Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா : விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு கடிதம்..!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.. அவசர சட்டத்திற்கு 6 மாதங்களும், சட்ட மசோதாவிற்கு 6 வாரத்திற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

சென்ட்ரல் – மைசூர் வந்தே பாரத் ரயில்… 10 நாட்களில் அமோக வரவேற்பு….!!!!

சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர மீதமுள்ள வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசு இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயிலில் “எக்சிகியூட்டிவ்” சேர்கார் என்ற 2 வகுப்புகள் உள்ளது. இந்த ரயிலின் சேவை தொடங்கிய 10 நாட்களிலேயே பொதுமக்களிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்…. பாஜகவுக்கு சிம்ம சொப்பனம்…! கெத்தாக பேசிய உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இங்கே அக்கா அருள்மொழி அவர்கள் இயக்க வரலாறையும்,  அண்ணன் ஜெயராஜ் அவர்கள் மாநில சுயாட்சி பற்றியும் எவ்வளவு சிறப்பாக உரையாற்றினார்கள். அதையெல்லாம் உள்வாங்கி, நீங்கள் ஒவ்வொருவரும் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்… எப்படி 2019 இல் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் பெற்று தந்தீர்களோ… அதேபோல் அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றி, அவர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி…. தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டிஹால் ரோடு சாமி ஐயர் புது வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். வழக்கமாக சங்கர் தான் தயாரிக்கும் நகைகளை வெளியூர்களுக்கு கொண்டு சென்ற விற்பனை செய்வது வழக்கம். இவரிடம் கடந்த 3 ஆண்டாக மேற்கு வங்கத்தை சேர்ந்த அனிமேஷ் ஹசரே, அவரது மனைவி சோம ஹசரே, உறவினர் சுரஜித் ஹசரே, ஸ்டேயாஜித் ஆகிய 4 பேர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் சங்கர் வீட்டின் மேல் […]

Categories
Tech டெக்னாலஜி

ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்…. அதிக பணம் செலவு செய்யணுமா?… வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

ஸ்மார்ட் போன் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் வரும் தினங்களில் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரிக்கலாம். இதற்குரிய அறிகுறிகளை நிறுவனங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளது. சென்ற முறைகூட நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியது. அந்த அடிப்படையில் அண்மையில் ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தின் விலையை 2 வட்டங்களில் அதிகரித்தது. ஏர்டெல் நிறுவனமானது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மொபைல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கான குறைந்தபட்ச கட்டணத்தை 57 சதவீதம் உயர்த்தி ரூபாய்.155 ஆக புது கட்டணம் நிர்ணயித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி கிட்ட ஆதாரம் இருக்கா…! கேஸ் போட சொன்ன அமைச்சர்… ADMKவுக்கு நெத்தியடி பதில்

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அரசின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கு வகையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, நீங்கள் குற்றசாட்டை அவர் சொல்கிறார் என்றால்,  அதற்கு உரிய ஆதாரங்கள் அவரிடத்தில் இருந்தால் அவர் நீதிமன்றமே தாராளமாக அணுகலாம். நீதிமன்றத்தில் வழக்கு சந்திக்கலாம். நாட்டினுடைய வளர்ச்சியிலே உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருக்கும் என்று சொன்னால்,  அவர்கள் அதற்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் என்று எந்த காலத்திலும் வந்தால் அதை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவனத்தில் “ரூ.1 1/4 லட்சம் மோசடி”…. ஊழியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் பாரத் டோலியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நவீன்குமார்(45) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நவீன் குமார் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் 3 3/4 லட்ச ரூபாயை நவீன்குமார் திரும்ப கொடுத்துவிட்டார். மீதமுள்ள 1 1/4 லட்ச ரூபாயை கொடுக்காமல் நவீன்குமார் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாரத் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலைக்கு 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்… போக்குவரத்து கழகத்தின் தீவிர ஏற்பாடு…!!!!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாள் ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதனை பார்ப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றனர். ஆனால் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று காரணமாக கார்த்திகை தீப விழா  நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடம் டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து 7-ம் தேதி பௌர்ணமி ஆகும். 2 சிறப்பு தினங்களும் அடுத்தடுத்து வருவதால் திருவண்ணாமலைக்கு செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள்  திட்டமிட்டுள்ளனர். மேலும் […]

Categories
பல்சுவை

எல்ஐசி வழங்கும் சூப்பரான பாலிசி…. 10 மடங்கு லாபம் கிடைக்கும் பாதுகாப்பான திட்டம்…. இதோ முழு விவரம்….!!!!

எல் ஐ சி நிறுவனம் தன் வர்ஷா என்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் பயனாளிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என்ற இரண்டு அம்சங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரே ஒரு பிரிமியம் மட்டும் செலுத்தினால் போதும். பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் உயிரோடு இருந்தால் மெச்சூரிட்டி தேதியில் மொத்த தொகையும் உத்திரவாதமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வகைகள் உள்ளன. பத்து லட்சம் ரூபாய்க்கு பிரீமியம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் அதனைப் போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசார அடிப்படையில் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவ்வபோது ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டிற்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகின்ற நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு […]

Categories
மாநில செய்திகள்

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2001-2002 ஆம் கல்வி ஆண்டு மூன்றாவது செமஸ்டர் முதல் தற்போது வரை அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பலரும் பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது மீண்டும் அரியர் வைத்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இனி போலி பில் போட முடியாது…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. ஆனால் அப்போ போது ரேஷன் கடைகளில் பல முறை கேடுகள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொண்டு கள்ளச் சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பது மற்றும் அரிசி மூட்டைகளை மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்வது […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: கமல்ஹாசன் அனுமதி…. உடல்நிலை குறித்து சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் நிலையில் மறுபக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே கமல்ஹாசன் காய்ச்சல் காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், […]

Categories
மாநில செய்திகள்

“பிராங்க் வீடியோ”… 5 youtube சேனல்கள் மீது புகார்… போலீசார் கடும் எச்சரிக்கை…!!!!!

பிராங்க் வீடியோக்கள் எடுக்கும் youtube சேனல்கள் மீது பொதுமக்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் வசித்து வரும் ரோஹித் குமார் என்ற இளைஞர் மத்திய குற்ற பிரிவில் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் 5 youtube சேனல்கள் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிராங்க் வீடியோக்களை எடுக்கும் youtube சேனல்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலகட்டங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை…. என்னைக்கு தெரியுமா?…. தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு…..!!!!

அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அவர்கள்  வைத்துள்ள கோரிக்கை குறித்து அடுத்த மாதம் இரண்டாம் தேதி மதியம் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும். எனவே இந்த பேச்சுவார்த்தையில் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி “… ஊக்கதொகை எவ்வளவு…? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு …!!!!

முதல்வர் ஸ்டாலின் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் போட்டி மற்றும் ஆசிய ஆக்கி போட்டியில் பதக்கங்களை வென்ற 10 வீரர்களுக்கும், குஜராத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற 180 வீராங்கனைகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 190 வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம்..!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்ட மசோதாவின் காலம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசூதா நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. தாளாளரை கைது செய்யும் வரை போராட்டம்….? பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் இ.பி காலணியில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தாளாளரான வினோத்(34) என்பவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து வினோத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்…. உதவி தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை  மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி இடி மின்னலுடன் மிக கனமழை பெய்தது. இந்த மழையால்  குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: கமல் டிசார்ஜ் எப்போது ? – மருத்துவமனை விளக்கம் …!!

மக்கள் நீதி மையத் தலைவரும், நடிகருமான கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காய்ச்சல், சளி, இருமல், பிரச்சனை காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்றைய தினம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் கமல் டிசார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரமானது தெரிவித்திருக்கிறது.  இது தொடர்பாக மருத்துவமனையே  செய்தியை குறிப்பை  வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தூது அனுப்பிய சரவணன்…. பதிலுக்கு ஸ்டாலினின் வாழ்த்து மடல்…. திமுக-வில் இணைவாரா டாக்டர் சரவணன்?…..!!!!!

தி.மு.க-வில் எம்எல்ஏ-வாக இருந்தவர் டாக்டர் சரவணன். சென்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மதுரையில் இவர் போட்டியிட எண்ணி இருந்த தொகுதி திமுக-வின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து கட்சியிலிருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து டாக்டர் சரவணன் பாஜக சார்பில் களமிறங்கி தோல்வி அடைந்தார். எனினும் பாஜக-வில் தொடர்ந்து பயணப்பட்டு வந்தார். இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன் மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜக-வினர் காலணி வீசினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

பொருட்கள் வழங்காமல்…. வழங்கியதாக SMS அனுப்பினால்…. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இவ்வாறு மக்கள் வாங்கும் ரேஷன் பொருட்கள் வாங்கியவுடன் அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு ரேஷன் கடையில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்.  ஆனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாத பொருட்கள் வழங்கப்பட்டதாக SMS வருவதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பொருட்கள் வழங்காமல் வழங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பினால், சம்பந்தப்பட்ட ரேஷன் […]

Categories
மாவட்ட செய்திகள்

டிராக்டர் விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ..!!

டிராக்டர் விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிவாரணம் வழங்கினார் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார். தென்காசி மாவட்டம் சுரண்டையில்  தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று 4 வயது சிறுவன் ராஜாமுகன் மீது மோதியது. இதில்  சம்பவ இடத்திலேயே சிறுவன்பரிதாபமாக உயிரிழந்தான். இதனை தொடர்ந்து இன்று காலை சிறுவன் உடல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக பெற்றோர்கள், உறவினர்கள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து பார்த்த […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!!

EPFO ​​ஊழியர்களுக்கு மத்திய அரசானது ஒரு பெரிய பரிசை வழங்கி இருக்கிறது. அதாவது, PF வட்டிப்பணம் விரைவில் உங்களது கணக்கில் கிரெடிட் செய்யப்படும். 2022-ம் நிதி ஆண்டுக்கான வட்டிப்பணம் உங்களது கணக்கில் வரத் துவங்கிவிட்டது. எனினும் இதற்கு பிறகும் பலரின் கணக்கில் வட்டி தொகை கிரெடிட் செய்யப்படவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக அரசு தரப்பில் கூறியதாவது, சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசானது PFக்கு 8.1% வட்டியை கொடுக்கிறது. இந்த வட்டிவிகிதம் சென்ற […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நாடுகளின் அமைதிக்கு சமர்ப்பணம்…. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பிரார்த்தனை….!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் தற்போது 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பலரும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து  பிரபல  கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்  போப் பிரான்சிஸ்  கூறியதாவது. நடைபெறும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி வீரர்கள், ரசிகர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த நிகழ்வு ஒரு முக்கியமானது. ஏனென்றால் நாடுகளின் சந்திப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“களமிறங்கிய கும்கி யானைகள்”…. பெண்ணை மிதித்து கொன்ற யானையின் அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா வாழவையல் பகுதியில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி வீட்டில் இருந்த போது வனப்பகுதியில் இருந்து வந்த யானை தாக்கியதால் பாப்பாத்தி உயிரிழந்தார். அவரது அண்ணன் படுகாயத்துடன் உயிர் துப்பினர். அந்த காட்டு யானை தொடர்ந்து வீடுகளை உடைத்து உணவு பொருட்களை தின்று நாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா….? கோவிலில் குடும்பத்தோடு சாமி தரிசனம்…. லீக்கான புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு – சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்டம் வன்கொடுமை சிறப்பு சிறப்பு நீதிமன்றமானது 10 பேரை  குற்றவாளியாக தீர்ப்பளித்ததோடு அனைவருக்கும் ஆயுள்  தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை இரத்து செய்யக்கோரி,  யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதே போல கோகுல்ராஜ் தயார் சித்ரா மற்றும் சிபிஐடி தரப்பில் இந்த வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

யாரையும் விடப்போவதில்லை… பா.ஜ.கவில் அதிரடி நடவடிக்கை தொடரும்… அண்ணாமலை பேட்டி …!!!!!!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்  கூறியதாவது, பா.ஜ.கவின் லட்சுமண ரேகையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் விடப்போவதில்லை. மேலும் கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தற்போது தொடங்கி ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. ஆனால் இனிவரும் காலங்களில் களையெடுப்பது உறுதி. பா.ஜ.கவில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் எனவும் பாஜக நாகரிகமான அரசியல் செய்து வருகிறது. மேலும் காயத்ரி ரகுராம் விவகாரத்தில் நான் கருத்து கூற விரும்பவில்லை. தவறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. 3 மாணவிகள் உள்பட 4 பேர் காயம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!!

ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாமண்டூரை சேர்ந்த நமிதா, உத்திரம்பட்டை சேர்ந்த கீதா, ஓச்சேரியை சேர்ந்த பிரேமலதா ஆகிய மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள், ஒரு செவிலியர் என 9 பேர் ஓச்சேரியில் இருந்து ஷேர் ஆட்டோவில் பனப்பாக்கம் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மேலப்புலம் மோட்டூர் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் ஆட்டோ மீது மோதுவது போல […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரயில் பெட்டிகளுக்கு நடுவில் நின்று பயணம்…. வாலிபர்கள் கூறிய “காரணம்”…. எச்சரித்த போலீசார்…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தினமும் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ஆபத்தை உணராமல் சில வாலிபர்கள் 2 ரயில் பெட்டிகளை இணைக்கும் கொக்கி மீது நின்று பயணம் செய்வதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து ரயில்வே போலீசார் சோதனை நடத்தி ரயில் பெட்டியில் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பிரபல கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடரில் நடித்த…. நடிகர் வில்கோ ஜான்சன் காலமானார்….!!!

உலகம் முழுவதும் பிரபலமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடரில் நடித்த வில்கோ ஜான்சன் காலமானார். அவருக்கு வயது 75. இலின் பெய்ன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 1970களில் டாக்டர் ஃபீல்குட் என்ற இசைக்குழுவில் கிடார் கலைஞராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எச்.ராஜா அண்ணா கிட்ட கேளுங்க…! அண்ணாமலை போன் காலில்…. FINE சொல்லி அசால்ட் கொடுத்த காயத்ரி ரகுராம் ..!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து,  சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ? என்னை பதில் சொல்லவே விடல. இல்லை […]

Categories
உலக செய்திகள்

OMG: தொழுகை செய்ய வந்த குடும்பம்…. திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு…. தீவிர விசாரணையில் போலீசார்…..!!!!

பிரபல நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான ஆப்கானிஸ்தானின்  தலைநகரில் முஸ்லிம்களின் வழிபாட்டு  தளம்  ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று ஏராளமானோர் தொழுகை செய்வதற்காக வந்திருந்தனர். அப்போது அங்கு திடீரென நுழைந்த சிலர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு அண்ணாமலை ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு அண்ணாமலை பணம் கொடுக்காமல் பொதுமக்களை ஏமாற்றியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அண்ணாமலையை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகன்கள் தான் காரணமா….? ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கோட்டை நேரு நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோலார்பேட்டையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நரேஷ் குமார்(27), நிர்மல் குமார்(25) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மகன்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த அண்ணாமலை விடுமுறை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உறவினர்கள் ஏற்று கொள்ளவில்லை” காதல் தம்பதி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதியில் ராஜசேகர்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் கௌசல்யா(28) என்ற பெண்ணை ராஜசேகர் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென ராஜசேகருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். ஆனால் பெற்றோரும், உறவினர்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மன […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சமையல் அறையிலிருந்து பரவியதா…? மெக்கானிக் கடையில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை…!!!

மெக்கானிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் துப்புகுட்டிபேட்டை பகுதியில் ஷக்கீர் என்பவருக்கு சொந்தமான மெக்கானிக் கடை உள்ளது. அதற்கு அருகே சிறிய ஹோட்டலும் இருக்கிறது. நேற்று முன்தினம் காலை மெக்கானிக் கடையின் மேற்கூரை வழியாக புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

350 ரூபாய் பேனருக்கு 7900 பில் ? DMK மீது பரபரப்பு புகார்… அதிரடி காட்டிய எடப்பாடி …!!

ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி அமைப்பில் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பணிகள் எல்லாம் விளம்பரப் படுத்துகிறார்கள். அந்த விளம்பரம் படுத்துகின்ற பேனர் விலை 350 ரூபாய், அதற்கு வந்து 7906 ரூபாய் பில் போட்டுள்ளார்கள். விளம்பர பேனருடைய தோராய மதிப்பு 350 ரூபாய் இருக்கும். ஆனால் 7906 உள்ளாட்சியில் இருந்து அரசு உத்தரவு போட்டு, ஒரே கம்பெனிக்கு  கொடுத்து இருக்கிறார்கள். இது தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

10 வீடுகளில் திடீர் விரிசல்…. நில அதிர்வு ஏற்பட்டதா…? அதிகாரிகளின் தகவல்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோக்குடல் கிராமத்தில் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, இரவு நேரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த அளவு நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம். இதனால் சமுதாயக்கூடம் வீடுகள் உட்பட 10 கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டது என கூறியுள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தரைமட்ட கிணற்றுக்குள் விழுந்த பசு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வத்தனாக்கோட்டை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சுப்ரமணியனுக்கு சொந்தமான ஒரு பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தரைமட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் உடனடியாக தீயணைத்து துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி பசு மாட்டை பத்திரமாக மீட்டனர்.

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மங்களூரு குண்டுவெடிப்பு – பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு ..!!

மங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2  பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து நடந்த விசாரணையில்,  ஆட்டோ குண்டுவெடிப்பு எல்.இ.டி. வெடிபொருளால் நிகழ்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் பல்வேறு உண்மையான தகவல்களை திரட்டி வருகின்றனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… தமிழ் படங்களை வெளியிடுவதில் அரசியல் சிக்கல் இருக்கிறதா….? நடிகர் விஷ்ணு விஷாலின் அதிரடி பேட்டி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் தற்போது ‘கட்டா குஷ்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு விஷால், “இந்த படத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறித்து […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதத்திற்கு அலட்சியம் ஒரு பதிலாக இருக்கக் கூடாது…. இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி திட்டவட்டம்….!!!!

ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது. கம்போடியாவில் நேற்று ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜு நாத் சிங் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது. ஒரு நாட்டின் எல்லையை தாண்டி பயங்கரவாதம் என்பது சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவைப்படும் மிகப்பெரிய அச்சுறுத்துதல். ஆனால் அதற்கு அவர்களது அலட்சியம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜவான் மற்றும் பேரரசு ஒரே கதையா….? தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரின் அதிரடி விளக்கம்?….!!!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இவர் தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் பாலிவுடில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் கதையும் விஜயகாந்த் நடித்த பேரரசு திரைப்படத்தின்‌ கதையும் ஒன்றுதான் என்று சர்ச்சை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரை தேர்தெடுப்போம்: அணிலை போல செயல்படுவோம்: டிடிவி அதிரடி முடிவு …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலை நோக்கி தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதற்கான பணிகளில் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற பணியில் நாங்களும் அணிலைப் போல பணியை சிறப்பாக ஆற்றுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தலை இல்லாத முண்டமாகஅதிமுக கட்சி இருக்கிறது. திரு.பன்னீர்செல்வம் ஒரு பக்கமும், திரு.பழனிச்சாமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ராகவா லாரன்ஸின் அதிகாரம் படம் நிறுத்தப்பட்டதா….? படக்குழுவினரின் பரபரப்பு விளக்கம்….!!!!

ராகவா லாரன்ஸ் நடித்த “அதிகாரம்” திரைப்படம் டிராப் ஆனதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்திய நடன பயிற்றுனர், நடிகர் மற்றும் இயக்குனர் என திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கிறவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களை இயக்கியுள்ளார். தற்போது காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் நடிகர் அஜய் குமார் நடிப்பில் “லக்ஷ்மி” என்ற பெயரில் ரீமேக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 1 கோடி கொடுங்க..! விசிக போராட முடிவு .. திருமா அதிரடி அறிவிப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது. அவர்கள் வாக்குறுதி அளித்தபடி இழப்பீடும் வழங்கவில்லை, […]

Categories
தேசிய செய்திகள்

தட்டம்மை பாதிப்பு: புதியதாக 30 பேருக்கு உறுதி…. ஒருவர் இறப்பு…. வெளியான தகவல்…..!!!!

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் தட்டம்மை பாதிப்பானது அதிகளவில் பரவுகிறது. அதன்படி புதியதாக 30 நபர்களுக்கு தட்டம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே நேரம் 22 நோயாளிகள் சிகிச்சை முடிந்து திரும்பி சென்று உள்ளனர். மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்குரிய அடிப்படையில் 156 நபர்களுக்கு புதியதாக தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த வருடத்தில் இதுவரையிலும் மும்பையில் 233 நபர்களுக்கு இந்த பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 8 மாத ஆண்குழந்தை […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

#BREAKING: 50ஜிபி இலவச டேட்டா – பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை…!!

வாட்ஸ் அப்பில் சமீப காலமாக செல்போன்களில் 50 gb டேட்டா இலவசம் என்று குறுந்தகல்கள் வருவதை பார்த்திருக்கிறோம்.  அது போல இலவச டேட்டா என்று வரும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இலவச டேட்டா என வரும் மெசேஜில் உள்ள லிங்கை அழுத்தினால் மொபைல் போன் ஹேக் ஆகிவிடும். அமேசான் உள்ளிட்ட எந்த நிறுவனமும் இலவச டேட்டாவை வழங்கவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |