்கள் பலர் அங்கு சென்று குவிக்கின்றனர். அவர்களிடம் அந்த நபர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“அதே ரயில், ஆனா இப்போ வேற மாடு”…. மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரிலிருந்து குஜராத்தின் காந்தி நகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது.வகையில் இன்று காலை குஜராத் அதுல் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இந்த ரயில் மீது மாடு மோதி விபத்துக்குள்ளானது. அதில் ரயில் இன்ஜினின் முன் பகுதி சிறிது சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் பதினைந்து நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதன் மூலமாக இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரியல் ஹீரோவுக்கு ஹேப்பி பர்த்டே”…. தலைவரிடம் ஆசி வாங்கிய நடிகர் ராகவா….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் நடிகர், இயக்குனர் மற்றும் நடன மாஸ்டர் என பன்முகத் திறமை கொண்டவர். அதோடு ஆதரவற்றவர்களுக்காக தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சந்திரமுகி 2, ருத்ரன், துர்கா மற்றும் அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தன்னுடைய 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். […]

Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை வழக்கு…. “பலப்படுத்தி 152 அடிக்கு தேக்குவதே நோக்கம்”….. தமிழக அரசு ஐகோர்ட் மதுரை கிளையில் பதில்..!!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்துள்ளது. தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது எனவும், இரண்டாம் சுரங்க பாதை அமைப்பதால் அணையின் கொள்ளளவை தற்போதுள்ள நிலையிலிருந்து 152 அடிக்கு உயர்த்த முடியாது என தங்களுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது. எந்த வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்துள்ளது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செயல்படாத தனியார் தொழிற்சாலை…. அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!!

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான டையிங் தொழிற்சாலை அமைந்துள்ளது. நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் தொழிற்சாலையில் உள்ள காலி இடத்திலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

படபிடிப்பை பார்க்க சென்ற போது…. பள்ளி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஓடும் வேனில் ஏறும் போது தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் பழனி பாலாறு-பெருந்தலாறு அணை பகுதியில் தனியார் நிறுவனத்தின் குறும்பட படப்பிடிப்பு நடைபெற்றதால் ரமேஷ் தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளான். இந்நிலையில் பாலசமுத்திரம் சாலையில் நடந்து சென்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி பட்டாசு வெடித்த வாலிபர்…. என்ன காரணம்….?? பரபரப்பு சம்பவம்….!!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் சிறுமலை செட் பகுதியில் கையில் பையுடன் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். மாலை 6.30 மணிக்கு திடீரென அந்த வாலிபர் செல்போன் அந்த பையில் இருந்து அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள், பட்டாசுகள் மற்றும் கோரிக்கை மனுவை கையில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் இருந்து செல்போன் கோபுரத்தின் மீது ஏறி உச்சிக்கு சென்றார். இதனை அடுத்து கட்சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போராடி காதலனை கரம் பிடித்த ஆசிரியை…. தாலியை கழற்றி கொடுமைப்படுத்திய மாமியார்…. பரபரப்பு சம்பவம்…!!!

போராடி காதலனை கரம் பிடித்த ஆசிரியையின் தாலியை கழற்றி மாமியார் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியையான கல்பனா(40) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக கல்பனாவும் பக்கத்து தெருவில் வசிக்கும் ஜெகன்(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஜெகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெகன் கல்பனாவை திருமணம் செய்து கொள்ள மறுத்து தெரிவித்தார். இதுகுறித்து கல்பனா விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நம்பி மாணவியை விட்டு சென்ற சித்தி…. நள்ளிரவில் அத்துமீறிய வாலிபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(30) என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பெற்றோரை இழந்து சித்தி வீட்டில் வசித்து வந்த 17 வயதுடைய 12 ஆம் வகுப்பு மாணவியுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர பணிக்கு சென்றதால் மாணவியின் சித்தி அவரை கார்த்திக்கின் அக்கா வீட்டில் விட்டு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“திருக்குர்ஆனை தண்ணீரில் வீசிய முஸ்லிம் நபர்”…. இரவோடு இரவாக தட்டி தூக்கிய போலீஸ்….. பரபரப்பு….!!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் கோஜ் வாடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இர்ஷாத் அகமது‌ மிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் முஸ்லிம் மதத்தின் புனித நூலாக கருதப்படும் திருக்குர்ஆனை தண்ணீரில் தூக்கி வீசியுள்ளார். இந்த தகவல் வெளியான உடனே சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யும்படி காஷ்மீர் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரவோடு இரவாக இர்ஷாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இர்ஷாதுக்கு சற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! தளபதி விஜய் செய்த காரியம்…. நெகிழ்ந்து போன இலங்கை ரசிகர்….. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்த, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், குஷ்பூ, மீனா மற்றும் சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதே நாளில் தல அஜித் […]

Categories
தேசிய செய்திகள்

கிரயோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி… இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்…!!!!!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரயோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள இஸ்ரோ மையத்தில் எல் வி எம் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எஞ்சின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு சி 20 பிரயோஜெனிக் என்ஜின் சோதனை 28 வினாடிகள் நடைபெற்றுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த கிரையோஜெனிக் எஞ்சின் உதவியுடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூப்பர் சூர்யா..! எல்லோரும் பாராட்டுங்கள்….. ஆனாலும் இந்திய அணியில் மாற்றம் தேவை…. என்ன சொல்கிறார் கபில் தேவ்..!!

நெதர்லாந்திற்கு எதிராக வெற்றி பெற்றாலும் ரோஹித் சர்மா தலைமையிலான அணி சில அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், சூர்யகுமாரை பாராட்டியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பேசினார்.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்றுவரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியை வீழ்த்தி குரூப் 2 பிரிவில் புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றி […]

Categories
உலக செய்திகள்

சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசு…? ஈரான் அமைப்பிற்கு பிரபல நாடு பொருளாதார தடை…!!!!!!

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி சாத்தானின் கவிதைகள் எனும் நூலை எழுதியதற்காக அச்சுறுத்தலுக்கு இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மீது ஒருவர் கொலை வெறி தாக்குதலின் நடத்தியுள்ளார். அதில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்துள்ளார் அதன் பின் ஒரு கையின் செயல்பாட்டை இழந்துள்ளார். இதற்கிடையே சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசாக அளிக்கப்படும் இனம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்…. பல மாதங்களாக அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது பல்லவராயநத்தம் காலனியில் வசிக்கும் கூலி தொழிலாளியான நாகராஜ்(24) என்பவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து அதனை காண்பித்து சிறுமியை மிரட்டியுள்ளார். இதனை அடுத்து நாகராஜ் பல மாதங்களாக  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2 கடைகளை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பானிபூரி கடைக்கு சென்று வந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் காரிமங்கலத்தில் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றபோது அவருக்கும் விக்னேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது கடந்த மாதம் 8- ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு..!!

இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 போட்டிகள் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கந்த சஷ்டி திருவிழா…. சுவாமி ஜெயந்திநாதருக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது. மூன்றாம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு விஸ்வரூப திபாராதனையும் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனை அடுத்து காலையில் சுவாமிக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும் காட்டப்பட்டது. இதனை அடுத்து ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேகமும் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முருக பெருமானும் வள்ளி தெய்வானையும் வெள்ளி சக்கரத்தில் […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்…. பொங்கல் விழாவிற்காக…. ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்கள்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் விழா நடைபெறுவதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 19ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை அடுத்து அம்மனுக்கு காலையிலும் மாலையிலும் சிறப்பு […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரிய மாரியம்மன் கோவிலில்…. கும்பாபிஷேக விழா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் பைராபாளையம் பகுதியில் செல்வகணபதி, பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 26 ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமமும் நவகிரக ஹோமமும் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கப்பட்டது. இதனை அடுத்து பகலில் காவிரி ஆற்றுக்கு சென்ற புனித நீர் எடுத்து வந்து பின்னர் மாலையில் மாவிளக்கு […]

Categories
உலக செய்திகள்

“சூரியன் சிரிக்கும் வினோத புகைப்படம்”…? நாசா விளக்கம்…!!!!!

நாசாவின் சன் ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டு இருக்கின்ற ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம்பெற்று இருக்கிறது. இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி நமது சூரியன் சிரிப்பது போல காட்சி அளித்துள்ளது. அதாவது இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல தோன்றுகிறது எப்போதும் கண் சிமிட்டுகின்றது. மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற துளையை உருவாக்குகின்றது. இந்த நிலையில் புற […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கரன்சி நோட்டுகள்…. இந்திய ரிசர்வ் வங்கிக்கு என்ன பங்கு?…. இதோ சில தகவல்கள்….!!!!!!

ஆம் ஆத்மி கட்சி அண்மையில் இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமி-கணேஷ் படம் அச்சிடப்பட வேண்டும் எனும் கோரிக்கையை எழுப்பிருந்தது. கரன்சி நோட்டுகளில் லட்சுமிதேவி மற்றும் கணேஷின் படத்தை அச்சடித்தால் நாட்டில் செழிப்பு ஏற்படுமென ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இக்கோரிக்கையை பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளது. அதுமட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலைக் கருதி ஆம் ஆத்மி கட்சி மதக் கோரிக்கையை எழுப்புகிறது என எதிர்க் கட்சிகள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இன்று நாங்கள் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

18 வகையான பொருட்களால் அபிஷேகம்…. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை… ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காளியம்மன் கோவில், லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், வலையபட்டி காளியம்மன் கோவில், கீழ ராஜகுலராமன் காளியம்மன் கோவில், காளவாசல் காளியம்மன் கோவில், மாதாங்கோவில்பட்டி காளியம்மன் கோவில், முத்துசாமிபுரம் காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

புகழ்பெற்ற முருகன் கோவில்…. கந்த சஷ்டி விழா நிகழ்ச்சிகள்…. சிறப்பு ஏற்பாடு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி வேலுமணி நகரில் புகழ்பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகம் பெருமாள் கோவில் இருக்கிறது. நாளை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை மதியம் 1 மணிக்கு மகா குமார யாகம், சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை […]

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

மகாமாரியம்மன் கோவில்…. மண்டல நிறைவு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவள்ர்மங்கலம் பகுதியில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்ற பிறகு தொடர்ந்து 48 நாட்களாக மண்டல பூஜை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு மண்டல அபிஷேக பூர்த்தி நவசக்தி அர்ச்சனை மற்றும் மகா சந்தியாகம் நடைபெற்றது. முன்னதாக சுவாசினி, பைரவர் பலி தானங்கள், வடுகபூஜை, தீபாராதனை, கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பனிமூட்டத்தால் நடந்த விபத்து…. சர்க்கரை ஆலை முன்னாள் மேலாளர் பலி; மனைவி படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் ஆனந்தகுமார்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சர்க்கரை ஆலையில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சாந்தி(64) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தென்சங்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கரையாஞ்செட்டிபாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் திலீப் வழக்கு….. காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலில் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் 8 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதனை தொடந்து இந்த வழக்கு விசாரணையில் 112 பேரின்  வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் 300 க்கும் மேற்பட்ட கூடுதல் ஆதாரங்களும் சேகரிக்கப்பது. இவை இரண்டையும் சேர்த்து 1000 பக்கம் கொண்ட துணை குற்றப் பத்திரிக்கையை குற்றப்பிரிவு போலீசார் தயாரித்துள்ளது. இந்த தொடர் விசாரணை அறிக்கையை நிராகரிக்க திலிப்பும் அவரது நண்பரும் எர்ணாகுளம் முதன்மை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

விதிமுறையை மீறிய 6 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கோவை- பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆர்.எஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறி சிகரெட் விற்பனை செய்த 6 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் 1200 ரூபாய் அபராதம் விதித்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்காக நிர்வாகத்தை ஒப்படைத்த நிதி நிறுவன அதிபர்…. 59 லட்சம் ரூபாய் கையாடல்…. போலீஸ் விசாரணை…!!!

59 லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமியார் புதூரில் செல்வ பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷுக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் திருமண வேலைகளை கவனிப்பதற்காக 4 மாதங்கள் ஊழியர்களிடம் நிதி நிறுவன நிர்வாகத்தை பிரகாஷ் ஒப்படைத்தார். இதனை அடுத்து செல்வ பிரகாஷ் கொடுக்கல்- வாங்கல் கணக்குகளை சரிபார்த்த […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பழனி முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்….. வெளியான அறிவிப்பு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கடந்த 25-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. இது குறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை கந்தசஷ்டி விழாவில் சுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெற உள்ளது. இதனை அடுத்து மதியம் 12 மணிக்கு உச்சிக்கால […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே உஷார்!…. “ஆன்லைன் பிஎச்.டி படிப்புகள் செல்லாது”…. யுஜிசி திடீர் உத்தரவு….!!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஆன்லைன் எனபடும்‌ இணைய வழி மூலம் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 17%, தொலைதூர கல்வி முறையில் படிபவர்கள் எண்ணிக்கை 40% அதிகரித்து உள்ளது. ஆன்லைன் கல்வி முறையில் கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி 5 மாநிலங்களும், தொலைதூர கல்வி முறையில் டெல்லி, மகாராஷ்டிரா‌, தமிழகம், குஜராத், மேற்கு வங்கம் முன்னிலையில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாடும் முழுவதும் 66 உயர்கல்வி நிறுவனங்களின் 136 இளநிலை படிப்புகளும், 236 முதல்நிலைப் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்: வட்டி விகிதம் பற்றி உங்களுக்கு தெரியுமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

தபால் அலுவலக சேமிப்புத்திட்டத்தில் குறைவான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்ட இயலும். போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்தால் வீட்டில் இருந்தபடியே  நல்ல லாபத்தை ஈட்டலாம். அரசாங்கம் வட்டிவிகிதத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறது. அஞ்சல் அலுவலகங்கள், மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, தபால் அலுவலக மாதாந்திர வருமானக்கணக்கு போன்றவற்றில் 2 மற்றும் 3 வருட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, இவற்றில் வருமானவரி விலக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமான் தலைமைச் செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு….. சிறப்பு புலனாய்வு குழு கிடுகிடுபிடி விசாரணை….!!!!

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திரன் நரேன் பதவி காலத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்களை தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அவர்களின் சிலருக்கு பாலில் ஆதாயத்திற்கு பதிலாக வேலையும் வழங்கி உள்ளார். இது குறித்து 21 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர்.எஸ். ரிஷி ஆகியோர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் கடந்த 1-ந் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 20ஆம் தேதி தொடங்க வேண்டியது.. ஆனால் வங்க கடலில் உருவான ‘சிட்ரங்’ புயலின் காரணமாக வடக்கு திசையை நோக்கி காற்றின் நகர்வு இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை சற்றே தாமதமாக 29ஆம் தேதி இன்று தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி […]

Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளை விட்டு காதலனுடன் சென்ற பெண்…. திடீரென போலீசில் ஆஜர்…. பெரும் பரபரப்பு….!!!

சாம்ராஜ்நகர் மாவட்டம் சிவன சமுத்திரா கிராமத்தில் முனீர் அகமது என்பவர் வாசித்து வருகிறார். இவரது மனைவி தபசம்(26). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. வியாபாரியான அகமது அடிக்கடி வெளியூர் சென்று விடுவார் என்று கூறப்படுகிறது இந்நிலையில். தபசமுக்கு அதே பகுதியை சேர்ந்த அப்ரார் என்ற வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாச அனுபவித்து வந்தனர். இதனை அறிந்த முனீர் இருவரையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK-வோடு கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று, கை நீட்டி குறை சொல்லக்கூடாது – உஷாராக இருக்கும் தோழமைகள்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தரசன் அவர்கள், தோழமைக் கட்சியை சார்ந்தவர்கள், பல நேரங்களில் எங்களுடைய துறை சார்ந்து ஏதாவது ஒரு விஷயம் வந்தால் அவர்களிடம் இருந்து தான் எங்களிடம் சொல்வார்கள். தோழமைக் கட்சி எப்படி இருக்கிறது என்று பாருங்கள் ? ஏதோ எங்களிடம் வந்து கூட்டணிக்காக, தேர்தலுக்காக அல்ல.  கொள்கைகளுக்காக இருக்ககூடிய தலைவர்கள் தான் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!… பெண்ணை உயிருடன் முழுசாக விழுங்கிய மலைப்பாம்பு…‌. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ வைரல்…..!!!!

இந்தோனேஷியாவில் உள்ள ஜாம்பி மாகாணத்தில் 52 வயது நிரம்பிய ஒரு பெண் ஒருவர் ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்தப் பெண் வேலைக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அந்த பெண்மணியின் உறவினர்கள் அவரை தேடி ரப்பர் தோட்டத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் அங்கு படுத்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்துள்ளனர். அப்போது காணாமல் போன […]

Categories
தேசிய செய்திகள்

“இலவசங்களை ஒழுங்குபடுத்த தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது”….. காங்கிரஸ் திடீர் கடிதம்….!!!!

தேர்தல் வாக்காளர்களை கவர இலவசங்களை தருவதாக சில அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதாகவும், இந்த இலவச கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் பேசியிருந்தார். இது பற்றி விவாதம் நடத்துவது அவசியம் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இலவச வழங்கும் வாக்குறுதிகளை ஒழுங்குபடுத்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து கருத்து தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே ஆண்டில் 7…. விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஜிம்பாப்வே வீரர் ராசா..!!

ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன் தினம் நடந்த சூப்பர் 12 லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாறு சாதனை படைத்தது. இந்த வெற்றியால் 2 போட்டிகளில் 3 புள்ளிகளை பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. அதேசமயம் இரண்டு போட்டிகளிலுமே […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. சட்டப்பேரவை தேர்தல் கழகம்…. கோடிகளில் புரளும் 5 வேட்பாளர்….. இதோ ஸ்வாரசியமான தகவல்….!!!!

இமாச்சல மாநிலத்தில் முதல்வர் ஜெயராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12ஆம் தேதி சட்டசபை தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அங்கு வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்டது‌. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் வரிந்து கட்டி வருகிறது. 740 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாள் செய்துள்ளனர். சிறிய மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் இருந்தாலும், இங்கு கோடிகளில் புரல்கிற வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது தேர்தல் அரசியல் களத்தை அதிர […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென தீப்பிடித்து எறிந்த விமானம்… காரணம் என்ன…? விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி உத்தரவு…!!!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சென்ற இண்டிகோ விமானம் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் இறக்கை திடீரென தீப்பிடித்து எறிந்ததால் டெல்லி விமான நிலையத்திலேயே விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் எஞ்சினில் உள்ள ஒரு பகுதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு 177 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் பந்த்: அவருக்கு எதுவுமே தெரியாது…. பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்பீச்….!!!!

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது குறித்து அம்மாவட்டத்தில் வருகிற திங்கட்கிழமை பா.ஜ.க சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடை விதிக்க கோரி கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவ்வழக்கில் எதிர்மனுதரராக தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை சேர்க்கப்பட்டிருந்த சூழ்நிலையில், நீதிமன்ற விசாரணையின்போது அந்த அழைப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை என்று அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வழக்கறிஞரும் பா.ஜ.க மாநில துணைத் […]

Categories

Tech |