மடத்துக்குளம் வட்டாரத்தில் உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க வேளாண் உழவர் நலத்துறை மூலமாக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டாரத்தில் 2022 வருடத்திற்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் பயறு வகை திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் பரப்பளவில் உளுந்து தொகுப்பு செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்பட இருக்கின்றது. இது ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கின்றது. இதற்கான தொகுப்பு செயல் விளக்கத் திடலில் […]