அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்,
அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்,
விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரிலிருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறையை மீறி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள் என 6 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து தமிழக அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர […]
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு கொங்கு நகரில் சாமியாத்தாள்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை சாமியாத்தாள் தனது தம்பி மகனான சேகர் என்பவருடன் பூதிபுரத்தில் இருக்கும் தோட்டத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அய்யர்மடம் அருகே சென்ற போது கரூர் நோக்கி வேகமாக சென்ற லாரி மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாமியாத்தாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (11.11.2022) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளபொம்மன்பட்டி பகுதியில் டிப்ளமோ படித்து முடித்த கோகுலவிஜயன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கோகுல விஜயனும் அதே பகுதியில் வசிக்கும் ஹேமமாலினி(21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் […]
மொபட் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உண்டார்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரவன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி இருந்து சின்னாளப்பட்டியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கதிரவனுக்கு பிறந்தநாள். இதனால் கதிரவன் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக […]
யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காடகநல்லி மலை கிராமத்தில் சித்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சித்துவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் சித்து காடகநல்லி வனப்பகுதிக்கு விறகு பொறுக்க சென்றுள்ளார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது பெருமடுவு பள்ளம் அருகே […]
இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் […]
வாட்ஸ் அப் வாயிலாக பணம் அனுப்ப எளிய வழிமுறைகள் இருக்கிறது. பிரபல வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் செய்வது, வீடியோ (அ) ஆடியோகால் பேசுவது மட்டுமின்றி இனிமேல் பணமும் அனுப்பிக்கொள்ளலாம். இதுகுறித்து இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # முதலில் பணத்தை எந்த நபருக்கு அனுப்பவேண்டுமோ அவரது உரையாடல் பக்கத்தினை திறந்து பேமென்ட் ஆப்ஷனை தேர்வு செய்யவும். # எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதை டைப் செய்து பணத்தை அனுப்ப வேண்டும் # இதனிடையில் யூபிஐ பின்னை […]
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். இவருக்கு தற்போது 74 வயதாகும் நிலையில், சிறுநீரகப் பிரச்சினையால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனையடுத்து தீவன வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற லாலு பிரசாத் ஜாமினில் வெளியே வந்த போது பலமுறை சிகிச்சைக்காக தில்லி மற்றும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் லாலு பிரசாத் தொடர்ந்து சிறுநீரக […]
இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, மொழி வெறியை ஏதாவது ஒரு வகையில் திணித்து, அதிலே இவர்களை சிக்கவைத்து, அதன் மூலமாக இந்த ஆட்சிக்கோ, அரசுக்கோ ஆபத்துகளை உருவாக்கி விட முடியும் என்று கனவு கண்டார்களேயானால், நிச்சயமாக அந்த கனவு பலிக்காது. கனவு கனவாகவே தான் போய்விடும். ஏனென்றால் நீங்கள் ஒன்றை நினைத்தால் அதைவிட பன்மடங்கு நினைக்கக்கூடிய ஆற்றலை இந்த தமிழ் சமுதாயத்தினுடைய தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்ற தலைவர் தளபதி பெற்று […]
இரண்டாவது அரையிறுதியில் கோலி, பாண்டியா அரைசதத்தால் இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா.. ரோஹித், ராகுலை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச […]
புதுச்சேரி மாநிலத்தில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு காலியாக உள்ள அரசு உதவியாளர் பணியாளர் பணிகள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் காலி பணியிடங்கள் குறித்த சில தவறான பொய்யான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அமைச்சு பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, அரசு துறைகளில் கடந்த 10 வருடங்களாக […]
உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமாக பேஸ்புக் இருக்கிறது. இந்த பேஸ்புக் மெட்டா நிறுவனத்தின் கீழ் வந்த பிறகு வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளும் மெட்டா நிறுவனத்தின் கீழ் இணைக்கப்பட்டது. மெட்டா நிறுவனமானது வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளுக்கு ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் 2 மணி நேரமாக முடங்கி பயனாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அந்த வகையில் இன்று காலை […]
ரிஷி சூனக்கின் மாமியார் ஒருவரின் பாதத்தை தொட்டு வணங்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவின் பிரதமரான ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளை தான் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரிஷி சூனக்கின் மாமியாரான சுதா மூர்த்தி கடந்த திங்கட்கிழமை மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது வாசகர்களை சந்தித்து பேசினார். அப்போது திடீரென அங்கு வலதுசாரி அமைப்பான சிவபிரதிஷ்தான் தலைவர் சம்பாஜி பிடே வந்தார். இந்நிலையில் சுதா மூர்த்தி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஷால் ஹீரோ என்பதை தாண்டி மற்றும் சமூக நல சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து, 51 வகை சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார். 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணமானது திருவள்ளுவர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் […]
சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், திரைப்பட இயக்குனர் சந்திரசேகர் குறிப்பிட்டார்கள்.. சாமானிய ஒருவர் நாட்டினுடைய முதலமைச்சராவது அவ்வளவு எளிதல்ல என்று சொன்னார். உண்மையிலேயே அது அப்படித்தான். திரைப்படத்தில் எப்படி ஒரு முத்திரை பதிக்கிறாரோ, அதேபோல தான் அரசியலிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று சொன்னால், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது, ஒரு சிலருக்கு தான் கிடைக்கும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. திரைத்துறைக்கும் எங்கள் இயக்கத்திற்கும் […]
மத்திய சாலை போக்குவரத்து துறை மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முழு அதிகாரத்தையும் அதிகாரிகளுக்கு கடந்த 2002- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உரிமைச் சட்டம் அளிக்கிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலங்களை ஏராளமானோர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் சாலைகளில் அமைக்கப்படும் கடைகள் நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருப்பது அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
மும்பையை தலைமை இடமாக கொண்டு ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வெளிநாட்டில் வசிப்பவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கக் கூடாது என்று நிபந்தனை இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடு தான் விளையாட்டுகள் வழங்கப்படுகிறது. அதோடு விளையாட்டு களில் அடிமையாவதை தடுப்பதற்கான சோதனைகளும் இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு […]
கேரள மாநிலத்தை சேர்ந்த ரகு என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவருக்கும் நவம்பர் 5ஆம் தேதி பாலக்காட்டிலுள்ள கஞ்சிக்கோட்டில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்துக்கு வருகை புரிந்த ரகுவின் நண்பர்கள் மணப்பெண்ணிடம் தங்களது நண்பனை தங்களுடன் இரவு 9 மணிவரை நேரத்தை செலவிட அனுமதிக்கவேண்டும் எனக்கூறி ஒரு திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்தை வாங்கினர். இச்சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மலையாளத்தில் எழுதப்பட்ட பத்திரத்தில் மணமகள் அர்ச்சனா கையெழுத்திட்டு இருக்கிறார். அதாவது அந்த […]
BSNL தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.499 புது பிராட்பேண்ட் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஜியோபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றுக்குப் போட்டியாக BSNL நெட்வொர்க்கிலும் தடை இல்லா இன்டர்நெட் சேவைக்கான பிளான்கள் இருக்கிறது. அந்த அடிப்படையில் BSNL நெட்வொர்க்கில் புதியதாக ரூ499-க்கு ஒரு பிளான் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதே நேரம் இதே ரூ499க்கு ஒரு பிளான் ஏற்கெனவே இருக்கிறது. தற்போது அதே பிளானை பெயர்மாற்றம் செய்து புது பிளான் என BSNL அறிவித்திருக்கிறது. BSNL வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 பிராட் பேண்ட் […]
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்ணதாசன் அவர்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இவர்கள் சொன்ன இடத்தில் நான் ரொம்ப நெகிழ்ந்து விட்டேன். இனி அந்த வீட்டிற்கு ( நெல்லை கண்ணன் ) போகும்போது என் அப்பா உட்கார்ந்த நாற்காலி, அவர் இருந்த ஊஞ்சல் அதெல்லாம் வெறுமையாக இருக்கும் போது நமக்கு கஷ்டமாக இருக்கும். நானும் என் அப்பாவும், இருக்கின்ற படம் இருக்கிறது பாருங்க.. வாய்யா […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பட்டி அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு குடோன்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் ஐந்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ள சூழலில் ஒருவர் உடல் ஆங்காங்கே தலை, உடல் பகுதி, கால் பகுதி என தென்னந்தோப்பு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன. இதில் வடக்கம்பட்டியை சேர்ந்த அமாவாசி, வல்லரசு, […]
மாலத்தீவின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மோடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 10 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் தலைநகரான மாலேவில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்தக்கக்கூடிய இடத்தில் தீ பற்றி எரிந்து, குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவியது. இதில் இந்தியாவை சேர்ந்த 9 நபர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அருகில் இருக்கும் […]
இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் […]
டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார் . இதனைத் தொடர்ந்து OMG என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஜி பி முத்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் […]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல வகுப்புகள் நேரடி முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் […]
உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் தங்கள் நாட்டில் சுமார் 50 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டுப்பகுதியில் அழிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் இரண்டு தரப்பை சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், உக்ரைன் நாட்டின் பல நகர்களை ரஷ்ய படையினர் கைப்பற்றி விட்டனர். இந்நிலையில், எகிப்தில் நடக்கும் காலநிலை மாற்றம் குறித்த […]
தமிழகத்தில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரம் தோறும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி வெற்றி பெற்ற மாணவர்களை கடந்த வருடம் டிசம்பர் மாதம் துபாய் அழைத்த செல்வதற்கு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது. ஆனால் ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் பாதிப்பு […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பயனர்களின் தேவைக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வபோது பல புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் பயனர்கள் தங்களுக்கு தானாகவே செய்திகளை அனுப்பி கொள்ளும் வகையில் message to yourself என்ற புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதனைப் போலவே செய்ய முடியும் என்றாலும் காண்டாக்ட் இல் your self என்ற தனி குறியீடு இருக்காது. இனி இந்த தனி குறியீடு […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு முறையில் ஏற்படும் மாற்றங்களை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் மாற்றி உள்ளது. புதிய விதிகளின்படி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு உங்கள் கணக்கை சரிபார்க்க வேண்டும். ஆண்டு எண்ணில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன்பு பயனர்கள் மொபைல் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சில நேரத்தில் காவல்துறை கடுமையாக தான் இருக்கணும். பாரதிய ஜனதா கட்சி காவல்துறையினர் கடுமையாக்கும் போது கூட இருப்போம். காவல்துறை கடுமையாச்சுனா அதுக்கு ஒரு குரூப்… ஐயோ காவல்துறை ஏன் கடுமையா நடந்துக்கிறாங்க ? கடுமையா நடந்துக்க கூடாது அப்படின்னு… மனித உரிமை மீறல் என ஒரு குரூப் வருவாங்க. இந்த விஷயத்தில் காவல்துறை கடுமையாக இல்லை என்றால், நாளைக்கு நீங்களும், நாங்களும், சாமானிய பெண்கள் கூட […]
இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது .அதாவது டிக்கெட் புக்கிங் தொடர்பான முக்கியமான விதிமுறை பயணிகளுக்கு வெளியாகி உள்ளது. பலரும் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து விட்டு சில காரணங்களுக்காக அதனை கேன்சல் செய்து விடுவார்கள். முன்கூட்டியே கேன்சல் செய்தால் அதற்கு ரீபண்ட் தொகை கிடைக்கும். ஆனால் கடைசி சமயத்தில் கேன்சல் செய்தால் சில நேரங்களில் ரீபண்ட் தொகை உங்களின் கைக்கு வந்து சேராது. அதனால் பலரும் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் விட்டு […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல்கள் புரிபவர்கள் மற்றும் திறமை, துணிவு கொண்டவர்களை பாராட்டும் விதமாக சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின்போதும் அவர்களுக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் என்ற விருதை வழங்குகின்றது. அவ்வாயையில் நடப்பு ஆண்டிற்கான அண்ணா பதக்கம் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் […]
2 பேருந்துகள் சாலையில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை வந்த 2 பேருந்துகள் மோதியுள்ளது. இந்த விபத்தில் 13 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]
இங்கிலாந்தில் மந்திரி ஒருவர் பதவி விலகியதால் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே இணை மந்திரியாக இருந்த காவின் வில்லியம்சன், ஒரு எம்.பிக்கு துன்புறுத்தத்தக்க விதத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பினார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இவர், இதற்கு முன்பே இரண்டு தடவை சில பிரச்சினைகள் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இலவச மின் இணைப்புக்கு ஏறத்தாழ 21 வருடங்களாக பதிவு செய்து காத்திருந்த விவசாயிகள்.. இலவச மின் இணைப்பு கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற நிலையிலிருந்தவர்களுக்கு ”அனைவருக்கும் கிடைக்கும்” என்று நம்பிக்கையை உருவாக்கி, அதை செயல்படுத்தி இருக்கக்கூடிய முதலமைச்சர் மாண்புமிகு தலைவர் அவர்கள். எனவே ஒரு மகத்தான திட்டம் ஒட்டுமொத்தமா விவசாயிகளுக்கு… எங்களுடைய மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இந்த 50,000 விவசாயிகளை தொடர்பு கொண்டு, உங்களுக்கான இலவச மின் […]
மதுரை திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு வெடித்ததில் அந்த கட்டிடமே சுக்கு சுக்காக சிதறியது.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்ற முடிந்த நிலையில், தேர்வு எழுதிய பெண் ஒருவர் தன்னுடைய ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் இருந்துள்ளது. அந்தப் பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக ஒரு நடிகையின் புகைப்படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். […]
பிரபல சந்தையில் காய்கறி விலை குறைந்துள்ளது. சென்னையில் மிகவும் பிரபலமான கோயம்பேடு சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் காய்கறிகள் தினமும் இறக்குமதி செய்யப்படும். இங்கிருந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு நிர்ணயிக்கப்படும் காய்கறி விலையைப் பொறுத்து சென்னை மட்டும் இல்லாமல் பக்கத்து மாவட்டங்களிலும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று காய்கறிகள் விலை […]
RSSயை எதிர்க்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி அச்சிட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவனுக்கு வேலை இல்லை என்று பார்க்கின்றேன். மனுஸ்மிருதி அப்படிங்கறது எதோ ஒரு காலகட்டத்தில், எங்கேயோ எழுதினாங்க. அதில் பாதி பொய்யை திரித்து இருக்கின்றார்கள்.அவுங்க அவுங்க எழுதி இருக்காங்க. எப்போதும் மனுஸ்மிருதியில் உள்ள கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று சொன்ன பிறகு, அந்தந்த காலகட்டத்தில் சில […]
எல்லைப் பகுதியில் Digital Re-Survey செய்து, தமிழகத்திற்கு சொந்தமான கிராமங்களை ஆக்கிரமிக்க கேரளா அரசு முயற்சிப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு வாரமாக நடைபெறும் இந்த அத்துமீறலை திமுக அரசு தடுக்கவில்லை. ஆகவே இனியாவது ஸ்டாலின் அரசு விழித்துக் கொள்ளுமா?, இல்லை தம் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக்கொடுக்கப் போகிறார்களா? என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். முன்னதாக மறுஅளவீடு செய்வதாக தமிழகத்திற்கு சொந்தமான நிலங்களை கேரள அரசு […]
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக பாஜகவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி பகுதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை புரிந்திருந்தார். அண்ணாமலையின் வருகையை முன்னிட்டு பாஜக கட்சியினர் ஒரு பேனர் வைத்திருந்தார்கள். அந்த பேனர் தற்போது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி கேலிக்குள்ளாகியுள்ளது. அதாவது அண்ணாமலையை வரவேற்பதற்காக […]
தமிழகத்தில் வருடம் தோறும் பருவமழை காலத்தின் போது மேட்டூர் அணையில் இருந்து உபநீர் திறந்து விடப்படும். இந்த உபரி நீரானது வீணாக கடலில் கலக்கிறது. இதனால் திறந்து விடப்படும் உபரி நீரை ராட்சஷ குழாய்கள் மூலம் சேலம் கிழக்கு பகுதியில் உள்ள பகுதிகளுக்கு திருப்பி விட்டால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதன்படி கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம், தலைவாசல், வாழப்பாடி மற்றும் ஆத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் […]
நாளை பிரதமர் மோடி தனி விமானத்தில் மதுரை வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கடந்த 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் படித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டத்தை பிரதமர் வழங்குகிறார். இதற்காக தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார். இதனால் மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்புகள் […]
பிரிட்டன் அரசு தங்கள் நாட்டு மக்களை நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீட்க 32,000 ரூபாய் உதவித்தொகையை அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் வசிக்கும் மக்கள் லட்சக்கணக்கானோர் குறைவான வருவாய் பெற்று, தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படுகிறார்கள். எனவே, அவர்களின் நெருக்கடியை தீர்க்கும் வகையில் அரசாங்கம் 32,000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. மொத்த உதவித்தொகை 65,000. இதில் முதல் தவணையானது, முன்பே மக்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டது. இந்த உதவி தொகையானது, வேலைகள் மற்றும் ஓய்வூதியத்துறை மூலம் வழங்கப்படுகிறது. […]
இந்தியாவில் சென்ற 2020 ஆம் வருடம் பரவ தொடங்கிய கொரோனா தொற்று காலக்கட்டத்தில் சாதாரண நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதியளித்தது. ஏனென்றால் கொரோனா தொற்று வேகமாக பரவும் நேரத்தில் ஊழியர்கள் தினசரி அலுவலகம் வந்து பணிபுரிவதில் பல சிக்கலை எதிர்கொண்டனர். இதன் காரணமாக ஊழியர்களின் நலன் கருதி WFH ஆப்ஷன் வழங்கப்பட்டது. அதன்பின் ஓரளவு கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்புநிலை திரும்பியதும், சில நிறுவனங்கள் மீண்டுமாக ஊழியர்களை அலுவலகம் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாங்கள் மக்களுக்கு விநியோகிக்கும் மநுஸ்மிருதி எனும் நூல், திராவிட இயக்கங்களால் உருவாக்கப்பட்டது, எழுதப்பட்டது அல்ல, பெரியார் இயக்கங்களால், அம்பேத்கர் இயக்கங்களால், இடதுசாரி இயக்கங்களால் மொழி பெயர்க்கப்பட்டவை அல்ல. நாங்கள் மூன்று புத்தகங்களை குறிப்பு எடுத்து, ஒப்பீடு செய்து பார்த்தோம். அந்த மூன்று புத்தகங்கள் ராமானுஜாச்சாரியார்… 1865 டிசம்பரில் எழுதிய மனுதர்ம சாஸ்திரம். ராமானுஜ ஆச்சாரியார் இடதுசாரி இயக்கத்தை சார்ந்தவர் அல்ல, கிறிஸ்தவர் அல்ல, முஸ்லிமல்ல, திராவிட இயக்கத்தை […]
டெல்லியில் அரசின் மதுபான கொள்கை பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு வாகன ஓட்டுபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, நாட்டில் கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் டெல்லி பெண்களிடம் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இது பற்றி 5,000 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மதுபானம் குடிப்பது தங்களிடம் அதிகரித்துள்ளது என்று […]
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை மையம் “ரெட் அலர்ட்” விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு. விழுப்புரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை மிக கனமழையும், இன்று சென்னை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று எச்சரித்துள்ளது.