Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூளை பூசாரி தோட்டத்தில் கட்டிட காண்ட்ராக்டரான மகேந்திரன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் தகர கொட்டகையில் கட்டிட வேலைக்கு தேவையான பொருட்களை வைத்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் தகர கொட்டகையின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமான இந்திரங்களை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“துணிவு” திரைப்படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்….. யார் தெரியுமா…..? வெளியான சூப்பர் தகவல்….!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முடித்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த தகவலை ஜிப்ரான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING : 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி… அரையிறுதியில் இங்கிலாந்து…. வெளியேறிய ஆஸ்திரேலியா.!!

இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்று உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒத்திவைப்பு…. NEXT PLAN என்ன?…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இது குறித்து வழக்கு விசாரணை நேற்று உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களில் தவிர தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றி சுவருடன் கூடிய […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான கேரம் போட்டி…. குரும்பப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் தேர்வு…. குவியும் பாராட்டுகள்…!!!

கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் இரட்டையர் பிரிவில் குரும்பப்பட்டி அரசு உயர்நிலைபள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் ச.மகாலட்சுமி, 8- ஆம் வகுப்பு படிக்கும் ம.ஹர்ஷினிபிரியா ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தனர். இந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்…. 122 கிலோ பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் அதிரடி கைது….!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் 122 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரின் உத்தரவின் அடிப்படையில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களின் விற்பனையை தடுக்க ஜெயஹிந்த்புரம் சப்-இன்ஸ்பெக்டர் சக்திமணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது 2 பைகளில் பாக்கு, புகையிலை போன்ற போதை பொருட்கள் இருந்தது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை…. கட்டு கட்டாக சிக்கிய பணம்…. பரபரப்பு சம்பவம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 6:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர்பால் தலைமையிலான போலீசார் இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேஜைக்குள் கட்டு கட்டாக இருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த ஆம்னி பேருந்து…. டிரைவர் உள்பட 13 பேர் காயம்…. நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்….!!

மினிவேன் மற்றும் ஆம்னி பேருந்து கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழி சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்த மினிவேன் ஒன்று திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்நிலையில் மினிவேனுக்கு பின்னால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தும் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து டிரைவர் கணேசன் மற்றும் பயணிகள் 12 பேர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆங்காங்கே ஒழுகிய மழைநீர்…. பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணித்த பொதுமக்கள்…. வைரலாகும் காட்சிகள்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு பேருந்து வில்லிவலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் பயணிகள் தண்ணீர் உள்ளே வராமல் இருக்க பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடிகளை மூடினர். ஆனால் பேருந்தின் மேற்கூரையில் ஓட்டை இருந்ததால் அதன் வழியாக மழை நீர் ஒழுகி பயணிகள் மீது விழுந்தது. இதனால் சிலர் கைகளில் இருந்த குடைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு வில்லனாகும் வடிவேலு…. எந்த படத்தில் தெரியுமா….? புதிய தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

தமிழ் மொழியில் ரிலீசான என் ராஜாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைகைப்புயல் வடிவேலு. கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடிகட்டி பறக்கிறார். நடிகர் வடிவேலுவின் காமெடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியாகவே இருக்கும். அதன் பிறகு இணையதளத்திலும் நடிகர் வடிவேலுவின் டயலாக்கை தான் மீம்ஸ்களாக போட்டு தெறிக்க விடுவார்கள். நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் மாமன்னன் போன்ற திரைப்படங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் ஜெயித்தால்?… 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. தேர்தல் வாக்குறுதிகள் வெளியிட்ட முக்கிய கட்சி…..!!!!

இமாசலப்பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிம்லாவிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இமாசலப்பிரதேசத்தில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் 10 வாக்குறுதிகளை மாநில மக்களுக்கு அறிவித்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாத உதவித் தொகை என்பது உட்பட 10 வாக்குறுதிகள் அதில் இணைக்கப்பட்டுள்ளது. ஆளும் பா.ஜ.க அரசு, மாநில மக்களின் வாழ்க்கையை மிக மோசமாக மாற்றிவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 5 வருடங்களுக்கு முன் பா.ஜ.க-வுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“எலான் மஸ்க்கை எதிா்தரப்பாக இணைக்கக் கோரிய விண்ணப்பம்”…. தில்லி உயர்நிதிமன்றம் நிராகரிப்பு…..!!!!!

டிம்பிள் கௌல் என்ற டுவிட்டா் பயனாளா் தன் பக்கத்தில் வரலாறு, இலக்கியம், அரசியல், தொல்லியல் உள்ளிட்ட கல்விசாா்ந்த தகவல்களைப் பதிவிட்டு வந்தாா். இதையடுத்து டுவிட்டரின் விதிகளை மீறியதாகக் கூறி டிம்பிள் கௌலின் கணக்கு முடக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிம்பிள் கௌல் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். இவ்விவகாரத்தில் டுவிட்டா் நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட்டு இருப்பதாக தன் மனுவில் அவா் குற்றம்சாட்டினாா். கணக்கை முடக்குவதற்கு முன் தன் தரப்பு வாதத்தைக் கேட்க டுவிட்டா் நிறுவனம் கால அவகாசம் […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா…. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன….???

வடகிழக்கு பருவமழை 29ஆம் தேதி தொடங்கியது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில், நவம்பர் 9ஆம் தேதி இலங்கையை ஒட்டியிருக்க தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது வருகின்ற 10, 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. மத்திய அரசு அதிரடி முடிவு…. அமைச்சர் முருகன் வெளியிட்ட மாஸ் தகவல்….!!!

மத்திய அமைச்சர் எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரி வருகை புரிந்துள்ளார். நேற்று மதியம் 12 மணிக்கு அரியூர் வெங்கடாசலம் மருத்துவம் கல்லூரியில் பிரதமர் கனவு திட்டம் குறித்து கலந்த ஆலோசனை செய்தார். அப்போது Modi @ 20 Dreams Meet Delivery என்ற புத்தக கருத்துரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]

Categories
ஆன்மிகம் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோதாம்பட்டியில் இருக்கும் வெற்றி விநாயகர் கோவிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனையடுத்து கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், புனித தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. நேற்று காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோபுரத்தின் மீது உள்ள விநாயகர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் கரூர் மாவட்ட செய்திகள்

ஐப்பசி மாத ஏகாதசியை முன்னிட்டு…. சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கோம்புபாளையம் பகுதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதம் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு இளநீர், சந்தனம், தயிர், பால், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
தேசிய செய்திகள்

வரும் 7 ஆம் தேதி முதல்…. அதிகரிக்கும் பயணிகளின் வாகன விலை…. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு…..!!!!

வாகனத் தயாரிப்பில் முன்னணியிலுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தன் பயணிகள் வாகன விலையை வருகிற 7ம் தேதி முதல் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது பயணிகள் வாகன விலையில் 0.9 % என்ற அளவில் இருக்கலாம் எனவும் கார்களின் மாடல்களைப் பொறுத்து அது மாறுபடும் எனவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. முன்பே அதிகரித்து இருக்கும் உள்ளீட்டுச் செலவினங்களை இந்நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இப்போது ஒட்டுமொத்த உற்பத்திசெலவும் கடுமையாக அதிகரித்து இருப்பதால், இந்த குறைந்தபட்ச விலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா படத்தின் வெற்றி”…. புகழ்ந்து தள்ளும் மத்திய மந்திரிகள்.‌…. நடிகர் ரிஷப் செட்டிக்கு அடித்த ஜாக்பாட் அழைப்பு…..!!!!!

கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தென் இந்திய மொழிகளிலும் படம் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது 305 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ளார். இப்படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதமாக  காந்தாரா அமைந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை – டாஸ்மாக் நிறுவனம் விளக்கம்..!!

டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கண்ணாடிக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும், மது பாட்டில்களை சுத்தம் செய்யும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் டாஸ்மாக் […]

Categories
சினிமா

திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் இப்படியா?…. ரவீந்தருக்கு ஆப்பு வைத்த மகாலட்சுமி…. வைரலாகும் பதிவு….!!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் இருவரும் பதில் அளித்தனர். இதனிடையே கடந்த வாரம் ரவீந்தருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அண்மையில் தல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜயின் “வாரிசு”….. புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு…. இணையத்தில் செம ட்ரெண்டிங்….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வம்சி தற்போது தளபதி விஜயை  வைத்து வாரிசு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க சமீபத்தில் ரஞ்சிதமே என்ற பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஞ்சிதமே […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவ மழையால் 26 பேர் பலி…. 4 லட்சம் நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் வடகிழக்கு பருவமழையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இறந்த நபர்களின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் நிவாரணம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை உடனே கை விடுங்கள்…. எச்சரிக்கை விடுத்த சீன ஜனாதிபதி….!!!

உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை ரஷ்யா மொத்தமாக கைவிட வேண்டும் என நேரடி எச்சரிக்கை விடுத்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz-ஐ கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி திரும்ப பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும். இதனை அடுத்து அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தலை எதிர்க்க வேண்டும் என […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா…?? 4 நாட்கள் சிறப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.1.2023 என்ற தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களும், 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களும், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளும் வகையில் வருகிற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்கண்ட தேதிகளில் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டின் மீது எந்த ஒரு அணு ஆயுத தாக்குதல் நடந்தாலோ…. அதோடு கிம் ஜாங் உன் ஆட்சி முடிவுக்கு வரும்…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!!!

வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் கிம் ஜாங் உன்னின் இறுதியாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியை கண்டிக்கும் வகையில், வட கொரியா இந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரிய கடல் பகுதியில் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் ஜப்பான் கடல் பகுதியில் ஏவப்பட்டுள்ள ஏவுகணைக்கு  பயந்து, ஒரு கட்டத்தில் அந்நாட்டு மக்கள் தங்கள் வீடு மற்றும் மற்றும் நிலத்தடி பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மழைக்காக விடுமுறை கேட்ட பள்ளி மாணவன்…. ட்விட்டர் மூலம் பதில் அளித்த கலெக்டர்…. என்ன தெரியுமா…???

விருதுநகர் மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருக்கும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்த மாநில அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் இரவு 10.10 மணிக்கு சிவகங்கை சேர்ந்த ஒரு மாணவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியின் ட்விட்டர் பக்கத்தில் சார் சிவகாசியில் மாலை முதல் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை மகாதீபம்…. தமிழகம் முழுவதும் 2,692 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக 2692 சிறப்பு பேருந்துகள் மூலம் 6500 நடைகள் இயக்கப்பட உள்ளன.மகா தீபத்தன்று பரணி தீபம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கலந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல்  பகுதியில் வருகின்ற 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்றும் இதனால் தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பள்ளி மாணவன் பலி; தம்பதி படுகாயம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அப்புகொட்டாய் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனுஷ் பண்ணந்தூரிலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது சிவபாரத் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனர்களே! சைபர் தாக்குதலை தவிர்க்கணுமா?… அப்போ உடனே இதை செய்து முடிங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!

இணையம் பாதுகாப்பு வல்லுநர்கள் வாட்ஸ் அப் பயனாளர்கள் செயலியில் வழங்கப்பட்டுள்ள சிறந்த பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதை உறுதிசெய்யும்படி எச்சரித்து இருக்கின்றனர். அவ்வாறு செய்யத்தவறினால் பயனாளர்கள் மோசடிக்காரர்களால் இலக்காக்கப்படுவர். இதற்கான பல்வேறு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையில்லை எனவும் இதற்குரிய தீர்வு வாட்ஸ்அப்பிலேயே இருக்கிறது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களது முக்கிய செட்டிங்க்ஸில் ஒரு செட்டிங் ஆக்டிவ்வாக இருப்பதை நீங்கள் கண்டிப்பாக உறுதிசெய்ய வேண்டும். அவை டூ-ஸ்டெப் வெரிபிகேஷன் ஆகும். இதன் வாயிலாக ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் (அ) […]

Categories
ஆட்டோ மொபைல்

புதுசா கார் வாங்க போறீங்களா?…. கம்மி விலையில் வாங்க அட்டகாசமான ஆஃபர்…. இதோ பாருங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நவம்பர் மாதத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாதத்தில் மாருதி சுசுகி ஆல்டோ கே 10 கார் வாங்கினால் 57 ஆயிரம் வரை உங்களால் சேமிக்க முடியும். அதில் 35 ஆயிரம் ரொக்க தள்ளுபடியும், கார்ப்பரேட் போனஸ் 7000 ரூபாய் மற்றும் எக்சேஞ்ச் போனஸ் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் மாருதி சுசுகி செலிரியோ கார் வாங்கினால் 56 ஆயிரம் ரூபாய் வரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு 142 ரன்கள் இலக்கு…. கட்டுப்படுத்துமா இலங்கை?…. அரையிறுதிக்கு செல்லுமா ஆஸி?

சூப்பர் 12 கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இலங்கை  டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதி வருகிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்று உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலை துண்டிக்கப்பட்டு ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் அருகே சென்னசந்திரம் ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இடத்தில் கொலை நடந்ததற்கான தடயம் கிடைக்கவில்லை. எனவே வேறு எங்காவது அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு உடலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அசால்டாக உலா வரும் கரடி…. புதர்களில் பதுங்கியிருக்க வாய்ப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜிகினியில் நந்தனவனா லேஅவுட் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி சாதாரணமாக அங்கும் இங்கும் உலா வந்தது. இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் கரடியின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து புதர்களுக்குள் கரடி பதுங்கியிருக்க வாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“கேஜிஎஃப் பாடலை பயன்படுத்திய காங்கிரஸ்”…. ராகுல் காந்தி மீது காப்புரிமை வழக்குப்பதிவு….. அதிர்ச்சி தகவல்….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து மேற்கொண்டுள்ளார். இவர் தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் தன்னுடைய பாதயாத்திரையை நிறைவு செய்த நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு ராகுல் காந்தியின் நடை பயணத்தின் போது நடக்கும் பல்வேறு விதமான சுவாரசிய சம்பவங்களை காங்கிரஸ் கட்சியினர் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“9,000 பக்க ஆவணங்கள்”…. மேல தாளத்துடன் மாட்டு வண்டியில் ஏற்றி சென்ற ஆர்டிஐ அலுவலர்….. எதற்காக தெரியுமா….?

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பைடர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகான் தகட் என்பவர் ஆர்டிஐ அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப் பட்ட ஆவணங்களை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த ஆவணங்களை பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கூறியது. இந்த பணத்தை மகான் கட்டி 2 மாதங்களான நிலையில் நகராட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வருஷத்துக்கு 365 நாளும் விளம்பரத்தை தேடும் தல அஜித்”….. ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தால் கொந்தளித்த ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் ஜி.எம் சுந்தர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகை மஞ்சு வாரியார் மற்றும் நடிகர் அஜித் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

14 வயது சிறுமிக்கு தொந்தரவு…. வாலிபர்களின் அத்துமீறிய செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் விஜய்(23), காளிமுத்து(28) ஆகியோர் வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு இருவரும் இணைந்து 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விஜய் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் விஜய் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த திருமணம்… வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் கூலித் தொழிலாளியான சதீஷ்குமார்(24) என்பவரை வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு சதீஷ்குமார் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தரை பாலத்தை மூழ்கடித்த தண்ணீர்…. வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர்…. நொடியில் உயிர் தப்பிய ஓட்டுநர்…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கொங்கராயனூர் கிராமத்தில் ஓட்டுநரான ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் அருளவாடி கிராமத்தில் உள்ள நிலத்தை உழுவதற்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து கொங்கராயனூர்- அருளவாடி இடையே […]

Categories
வேலைவாய்ப்பு

Diploma/Engineering/Degree முடித்தவர்களுக்கு….. விண்வெளி மையத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!!

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாகவுள்ள பட்டதாரி மற்றும் டெக்னீசியன் அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்: Vikram Sarabhai Space Centre பதவி பெயர்: Graduate and Technician Apprentice மொத்த காலியிடம்: 356 கல்வித்தகுதி: Diploma / Engineering / Graduate வயதுவரம்பு: 30 years கடைசி தேதி: நவம்பர் 12 கூடுதல் விவரங்களுக்கு: www.vssc.gov.in https://www.vssc.gov.in/assets/img/PDF/Recruitment/SelectionGraduate311022.pdf

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை திரிஷாவுக்கு என்னாச்சு”….. இவ்வளவு பெருசா கட்டு போட்டு இருக்காங்களே…. போட்டோவால் ரசிகர்கள் ஷாக்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக, அதிமுகவை தாண்டி யாரும் வர முடியாது”…. பாஜகவுக்கு வரலாறு தெரியாது….. ஆர்.எஸ். பாரதி ஆவேசம்…..!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள கோரிப்பாளையம் பகுதியில் திமுக கட்சியின் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஜவஹர்லால் நேருவை மிரளவைத்த கட்சி திமுக. தாய் மொழியான தமிழ் மொழிக்கு பாதிப்பு என்றால் யாரை வேண்டுமானாலும் திமுக எதிர்க்கும். மதுரையில் முதன் முதலாக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது ஒன்றரை வருடங்கள் சிறை தண்டனை […]

Categories
பல்சுவை

MTNL ப்ரீபெய்ட் திட்டம்: ரூ.225-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்…. வாழ்நாள் வேலிடிட்டி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஸ்மார்ட்போனின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடிஆகும் காலமானது குறைவாக இருப்பதனால், அதனை ஈடுகட்ட ஒரு புது திட்டம் சந்தையில் வந்திருக்கிறது. இவை உங்களுக்கு லைப்டைம் செல்லுபடி ஆகும். இத்திட்டம் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டுவதாக இருக்கிறது. 225 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் வாழ்நாள் வேலிடிட்டி கிடைக்குமாம். ஏர்டெல், ஜியோ, வோடா போன் என அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தைப் பார்த்து அரண்டு போயுள்ளனர். உங்களது ரீசார்ஜ் காலம் முடிந்து விட்டால் உங்களின் அனைத்து சலுகைகளும் முடிவடையும். ஆனால் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

பாங்க் ஆப் பரோடா வங்கியின் புதிய திட்டம்…. 399 நாட்களுக்கு 7.5% வட்டி….. விருப்பமுள்ளவர்கள் சேரலாம்…..!!!!!

இந்தியாவில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக குறைந்த முதலீடு அதிக லாபம் இருக்கும் திட்டத்தை பலரும் விரும்புவர். இந்நிலையில் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா ஒரு புதிய திட்டத்தை வாடிக்கையாளர்களுக்காக தற்போது தொடங்கியுள்ளது. அதாவது திரங்கா பிளஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் பருவ காலம் 399 நாட்களாகும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு […]

Categories
தேசிய செய்திகள்

“தொடர்ந்து மோசமாகும் காற்று தர குறியீடு”….. வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை….. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

டெல்லியில் சமீப காலமாகவே காற்றின் மாசுபாடு அதிகரித்து வருகிறது. காற்று  தர குறியீட்டு அளவானது மோசமடைந்து வருவதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இங்கு இன்று நிலவரப்படி இருக்கும் காற்று  தர குறியீடு குறித்த தகவலை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுதும் காற்று தர குறியீடு ஆனது 431 ஆக இருக்கிறது. அதன் பிறகு உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டா பகுதியில் காற்று தர குறியீடானது […]

Categories
தேசிய செய்திகள்

டிக்கெட்டுக்கு பைசா வாங்கிட்டு நிகழ்ச்சி நடத்தல!… பெண் நடன கலைஞர் மீது பாய்ந்த மோசடி வழக்கு…. பரபரப்பு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பெண் நடன கலைஞர் ஸ்வப்னா சவுதிரி ஆவார். இவர் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம் ஆகும். இதற்கிடையில் கடந்த 2018 ஆம் வருடம் ஸ்வப்னா நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நுழைவு கட்டணமாக தலா 300ரூபாய் பார்வையாளர்களிடம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது நடனநிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. பின் நிகழ்ச்சியானது ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் விதிமுறைகள்…. நடைபெறும் டெல்லி மாநகராட்சி தேர்தல்…. தேர்தல் ஆணையம் தகவல் ….!!!!

டெல்லி மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு அடுத்த மாதம் 4-ஆம்  தேதி தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற 7-ஆம்  தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறும்.  டெல்லி மாநகராட்சியில்  250 வார்டுகள் உள்ளது. அதில் 42 வார்டுகள் பட்டியலித்தவர்களுக்கும், 50 சதவீத வாக்குகள் மகளிர்க்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

கடன் பெறணுமா?…. அப்போ பேடிஎம் போஸ்ட்பெய்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

UPI செயலிகளான போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் செயலிகளின் பயன்பாடு நாடு முழுதும் அதிகரித்து இருக்கிறது. இதில் பேடிஎம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு போஸ்ட் பெய்ட் வசதியின் வாயிலாக கடன்களை வழங்குகிறது. உங்களது மொபைலில் Paytm செயலி இருந்தால்போதும், நீங்கள் உடனே பேடிஎம் போஸ்ட்பெய்ட் அம்சத்துக்கு விண்ணப்பித்து, அதன் வாயிலாக கடன் பெறமுடியும். உங்களிடன் பணம் இல்லையெனில், Paytm போஸ்ட் பெய்டிலிருந்து பணத்தை செலுத்தி, கிரெடிட் கார்டுகளுக்கு பணத்தை செலுத்துவது போன்றே, இந்த பில்லையும் செலுத்தினால் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு …. அச்சத்தில் அரபு நாடுகள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் பிரதமராக  பெஞ்சமின் தேர்வாகியுள்ளார். பிரபல நாடான இஸ்ரேலில்   கடந்த சில நாட்களுக்கு முன்பு  தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராகிறார். இவருக்கு காபந்து அரசின் பிரதமராக இருந்த யாயிர்  லாபிட்  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது  பாலஸ்தீனியர்கள் மற்றும் அருகில் உள்ள அரபு நாடுகள் இடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1948-ஆம் ஆண்டு தான் இஸ்ரேல் அங்கீகரிக்கப்பட்ட நாடாக அறிவிக்கப்பட்டது. […]

Categories

Tech |