Categories
உலகசெய்திகள்

ஒரு மாதத்திற்கு 8 டாலருக்கான சந்தா சேவை… அறிமுகப்படுத்திய ட்விட்டர் நிறுவனம்…!!!!!

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை அதிரடியாக எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார். மேலும் உலகம் முழுவதும் பணியாற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. அதன்படி உலகம் முழுவதும் twitter நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7,500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரே […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..! தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு.!!

தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். தான்சானியா தலைநகர் தார்-எஸ்- சலாமில் இருந்து புகோபா நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது பிரிஷிஷியன் விமானம். 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்துக்கு 100 மீட்டர் முன்னதாக பிரிஷிஷியன் விமானம் ஏரிக்குள் விழுந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 49 பேர் பயணித்த நிலையில் 26 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா… மே 8 ம் தேதி வங்கி விடுமுறை… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மரணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த வருடம் மே மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை கூறியுள்ளது. இதில் பாரம்பரிய மரபு படி கையில் செங்கோல், தடி போன்றவற்ற ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்கின்றார். அதன் […]

Categories
உலகசெய்திகள்

பிரபல பாப் இசை பாடகர் மர்ம மரணம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தம்பா என்னும் பகுதியில் ஆர்டன் காட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரரும், மூன்று சகோதரிகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தனது 9 வயதில் 1997 ஆம் வருடம் முதன்முதலாக ஆல்பம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன் பின் பேக்ஸ் ஸ்ட்ரீட் பாய்ஸ் என்னும் பாப் இசை குழு உடன் ஒப்பந்தம் போட்டு இசை பணியாற்றியுள்ளார். இதில் அந்த குழுவில் ஆரனின் சகோதரர் நிக்காட்டர் உறுப்பினராக இருந்திருக்கின்றார். இந்த சூழலில் வேலி […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென நீக்கப்பட்ட சர்க்கரை ஏற்றுமதி தடை…. இத்தனை சதவீதங்கள் மட்டும் ஏற்றுமதி செய்யப்படும்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய உணவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை இருப்பதை உறுதி செய்யவும், சர்க்கரையின் விலையை கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு ஏற்றுமதி தடை விதித்தது. கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எல்.இ.டி பல்பை விழுங்கிய குழந்தை….. தற்போதைய நிலை என்ன….? எழும்பூர் மருத்துவமனை டாக்டரின் தகவல்….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலையில் கொத்தனாரான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய பூவேந்திரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறான். நேற்று முன்தினம் பூவேந்திரன் தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறிய ரக எல்.இ.டி பல்பை விழுங்கியதால் லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஷ் தனது குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ!!… பிரபல நாட்டில் ” வறட்சியால் உயிரிழக்கும் வனவிலங்குகள்”…. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாடுகளில் ஏற்பட்டுள்ள வறட்சியால் வனவிலங்குகள் உயிரிழந்து வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது வறட்சி நிலவி  வருகிறது. இதனால் காடுகளில் வசித்து வரும் வரிக்குதிரை, ஒட்டகசிவிங்கிகள், காட்டெருமைகள் என 14 வகையான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது. இந்த வனவிலங்குகளின் இறப்பு சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் இதனால் அந்நாட்டின் சுற்றுலாத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும் தற்போதைய சூழ்நிலையில் மழைப்பொழிவுக்கான சூழ்நிலையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர் காய்ச்சல்”…. அவரால சுத்தமா முடியல….. இருந்தாலும் நடிச்சாரு…. தளபதி விஜய் குறித்து பிரபல நடிகை சொன்ன நெகிழ்ச்சி தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு ஷாம், மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவி?…. பிரபல நாட்டில் “மனைவி குடும்பத்தை தீர்த்து கட்டிய நபர் தற்கொலை”…. அதிர்ச்சியில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் 4 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள மேரிலேட் மாகாணத்தில் ஆண்டிரு  சேல்ஸ்-சாரா மென் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கெலின், வெஸ்மி என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆண்டிருவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சாரா தனது தாய் வீட்டில்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சாராவின் வீட்டிற்கு ஆண்டிரு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினியின் அடுத்த அடுத்த 2 படங்கள்….. திடீரென்று விலகிய அனிருத்….. வெளியான புதிய பரபர தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பல வருஷங்களுக்கு பிறகு துணிவு படத்தில் அஜித் செய்த தரமான சம்பவம்”….. புதிய அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முடித்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.   வேதாளம் படத்தில் […]

Categories
மாநில செய்திகள்

எல்.இ.டி பல்பை முழுங்கிய 1 1/2 வயது குழந்தை…. மருத்துவமனையில் அனுமதி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

சென்னை கிழக்கு தாம்பரம் எம்இஎஸ் சாலையில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 1 ½ வயதில் பூவேந்திரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தகுழந்தை தவறுதலாக சிறியரக எல்.இ.டி பல்பை விழுங்கி விட்டது. இதன் காரணமாக குழந்தைக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சென்ற வெள்ளிக்கிழமை அனுமதித்தனர். அதன்பின் அந்த குழந்தைக்கு உடனே மருத்துவர்கள் சிகிச்சையளிக்க துவங்கினர். இது […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்….. அச்சத்தில் உறைந்த மக்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று வடக்கு சுலவேசி மாகாணத்தில் திடீரென நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனேசியா குலுங்கியது. ஆனால் இந்த நிலநடுக்கத்தின் போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Categories
தேசிய செய்திகள்

என் மகளை கொன்று விட்டேன்…. பேஸ் புக் லைவில் போட்ட தந்தை…. வெளியான பகீர் காரணம்….!!!

ஆந்திர மாநிலம் பிரசாத் என்பவர் மனைவியுடன் விவாகரத்து ஆகி தன் இரண்டு மகள்களை வளர்த்து வந்துள்ளார்.அதில் மூத்த மகள் ஒரு இளைஞனை காதலித்து அவருடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசாத் 16 வயதான இளைய மகளை ஆண்களுடன் பேசக்கூடாது, மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து கராராக வளர்த்து வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் ஒருவரை காதலிப்பது தந்தை பிரசாத்துக்கு தெரிந்துவிடவே மகளை கடுமையாக தாக்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “நாளுக்கு நாள் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு”…. வேதனையில் அதிபர்…. வெளியான தகவல்….!!!!

அதிபர் ஜோ பைடன்  அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள அல்லெக்னி பகுதியில் மதுபான பார்  ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஒரு முறை பிச்சை கேட்டேன்”….. ஆனால் அது வீண் போகவில்லை.‌…. நடிகர் விஷால் நெகிழ்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சென்னை மாத்தூர் பகுதியில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டும் அசத்திய சாம்பியன் சூர்யா..! வேற லெவல்…. இந்திய அணியை புகழ்ந்து ட்விட் போட்ட ரெய்னா.!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் […]

Categories
தேசிய செய்திகள்

5 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள்…. 2023 ஆம் வருடம் காலாவதியாகும்…. வெளியான தகவல்…..!!!!

நம் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட சூழ்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் மக்களிடம் ஆர்வமில்லை. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தில் 200 மில்லியனுக்கும்(20 கோடி) அதிகமான அளவு கோவாக்சின் தடுப்பூசி கைவசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசிக்கான தேவை இல்லாததால் கோவாக்சின் உற்பத்தி பல்வேறு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது சுமார் 50 மில்லியன்(5 கோடி) டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசி 2023ம் வருடத்தின் தொடக்கத்தில் காலாவதி ஆகும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் பக்கா மாஸ்….! “ரஞ்சிதமே ரஞ்சிதமே” வெளியான 24 மணி நேரத்தில்…. இவ்வளவா….??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
அரசியல்

FIFA 2022: உலகக்கோப்பை கால்பந்து போட்டி….. எந்த சேனல் மற்றும் ஆன்லைனில் பார்க்கலாம்…. இதோ முழு விபரம்….!!!!!

FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி வருகிற 21-ம் தேதி தொடங்கி 28 நாட்கள் வரை நடைபெறும். இதன் இறுதிப்போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்கும். இதனையடுத்து 32 அணிகளும், 4 அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்படும். அதன்படி குழு ஏ பிரிவில் நெதர்லாந்து, செனகல், ஈக்வடார், கத்தார் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆதார் வைத்து ட்விட்டரில் ப்ளூடிக் வசதி…. நடிகை கங்கனா ரனாவத் அதிரடி…!!!

ஆதார் அட்டையைக்கொண்டு ட்விட்டரில் ப்ளூடிக் வசதி செய்துதர வேண்டும் என கங்கனா ரனாவத் ஆலோசனை வழங்கியுள்ளார். ட்விட்டரில் ப்ளூ டிக் வேண்டும் என்றால் மாதம் 9 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் கரார்தனம் காட்டி வரும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா,  பிரபலத்தை வைத்து மட்டும் ப்ளூடிக் அங்கீகாரம் வழங்குவது சரியல்ல என்று கூறியுள்ள அவர், இந்த உலகில் எதுவும் இலவசம் கிடையாது. அதனால் ட்விட்டர் கட்டணம் வசூலிப்பதும் தவறில்லை. இருப்பதிலேயே […]

Categories
Uncategorized

உலககோப்பை கால்பந்து 2022: இதுவே கடைசி… விடை பெற இருக்கும் 5 அனுபவ சிங்கங்கள்…. இதோ முழு லிஸ்ட்….!!!

உலக கோப்பை கால்பந்து வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றி விளையாட உள்ளனர். எட்டு பிரிவினாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர். இந்த FIFA உலக கோப்பை பல கால்பந்து ஜாம்பவான்களுக்கு கடைசி உலக கோப்பையாகவும் உள்ளது. இந்த சூழலில் கத்தார் நாட்டில் நடைபெறும் FIFA உலக கோப்பை 2022 தொடருடன் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாடு… மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 % அதிகரிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

காற்று மாசுபாட்டால் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி என்சிஆர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக இருக்கிறது என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நேற்று கூறியுள்ளது. இதே போல் உத்தரப்பிரதேசத்திற்கு உட்பட நொய்டா நகரில் காற்று தரக் குறியீடு 529 ஆக பதிவாகி இருக்கிறது. அதேபோல் டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து  […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேச எம்எல்ஏ கைது… காரணம் என்ன…? அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை…!!!!

உத்திரபிரதேச எம்எல்ஏ வை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் பிரபல ரவுடியாக இருந்து அதன் பின் அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. இவர் ஐந்து தடவை எம்.எல்.ஏவாக இருந்த இவர் மீது சுமார் 50 குற்ற வழக்குகள் இருக்கிறது. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். மேலும் அவரது மகனும் மாவ் தொகுதியின் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்எல்ஏவும் ஆன அப்பாஸ் அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவி சத்யா கொலை வழக்கு…. குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. அதிரடியில் சிபிசிஐடி அதிகாரிகள் ….!!!!

மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா தெரு காவலர் குடியிருப்பில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ராமலட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகளான சத்யா கடந்த மாதம் 13-ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த நடிகர்”… இதில் அரசியல் எதுவும் கிடையாது…? நடிகர் விஷால் விளக்கம்…!!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சென்னை மாத்தூரில் இன்று 11  ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். அத்துடன் 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கியுள்ளார். இந்த நிலையில் மணமக்களுக்கு நடிகர் விஷால் தாலி எடுத்து கொடுத்துள்ளார். அதன் பின் 11 திருமண தம்பதிகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்டத்தில் டீ, காபி விலை உயர்வு… வர்த்தக சங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

மதுரை மாவட்டத்தில் டீ, காபி விலை உயர்வதாக வர்த்தக சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக ஒரு கிளாஸ் டீ விலை பத்து ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்ந்திருப்பதால் நடுத்தர மக்களை கவலையடைய செய்திருக்கின்றது. மேலும் பால் விலை, டீத்தூள், காபித்தூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சரியா பாக்கலையா.! அவுட் கொடுத்த அம்பயர்…. சர்ச்சையாகும் எல்.பி.டபிள்யூ…. கொந்தளிக்கும் ரசிகர்கள்….. வைரல் வீடியோ..!!

வங்கதேச அணி பேட்டிங் செய்யும் போது கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவுட் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய சூப்பர் 12 போட்டிகள் இன்றோடு முடிவடைந்து விட்டது. கடைசியாக 3 போட்டிகள் நடந்தது. இதில்  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லாமல் பரிதாபமாக வெளியேறியது.. பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஐஐடி.யில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு…. பொய்யாமொழி வழங்கிய அமைச்சர்….!!!!

பிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆணைகளை வழங்கியுள்ளார். சென்னையில் உள்ள ஐஐடியில் கடந்த மாதம் பிஎஸ் தரவு அறிவியல் படிப்பு தொடங்கப்பட்டது. இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜேஇஇ  நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் 10-ஆம்  வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சி பெற்றவர்களும், 12-ஆம்  வகுப்பு முடித்தவர்களும், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலை படிப்பை படித்து வருபவர்கள் என அனைவரும் இந்த படிப்பில் சேரலாம் என […]

Categories
இந்திய சினிமா சினிமா ஹாலிவுட் சினிமா

சோகம்: “பிரபல இளம் பாடகர் குளியல் தொட்டியில் பிணமாக மீட்பு”…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!!!

பிரபல பாடகர் தனது வீட்டு குளியல் தொட்டியில் பிணமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆரன் கார்டன் என்பவர் பிரபல பாடகராவார். 34 வயதான இவர் Aaron’s Party” ஆல்பம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கலிபோர்னியா, லங்கா ஸ்டார் பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று காலை 10.58 மணிக்கு தன் வீட்டு குளியல் தொட்டியில் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் 1987 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி பிறந்தார். […]

Categories
உலக செய்திகள்

என்ன….? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர்…. பிரபல நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா….!!!!

அமெரிக்க நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர். அமெரிக்க நாட்டின் வருகிற 8-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள் 5 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் 4 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அமைதியை யாராலும் சீர்குலைக்க முடியாது…. அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்….!!!!

அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள பட்டாளம் உயர்நிலைப் பள்ளியில் நேற்று கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மழைக்கால சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளர். . அதில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து நமது சென்னை மாநகரம் 100% இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. மேலும் வரும் ஒன்பதாம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா….? விளக்கம் கொடுத்த நடிகர் விஷால்….!!!!

நடிகர் விஷால் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி சமீபத்தில் டிவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் காசியை புதுப்பித்து சிறப்பாக மாற்றியதற்கு பிரதமர் அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு மோடியும் காசியில் அற்புத அனுபவம் உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று பதிலளித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஷால் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறாரா? என்று கேள்வி எழுந்தது. இது குறித்து தற்போது பதிலளித்துள்ள விஷால், பிரதமர் மோடிக்கு நன்றி கூறியதில் எந்த அரசியல் உள் நோக்கமும் […]

Categories
அரசியல்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி(2022)…. இசை ஆல்பம் வெளியிட்டு அசத்திய நடிகர் மோகன்லால்…..!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் வருகிற 20ஆம் தேதி கத்தார் நாட்டில் தொடங்க உள்ளது. 32 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்த கால்பந்து தொடர் 28 தினங்கள் ஆசியாவிலுள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த உலகக்கோப்பை தொடரில் 32 அணிகள் கலந்துகொள்ளும் நிலையில், மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறயிருக்கிறது. இந்நிலையில் ஃபிபா உலகக்கோப்பை தொடரில் பாலின விகிதத்தை சமநிலைபடுத்தும் முயற்சியில் பெண் நடுவர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹலோ புருஷா…! “இது மிகவும் தவறான செயல்”…. ரவீந்தர் செய்த செயலால் கண்ணீர் விட்ட மகா…!!!!!

ரவீந்தர் பதிவை பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமணம் தான் பரபரப்பாக பேசப்பட்டது. இருவருக்கும் திருப்பதியில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்கள் அவ்வப்போது செய்யும் செயல்களை இருவரும் புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றார்கள். அது வைரலாகியும் வருகின்றது. இந்த நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி செய்த […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… இவ்வளவு கோடியா?…. திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு வெளியீடு…..!!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பணகையிருப்பு மற்றும் தங்க இருப்பு போன்றவை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடபட்டுள்ளது. அந்த வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 10.3 டன் தங்கம் மற்றும் ரூ.15,938 கோடி பணம் பெடாசிட்செய்யப்பட்டு இருக்கிறது. கோவிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. இதை பக்தர்கள் யாரும் நம்பவேண்டாம். இதற்கிடையில் உபரிவருமானம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் டெபாசிட் செய்யப்படும். வங்கிகளில் வெளிப்படையான முறையில்தான் முதலீடு […]

Categories
மாநில செய்திகள்

சினிமா போல் அரசியலில் வெற்றி பெற முடியாது…. எடப்பாடி பழனிச்சாமி அட்வைஸ்…!!!!

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக கட்சியில் இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்  கூறியதாவது. நான் திரைப்படம் பார்த்தே 25 ஆண்டுகளுக்கு மேல்  இருக்கும். இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை திரைத்துறையும் அரசியலும் ஒன்றாக கலந்துள்ளது. அதிலும் திரைத்துறைக்கும் அதிமுகவுக்கும் நெருங்கிய  தொடர்பு உள்ளது.ஏனென்றால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அரசியலிலும் சாதித்தார்கள். இல்லையில் திரைத்துறையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“குடும்பத்திற்காக கள்ள பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்லும் இளைஞர்”…. ஒன்வே படத்தின் விமர்சனம் இதோ…!!!!!

விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீரோ. அவரின் தந்தை ஒருவரிடம் கடன் வாங்கி அதை திரும்ப தர முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றார். இந்த கடனை திருப்பி தர அவர் போராடும்போது கடன் கொடுத்தவர், ஹீரோவின் குடும்பத்திடம் மிரட்டல் விடுகின்றார். கடனை கொடுக்க தவறினால் உன்னுடைய தங்கையை என்னிடம் அனுப்பி விடு என தரக்குறைவாக பேசுகின்றார். இதனால் ஹீரோ தனக்கு தெரிந்த ஒருவரிடம் உதவி கேட்க அவர் கள்ள பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு சென்று அங்கு முடிந்த அளவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் அப்துல் கலாம் அல்ல”…. விரைவில் காதல் திருமணம் செய்வேன்….. நடிகர் விஷால் ஓபன் டாக்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு 57 வகையான சீர்வரிசைகள் கொடுத்து நடிகர் விஷால் இலவச திருமணம் செய்து வைத்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து அவர்களை வாழ்த்தினார். அதன் பிறகு நடிகர் விஷால் பேசினார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… மின் இணைப்பு துண்டிப்பு “எஸ்எம்எஸ் மூலம் நவீன மோசடி”… காவல் ஆணையர் எச்சரிக்கை…!!!!!

சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த சில நாட்களாக மோசடி கும்பல் பல புதிய யுத்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் தற்போது பொதுமக்களின் கைபேசி எண்ணுக்கு அவர்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும்,. சென்ற மாத கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும், உடனே மின்வாரிய அதிகாரியை கைப்பேசி அல்லது whatsapp மூலம் தொடர்பு கொள்ளுங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு….. சுதந்திரப் போராட்ட தியாகி பெயர்…. வெளியான அறிவிப்பு….!!!!

சுதந்திரப் போராட்ட தியாகி பகத்சிங்கின் 115-வது பிறந்தநாள் செப்டம்பர் 28ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதேநாளில் சண்டிகர் விமானம் நிலையத்திற்கு பகத்சிங்கின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் நினைவாக சண்டிகர் விமானம் நிலையத்திற்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என்று செப்டம்பர் 25ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து கடந்த வாரம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அவற்றில், சண்டிகர் சர்வதேச விமான […]

Categories
உலக செய்திகள்

OMG: ரொம்ப போர் அடிக்குதாம்….! அதுக்கு உயிருக்கே உலை வைப்பதா….? ஆன்லைனில் தேடி வாங்கிய நபர்….!!!

லண்டனை சேர்ந்த டேனியல் எமிலின் இணையதளத்தில் தற்கொலை எண்ணத்தை தூண்டும் தாவரத்தினை தேடி ஆர்டர் செய்து வாங்கி வளர்த்து வருகிறார். ஜிம்பி ஜிம்பி என்று அழைக்கப்படும் அந்த செடியை அவர் வளர்த்து வருகிறார். இந்த செடியின் இலைகள் மீது சிறிய செய்யும் முட்கள் இருக்கும். இது மனிதர்களின் உடலில் பட்டதும் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும். இதைத் தொட்டாலே உடலில் மிகவும் கடுமையான வலி ஏற்பட்டு பல மாதங்களுக்கு இதனால் ஏற்பட்ட வீக்கமும், வலியும் அப்படியே இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றுக்குள் கால்பந்து வீரருக்கு கட் அவுட் வைத்த ரசிகர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கேரள மாநிலத்தில் கால் பந்து ரசிகர்களின் எண்ணிக்கையானது அதிகமாகும். இவர்கள் பிரேசில், அர்ஜென்டினா, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளின் கால் பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்களும் அமைத்து உள்ளனர். அந்த அடிப்படையில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளதால் அர்ஜென்டினா நாட்டின் கால் பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயர கட்-அவுட் அமைத்தனர். இந்த கட்அவுட்டை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்”…. 57 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை….. நடிகர் விஷாலின் நெகிழ்ச்சி செயல்…..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஷால். செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை நடிகர் விஷால் முன்னின்று நடத்தி வைத்ததோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“பனாரஸ் ஓர் காதல் ஓவியம்”….. இதோ பட விமர்சனம்…!!!!!!

பனாரஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம். கன்னட சினிமா உலகின் முன்னணி  இயக்குனராக வலம் வரும் ஜெய தீர்த்தா இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பனாரஸ். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்திற்கு அஜனனீஷ் லோக்நாத் இசையமைக்க என்.கே புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் […]

Categories
உலக செய்திகள்

தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்தது..!!

தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு 100 மீட்டர் முன்னதாக பிரிஷிஷியன் விமானம் ஏரிக்குள் விழுந்தது. தான்சானியா தலைநகர் தார்-எஸ்- சலாமில் இருந்து புகோபா நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது பிரிஷிஷியன் விமானம். விமானத்தில் பயணித்தவர்களில் 26 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து மீட்பு பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.   https://twitter.com/KaustuvaRGupta/status/1589188610838138880

Categories
தேசிய செய்திகள்

“ஆதார் அட்டை”… இந்த விவரம் சரியாக இல்லாவிடில் உடனே மாத்துங்க…. இல்லனா ஆபத்து தான்….!!!!

இந்திய நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணம் ஆகும். இந்த ஆதார் அட்டை தற்போது அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் தேவைப்படுவதால் அதை கவனத்துடன் கையாள்வது அவசியம். இந்த ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் இருக்கும் நிலையில் அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்வதற்கு ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி கண்டிப்பாக வேண்டும். இதனால் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்ட செல்போன் நம்பரை பத்திரமாக வைத்திருப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் முகத்துக்கு தகுந்த மாதிரிதான் நடிக்க முடியும்”….. அப்படி ஒரு வாய்ப்பு தான் கிடைச்சிருக்கு…. நடிகர் யோகி பாபு ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோல்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் நடிக்கும் வாரிசு, ஷாருக்கானின் ஜவான், சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை‌ கோஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு சில நடிகர்களுடன் சேர்ந்து திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

“கிராமத்தின் டீக்கடையில் யுபிஐ க்யூஆர் கோர்டு அட்டை”…. ஆனந்த் மஹிந்திரா பாராட்டு….!!!!

பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா அவ்வப்போது சுவாரசியம் மிக்க தகவல்களையும், வியக்கத்தக்க செயல்களையும் தன் டுவிட்டரில் பகிர்ந்து பாராட்டுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் சென்று விட்டதை மெய்பிக்கும் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு நிகழ்வை சுட்டிக்காடி ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார். அதாவது உத்தரகாண்ட்டின் மலைக் கிராம் ஒன்றில் உள்ள டீக்கடையில் யுபிஐ க்யூஆர் கோர்டு அட்டை வைக்கப்பட்டிருப்பதைப் புகைப்படம் எடுத்து “இந்தியாவின் கடைசி டீக்கடை” என்று டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இப்பதிவு […]

Categories
உலக செய்திகள்

வறட்சி காரணமாக…. 205 யானைகள் பலி…. கென்யாவில் பரபரப்பு….!!!!

கென்யா நாட்டில் தற்போது கடும் வரட்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக அந்த நாட்டில் உள்ள யானைகள் அடுத்தடுத்து இறந்து வருவதாக WWF என்ற உலக வனவிலங்கு பாதுகாப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி தற்போது கென்யா நாட்டில் நிலவி வருவதால் யானைகளும் அதன் குட்டிகளும் போதுமான நீர் மற்றும் உணவு இல்லாமல் யானைகள் கடும் சிரமப்படும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் கடந்த அரை ஆண்டில் வறட்சியால் […]

Categories

Tech |