Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த “10 வயது சிறுமி”…. அத்துமீறி நடந்து கொண்ட தொழிலாளி…. நீதிமன்றம் அதிரடி…!!!

போக்சோ சட்டத்தில் கைதான தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான அசோகன்(58) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவர்…. முட்டி தூக்கி வீசிய காட்டெருமை…. பீதியில் பொதுமக்கள்…!!!

காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி ஊத்து கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் நேற்று காலை தனது வீட்டிற்கு பின்புறம் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டெருமை பாலகிருஷ்ணனை முட்டி தாக்கி தூக்கி வீசியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காட்டெருமையை விரட்டி பாலகிருஷ்ணனை மீட்டு பெரும்பாறையில் இருக்கும் அரசு ஆரம்ப […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்மாய் கரையை சுத்தம் செய்த பெண்கள்…. வண்டுகள் கடித்து 12 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

விஷ வண்டுகள் கடித்து காயமடைந்த 12 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராங்கியம் கிராமத்தில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கண்மாய் கரையை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென புதர் செடிக்குள் இருந்து வந்த விஷ வண்டுகள் பெண்களை துரத்தி கடித்தது. இதனால் அவர்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் வண்டுகள் கடித்ததால் 12 பெண்கள் காயம் அடைந்தனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி கடற்கரையில் 80 கிலோ ராட்சத பச்சைக் கடல் ஆமை… உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது..!!!

தூத்துக்குடி கடற்கரையில் 80 கிலோ எடை கொண்ட ராட்சத பச்சை கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. மன்னர் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவில் காணப்படக்கூடிய ஒரு அரிய வகை உயிரினமான பச்சை கடல் ஆமை தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை உயிரிழந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனச்சரகர் தலைமையிலான குழு இறந்து கிடந்த பச்சை கடல் ஆமையை மீட்டார்கள். இந்த ஆமை சுமார் 80 கிலோ […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே, போன் பே, பேடிஎம் பயனர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்சிபிஐ) ரிசர்வ் வங்கியிடம் டிசம்பர் 31ஆம் தேதி முதல் மற்ற செயலிகள் வாயிலாக செய்யப்படும் பரிவர்தனைகளுக்கு வரம்பு விதிக்கப்பட கோரிக்கை விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள்பே, போன்பே மற்றும் பேடியம் ஆகிய செயலிகளுக்கு இன்று வரை பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு என்று எதுவுமில்லை. இப்போது வங்கி யூபிஐ செயலிகள் வாயிலாக செய்யப்படும் பரிவர்த்தனைக்கு வரம்பு நிர்ணயிப்பது பற்றி எந்த வித முடிவையும் எடுக்கவில்லை. யூபிஐ பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதற்குரிய காலக்கெடுவை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்… நாமக்கல் ஆட்சியர் திடீர் ஆய்வு…!!!

எருமைப்பட்டி அருகே இருக்கும் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே இருக்கும் ரெட்டிபட்டி ஊராட்சி கூலிபட்டி கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு இருப்பதையும் குழந்தைகள் அந்த உபகரணங்களை பயன்படுத்தி விளையாடியதையும் பார்வையிட்டார். இதன் பின் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெண்களை பார்த்ததும் அநாகரீகமான சைகை!… குரங்கு செய்த அட்டுழியம்….. வனத்துறை அதிரடி நடவடிக்கை…..!!!!

பொதுவாக குரங்குகள் சில்மிஷம் மற்றும் குறும்புத்தனம் செய்யும் விலங்காக பார்க்கப்படுகிறது. மேலும் குரங்கிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பலபேர் உயிரிழந்த சம்பவங்கள் குறித்தும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏகப்பட்ட குறும்புத்தனம் மற்றும் கொடூரம் ஆக நடந்து கொண்ட ஒரு குரங்கு இப்போது கான்பூரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஆயுள்தண்டனை அனுபவிக்கிறது. இவ்வழக்கு தனித்துவமாக மாறி இருக்கிறது. இந்த குரங்கினுடைய பெயர் காலியா ஆகும். காலியா மிர்சாபூரில் இருந்து பிடிபட்டு கான்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. காலியா என்றாலே மிர்சாபூர் மக்களிடையே எப்போதும் அச்சம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை துரத்தி தந்ததால் குத்திய “காட்டு யானை”…. அலறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் கேரளா அரசு பேருந்து மளுக்கப்பாறை பகுதியில் இருந்து சாலக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை பேருந்தை வழிமறித்து துரத்தியதால் ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். ஆனாலும் துரத்தி வந்த காட்டு யானை கோபத்தில் பேருந்தின் முன் பகுதியில் தந்ததால் குத்தியது. இதனால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டதும் யானை அங்கிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…. பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் மீட்பு…. 2 மணி நேரம் போராட்டம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய்(20), ரவிக்குமார்(19), சிரஞ்சீவி(18) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களும் அதே பகுதியில் வசிக்கும் 11- ஆம் வகுப்பு மாணவர் மணிகண்டன், தனியார் நிறுவன ஊழியர்கள் சதீஷ்குமார், கணேஷ்குமார், சரவணன் ஆகிய 7 பேரும் குண்டுக்கல் துறை பகுதியில் பவானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 7 பேரும் ஆற்றின் குறுக்கே சாய்ந்த மரத்தின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டெருமை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அப்போது வனவிலங்குகள் நகர் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கான்வென்ட் ரோடு, டெப்போ ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் நுழைந்த காட்டெருமை அங்கும் இங்கும் உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து சாலையின் நடுவே தேங்கி இருந்த தண்ணீரை குடித்து தாகம் தீர்த்த காட்டெருமை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றது. எனவே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்வேலியில் சிக்கி கடமான் பலியான வழக்கு…. வாலிபருக்கு நூதன தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பிரான்குளத்தில் இருக்கும் தனியார் தோட்டத்திற்குள் நுழைந்த கடமான் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடமானின் உடலை பிரேத பரிசோதனை செய்து குழி தோண்டி புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், பெரும்பள்ளம் பகுதியில் வசிக்கும் கருப்புதுரை(23) என்பவர் மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட கருப்புதுரை ஜாமீன் கேட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கார்த்திக் கருப்புதுரைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடம்…. தற்கொலைக்கு முயன்ற உடற்கல்வி பயிற்சியாளர்…. பரபரப்பு சம்பவம்…!!!

உடற்கல்வி பயிற்சியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மகளிர் கல்லூரியில் உடற்கல்வி பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த தீபக் நேற்று நட்சத்திர ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீபக் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி…. பரிசோதனை முடிவில் “ஷாக்”கான தாய்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி தனது தாயிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு தனது மகளிடம் விசாரித்த தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருக்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

17 வருடங்களுக்குப் பிறகு… மாவுரெட்டி சின்ன ஏரி… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

பரமத்தி அருகே இருக்கும் மாவுரெட்டி சின்ன ஏரி 17 வருடங்களுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி அருகே இருக்கும் மாவுரெட்டி சின்ன ஏரி இருக்கின்றது. இந்த ஏரிக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் இருந்து உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு பரமத்தி வேலூர் அருகே இருக்கும் இடும்பன் குளத்தை வந்தடைகின்றது. இடும்பன் குளம் நிரம்பி வழிந்தோடி பரமத்தி வேலூர் அருகே இருக்கும் நன்செய் இடையாறு காவிரியில் கலக்கின்றது. மழைக்காலங்களில் திருமணிமுத்தாறு இருக்கும் அதிகப்படியான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜல்லி கற்கள் கொட்டிய போது தீ விபத்து… சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ள நாகமங்கலம் ஊராட்சியில் அரசு பட்டுபண்ணை அருகே டாட்டா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜல்லி கற்கள் ஏற்றி கொண்டு டிப்பர் லாரி கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மபுரியைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் ஜல்லி கற்களை கொட்டும் போது மேலே சென்ற மின்சார கம்பியில் லாரி உரசியதால் திடீரென […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்…. கொந்தளித்த பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பட்டி ஊராட்சியில் இருக்கும் ரெட்டியார் தெருவில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 350 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 15-ஆம் தேதி ஊராட்சி தலைவர் பழனிவேல் மற்றும் சிலர் துளையிட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்து 7 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மகளின் படிப்பு செலவிற்காக வாங்கிய பணம்…. கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள அரவேனு கீழ்கேரி கிராமத்தில் சந்தானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சர்மிளா தனது மகளின் படிப்பு செலவிற்காக கோர்ஹவுஸ் பகுதியில் வசிக்கும் பூங்கொடி என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். அதற்கு பூர்த்தி செய்யப்படாத இரண்டு காசோலைகள், ப்ரோ நோட் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றுக் கொண்டு பூங்கொடி அந்த […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“லவ் டுடே” பட ஹீரோவை…. அலேக்காக தூக்கிய ரசிகர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான புகைப்படம்….!!!!

சென்ற சில வாரங்களுக்கு முன் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகியது. இதற்கு முன் கோமாளி என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி இருந்த பிரதீப் ரங்கநாதன், இப்படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களம் இறங்கினார். அதற்கு பலனாக இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய காதலர்கள் பல பேர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து, இளைஞர்களை மட்டுமல்ல குடும்பங்களையும் கூட இப்படத்தைப் ரசித்துப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் அசீமின் உண்மை குணம் எது?… குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு… நடிகர் அருண்குமார் ராஜன் சொன்ன பதில்…..!!!!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதல் தன்னைத்தானே பெரிய ஆள் என காட்டிக்கொள்ளும் அடிப்படையில் பெருமை பேசி அடிக்கடி பல்பு வாங்குகிறார் அசீம். மேலும் சக ஹவுஸ்மேட்டுகளில் யாரையாவது பிடித்து சண்டை போடுவது, கத்திபேசுவது, பெண்களிடம் அதிகாரத்தை காட்டுவது என இன்று வரை சக போட்டியாளர்களை அமைதியாக்கி வென்று வருகிறார். எனினும் டாஸ்க்குகளில் பெரியதாக பெர்பாமன்ஸ் காட்டுவதில்லை. அசீமை பிக்பாஸ் வீட்டில் மற்றும் வெளியில் வெறும் வாய்சவுடால் என்றே பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் தன்னை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு… இளையான்குடி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம்…!!!

வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு சிறப்பு முகாம் இளையான்குடி ஊராட்சியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழில் மையம் மூலமாக வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு சிறப்பு முகாம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இந்த சிறப்பு முகாமில் பங்கேற்ற உதவி இயக்குனர் சக்திமாய் மாவட்ட தொழில் மையம் மூலமாக கிடைக்கும் கடன்கள் மற்றும் மானியம் குறித்து பேசினார். இதில் மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

சர்ச்சை ஆடியோ விவகாரம்: நாங்க அக்கா-தம்பி போல் பழகுறோம்!…. டெய்சி, சூர்யா கொடுத்த விளக்கம்…..!!!!!

பாஜக-வில் சர்ச்சை ஆடியோ வெளியாகிய விவகாரத்தில் டெய்சி சரண், சூர்யாசிவா போன்றோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித் தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் நிரூபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது “அண்மையில் வெளியாகிய ஆடியோ விஷயம், எதிர்க் கட்சிகளுக்கு கிடைத்த அவல் ஆகும். எனினும் பா.ஜனதாவில் நாங்கள் சேர்ந்த நாள் முதல் அப்படி இல்லை. எங்கள் பிரச்சனையை நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு கொண்டுவந்து விட்டோம். இவற்றில் யாருடைய வற்புறுத்தலும் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்தி திணிப்பு….. “87 வயது திமுக பிரமுகர் தீக்குளித்து தற்கொலை”….. இடியென வந்த செய்தியால் கலங்கி நிற்கும் முதல்வர் ஸ்டாலின்… ஆழ்ந்த இரங்கல்.!!

சேலம் மாவட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக 87 வயது முதியவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி […]

Categories
உலக செய்திகள்

திருடனை மடக்கி பிடித்த இந்தியர்…. பாராட்டு சான்றிதழ் வழங்கிய துபாய் காவல்துறை…!!!

துபாயில் திருடனை பிடித்துக்கொடுத்த இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. துபாயின் தெஹ்ரா மாவட்டத்தில் 42, 50,000 திர்ஹாம் பணத்துடன் இருவர் சென்றிருக்கிறார்கள். அவர்களின் பின்னால் சென்ற ஒரு நபர் திடீரென்று அந்த பையை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டார். உடனே இருவரும் சத்தம் போட்டிருக்கிறார்கள். அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த கேஷுர் காரா சவாடா காருகேலா என்ற 32 வயது இளைஞர் அந்த திருடனை ஓடிச்சென்று பிடித்து விட்டார். அதன் பிறகு, காவல்துறையினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியல்…. அசத்தலான ப்ரோமோ ரிலீஸ்….!!!!

சீரியல் நடிகை ஆலியா மானசா மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதன் பிறகு இவர் விஜய் டிவி பக்கம் வந்தார். பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவான ‘ராஜா ராணி’ சீரியலில் இவர் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து ராஜா ராணி 2 சீரியலில் கமிட்டான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நசுவினி அணையை விரிவு படுத்த வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை… உறுதியளித்த உதவி ஆட்சியர்…!!!

நசுவினி அணையை விரிவுபடுத்தி பாசன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க தஞ்சை உதவி ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் பிரபாகர் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சத்தியசாமி மற்றும் விவசாயிகள் நசுவினி ஆற்றில் இருக்கும் அணையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். இதையடுத்து உதவி ஆட்சியர் அணையை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் புகார்”….. மெல்ல மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து தீர்த்துக்கட்ட சதி திட்டம்….. சரிதா நாயர் பகீர் குற்றச்சாட்டு…..!!!!!!

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனர் அமைத்து தருவதாக கூறி பல லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் படி தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சரிதா நாயர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. கேஜிஎஃப் தயாரிப்பாளர்களுடன் இணைந்த நயன்தாரா….. விரைவில் வெளியாகும் மாஸ் அறிவிப்பு….!!!!!!

நடிகை நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டமான திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் படக்குழுவினரிடமிருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தல, தளபதி என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் நடித்துள்ள கோல்ட் கனெக்ட் என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளுக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து நயன்தாரா 75 மற்றும் இறைவன் போன்ற திரைப்படம் தயாராகியுள்ளது. மேலும் நடிகை நயன்தாரா புதியதாக ஒரு படத்தில் கமிட் […]

Categories
உலக செய்திகள்

இந்திய ராணுவ மூத்த தளபதி கூறுவது கனவு…. அவரின் பேச்சு மாயை…. பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கை…!!!

பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை ஆக்கிரமிக்க தயார் என இந்தியாவின் ராணுவ மூத்த தளபதி தெரிவிப்பது மாயை எனக் கூறியுள்ளது. பாதுகாப்புத்துறை மந்திரியான ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன, இஸ்லாமாபாத் அதற்கான விலையை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து சமீபத்தில் இந்திய ராணுவ வடக்கு பிரிவு தளபதியான உபேந்திர திவேதி தெரிவித்ததாவது, இந்திய அரசின் எந்த உத்தரவையும் செயல்படுத்துவதற்கு இந்திய ராணுவம், தயார் நிலையில் இருக்கிறது. காஷ்மீரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உலோக சாமி சிலைகள் பதுக்கல்… கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவல்… அதிரடி நடவடிக்கை..!!!

சிலைகள் மற்றும் ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பழங்கால உலோக சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் பழங்கால சிலைகள் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சோதனை செய்ததில் முறையான ஆவணங்கள் இல்லாமல் உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து இதுபற்றி […]

Categories
உலக செய்திகள்

இருளில் மூழ்கிய உக்ரைன்…. 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு…. அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிப்படுவதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. சமீப நாட்களாக ரஷ்ய நாட்டின் ஆளில்லா விமானம், ஏவுகணைகள், உக்ரைன் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கி வருகிறது. உக்ரைன்  நாட்டின் மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவால் அழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

போதும் இவருக்கு கொடுத்த சான்ஸ்..! தூக்கிட்டு சாம்சனை கொண்டுவாங்க…. இனியும் சேத்திங்கன்னா ஐசிசி கப் நமக்கு இல்ல…. ஓப்பனாக சொன்ன முன்னாள் வீரர்..!!

ரிசப் பண்டை அணியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக சாம்சனை கொண்டு வருவது சரியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரீதிந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.. இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நேற்று ஆக்லாந்தில் மோதியது.. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஷிகர் தவான், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“துணிவு” திரைப்படத்தின்….. செம மாஸ்ஸான 3 பாடல்கள்…. அடுத்தடுத்து வெளியீடு….!!!

நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின் மூன்று பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது.  அஜித், போனி கபூர், எச்.வினோத் கூட்டணியில் “துணிவு” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் பொங்கலையொட்டி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது இந்த திரைப்படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தான் “துணிவு” திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் ஹீரோயினியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மோடி அரசே..! இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரமுகர் தற்கொலை… சேலத்தில் பரபரப்பு..!!

மேட்டூரில் இந்தி திணைப்பை எதிர்த்து திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. சேலம் மேட்டூர் அடுத்த தாழையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தங்கவேல் (வயது 85) உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.. மேட்டூர் அடுத்துள்ள பி.என் பட்டி பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”என்னைப்போலவே அவர் ஒரு சினிமா நேசர்”…. இசை வெளியீட்டு விழாவில் கமல் புகழாரம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான’ விக்ரம்’ படத்தில் இவரின் மிரட்டலான வில்லன் வேடம் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இவர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். ‘டிஎஸ்பி’ […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானின் ஆதரவு வேண்டும்… இலங்கையில் நடக்கும் போராட்டம்…!!!

இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் வெளியில் மும்பை தாக்குதலை குறிப்பிட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதி அன்று தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். அந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்த சிலர் உட்பட 166 பேர் பலியாகினர். தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் 9 பேரை பாதுகாப்பு படையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உலக மரபு வார விழா கொண்டாட்டம்… ராமநாதபுரத்தில் தொல்லியல் கருத்தரங்கம்…!!!!

ராமநாதபுரத்தில் தொல்லியல் கருத்தரங்கம் நடைபெற்றது. தொல்லியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் வருடம் தோறும் நவம்பர் 15 முதல் 25 வரை உலக மரபு வார விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் ராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியல் கல்லூரியும் இணைந்து தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தியது. இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி தாளாளர் தேவ மனோகரன் மார்ட்டின் தலைமை தாங்க கல்லூரி முதல்வர் வரவேற்றார். கருத்தரங்கத்தில் தொல்லியல் தடையங்கள் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

ஹேக்கர்களுக்கு போட்டி…. அதுவும் 1 லட்சம் பரிசுத்தொகை காத்திருக்கு…. காவல்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை காவல் துறையானது 8 தலைப்புகளின் கீழ் ஹேக்கர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் பரிசை பெறும் அணிக்கு ரூபாய்.50,000, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 30,000, 3ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய்.20,000 என வழங்கப்படும். தினசரி அதிகரித்து வரக்கூடிய குற்றங்களை தடுக்க பல வழிமுறைகளை காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். இதற்கிடையில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகிப்பது சிசிடிவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. வடிவேலுவின் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு….!!!!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்த்ராஜ் , ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லைக்கு இன்று பிறந்தநாள்….. பிரபல இயக்குனர் உருக்கமான பதிவு….!!!!

நடிகை சித்ரா மக்கள் தொலைக்காட்சியில் விஜே வாக தனது கேரியரை தொடங்கினார். இதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சின்ன பாப்பா பெரிய பாப்பா, மன்னன் மகள், டார்லிங் டார்லிங், வேலுநாச்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதில் பாண்டியன் ஸ்டார் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் கால்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் ஹேமந்த் என்பவரை கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. ஒவ்வொரு மாதமும் ஒன்னு…. சூப்பர் புகைப்படத்தை பகிர்ந்த மகாலட்சுமி….!!!!

சின்னத்திரை சீரியல்களின் மூலம் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவர் வில்லி கதாபாத்திரங்களில் அசத்தலாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முன்னணி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே விவாகரத்தான நிலையில் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். திருமணத்திற்குப் பிறகு அவ்வப்போது இருவரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: பெண்கள் குளிப்பதை எட்டி பார்த்த அமுதவாணன்…. ரெட் கார்ட் கொடுங்க…. கோரிக்கை வைத்த நெட்டிசன்கள்….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அமுதவாணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். மேலும், இவர் பாலா இயக்கத்தில் ரிலீசான ‘தாரை தப்பட்டை’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் மீது ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள். ஏனெனில், இவர் மைக்கை கழட்டி […]

Categories
பல்சுவை

என்ன ஒரு பாசம்!…. நடுவில் சிறுவன்!…. சுற்றி நாய்க் குட்டிகள்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

நாய்கள் நன்றி மறப்பதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அது நம் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கும் என்பதிலும் சந்தேகத்திற்கு இடமில்லை. அதை உணர்த்தும் அடிப்படையில் தற்போது  இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பலரின் கவனங்களை ஈர்த்துள்ளது. தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தரையில் படுத்து இருக்கிறான். அப்போது அவனை சுற்றியும், மேலேயும் கொழுகொழு வென்று கிட்டத்தட்ட 4 நாய்குட்டிகளும், ஒரு பெரிய நாயும் நிற்கிறது. அந்த நாய்க் குட்டிகள் சிறுவனை தங்களது […]

Categories
Uncategorized

பான் கார்டுடன் ஆதார் இணைக்க காலக்கெடு…. அதற்குள் வேலையை முடிங்க…. இல்லனா பான் கார்டு முடக்கப்படும்….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரி […]

Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ தேர்வில் முக்கிய மாற்றம்…. இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே…. வெளியான தகவல்….!!!!

ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ மெயின் தேர்வை இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. கொரோனா காலத்தில் நான்கு முறை ஜேஇஇ தேர்வு நடத்தப்பட்டது. பிறகு இந்த ஆண்டு இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்டது. இந்நிலையில் எதிர்காலத்திலும் இதே முறையில் தேர்வை நடத்த மாநில அரசுகளுடன் தேசிய தேர்வு முகமை ஆலோசித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறைந்த ஜெயலலிதாவின் அந்த நிலைமைக்கு தினகரன் தான் காரணம்!…. எம்.பி சி.வி.சண்முகம் திடீர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

விழுப்புரத்திலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எம்.பி சி.வி.சண்முகம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் எம்.பி சி.வி.சண்முகம் பேசியதாவது “அ.தி.மு.க-வை கட்டுப்படுத்தவும், ஆலோசனை கூறவும் பொதுக்குழு இருக்கிறது. அ.தி.மு.க-வின் பொதுக் குழுதான் உச்சபட்ச தலைமை. அந்த பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன கூறுகிறாரோ அதனைத் தான் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். டிடிவி தினகரன் வைத்து இருப்பது கட்சியல்ல கூட்டம் ஆகும். தினகரனை நம்பி சென்ற 18 […]

Categories
உலக செய்திகள்

FIFA: வோடஃபோன் ஐடியா புதிய சலுகைகள்…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!!

ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை முன்னிட்டு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜியோ ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் தற்போது vodafone idea நிறுவனமும் ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 2,999 ரூபாய்க்கு (7 நாட்கள், 2 ஜிபி டேட்டா, 200 நிமிடங்கள் வாய்ஸ் கால்) , 3,999 ரூபாய்க்கு ( 10 நாட்கள், 3 ஜிபி, 300 நிமிடங்கள்), 4,999 ரூபாய்க்கு (14 நாட்கள், 5 ஜிபி, […]

Categories
வேலைவாய்ப்பு

பிஇ, பிடெக், எம்பிஏ படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.40,000 சம்பளத்தில்…. BDL நிறுவனத்தில் வேலை….!!!!!

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Management Trainee காலி பணியிடங்கள்: 37 கல்வித் தகுதி: B.E, B.Tech, MBA, முதுகலை டிப்ளமோ வயது: 31- க்குள் சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000 தேர்வு: எழுத்து தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 28 மேலும் இது குறித்த கூறுதல் இடங்களுக்கு https://bdl-india.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
தேசிய செய்திகள்

அய்யோ இப்படி ஒரு கொடுமையா?….. நாயின் கண்களை தோண்டியெடுத்த கொடூரம்…. அட்டூழியம்….!!!!

வளர்ப்பு நாயின் கண்களை தோண்டி எடுத்து தெருவில் விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பட்டாம்பியில் பிரபல ஓவியர் துர்கா மாலதி என்பவரின் வளர்ப்பு நாய் கடத்தப்பட்டு அதன் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாகு என்ற வளர்ப்பு நாயை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் காணவில்லை. வீட்டார் அக்கம் பக்கத்தில் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று வீட்டின் கேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

நாடகம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு!…. அதர்வா படத்தின் திரைவிமர்சனம் பற்றி ஓர் அலசல்…..!!!!!

களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய டிரைக்டர் சற்குணம் நடிகர் அதர்வாவுடன் 2வது முறையாக இணைந்துள்ள படம் பட்டத்து அரசன். நடிகர் அதர்வாவுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ் கிரண் நடித்து இருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார், ஆஷிகா ரங்கநாதன், ஜெய பிரகாஷ், சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். கபடி விளையாட்டு வீரராக வாழ்ந்து ஊருக்கு பெருமைசேர்த்த பொத்தாரியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தவறு செய்த இந்தியா…. “6 – 7 பந்துவீச்சாளர்களுடன் சென்றிருக்க வேண்டும்”….. இங்கிலாந்து முன்னாள் வீரர் டுவிட்.!!

இந்திய அணி குறைந்தது 6 அல்லது 7 பந்துவீச்சாளர்களை வைத்திருக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் […]

Categories

Tech |