Categories
அரசியல்

#BREAKING: மளமளவென்று சரிந்த தங்கம் விலை…. உடனே கிளம்புங்க…!!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்ததால், பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39, 328க்கும், கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,916க்கும் விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ. 68க்கும், கிலோ வெள்ளி ரூ.68,000க்கும் விற்பனையாகிறது.

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு…. 6 மாவட்டங்களில் மழை…. வெளியில குடை எடுத்துட்டு போங்க…!!!

தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மற்றும் தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே உடனே இதை செஞ்சிடுங்க…. தமிழக அரசு முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆனபின்பும் திட்டம் தொடங்கப்படவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கபிலன் வைரமுத்து எழுதிய புது நாவல்”…. வெளியிட்ட டிரைக்டர் பாரதிராஜா….!!!!!

எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியருமான கபிலன் வைர முத்துவின் புது நாவலை டிரைக்டர் பாரதி ராஜா சென்னையில் வெளியிட்டுள்ளார். ஆகோள் என பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இன சட்டம் பற்றி ஒரு நவீன அணுகு முறையை முன்வைக்கிறது. இந்த நாவலானது நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக கொண்டு எழுதப்பட்டு உள்ளது. கடந்த 1920ம் வருடம் கைரேகை சட்டத்துக்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கியமான பகுதியாக இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஆகோள் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… வங்கிக்கணக்கில் ரூ. 1000 பொங்கல் பரிசு பணம்?….. வெளியான அசத்தல் அறிவிப்பு?….!!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 மாதம் உதவி தொகை போன்றவற்றை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ரேஷன் அட்டை வைத்திருக்கும் 14.60 லட்சம் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு  மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பிறகு ஆதார் அட்டை அடிப்படையில் 2.20 […]

Categories
மாநில செய்திகள்

“10,000 குடியிருப்பு தாரர்களுக்கு ரூ. 24,000 உயர்த்தப்பட்ட கருணைத்தொகை”…. அமைச்சர் அன்பரசன் அறிவிப்பு….!!!!!

சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் லலிதாபுரம், காமராஜ் காலனி, கருமாங்குளம், டாக்டர் தாஸ் காலனி, வன்னியபுரம் மற்றும் ஆன்டிமானிய தோட்டம் பகுதிகளில் மறுக்கட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட திட்டப் பகுதிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் த.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1970-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் குடிசை பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?…. அமைச்சராகும் உதயநிதி?…. ஹிண்ட் கொடுத்து உறுதி செய்த அமைச்சர்?….!!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று ஒன்றரை வருடங்களாகும் நிலையில் அமைச்சரவையில் புதிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது தமிழக முதல்வரின் ஸ்டாலின் ஆட்சியின் கீழ் 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாக திறமையின்றி  செயல்படும் அமைச்சர்கள் சிலரை தூக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

“சொத்து பாதுகாப்பு குழு செயலாளர்”…. திமுகவில் நிதி அமைச்சர் பிடிஆருக்கு புதிய பதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!!!

திமுக கட்சியில் அண்மையில் பொதுக்குழு கூட்டமும், 15-வது உட்கட்சி தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட  நகரம், பேரூர், ஒன்றிய மாநகர், கிளைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதேபோன்று திமுக கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் அவை தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் போன்றவர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. தற்போது திமுக கட்சியில் தேர்வு செய்யப்பட்ட ‌பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்களில் இவர்களுக்கு முன்னுரிமை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் நேற்று முதல் தொடங்கியது. இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று இணைப்பு செய்துகொள்ளலாம். இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“100% உறுதி”…. பிற்பகல் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை மது விற்பனை”…. தமிழக அரசிடம் கோர்ட் சரமாரி கேள்வி….!!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே ரமேஷ் ஆகியோர் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் தமிழகத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யும் நேரத்தை குறைக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் மதுபான கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்போடு ஆதார் இணைப்பு….. இதை செய்தால் கடும் நடவடிக்கை…. மின்வாரியம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களுக்கு இடமில்லை”…. ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் ஸ்பீச்…..!!!!!

கோவாவில் நடந்த 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. இதனை முன்னிட்டு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அத்திரைப்பட இயக்குநர் ஞானவேல் பேசியதாவது “சட்டச் செயலாக்கம், நீதி பரிபாலனத்திலுள்ள குறைபாடுகளை துணிச்சலான முறைகளில் படமாக சித்தரித்த ஜெய்பீம் வெறும் வார்த்தை அல்ல அது ஒரு உணர்வு ஆகும். அத்துடன் விளிம்புநிலை மக்களுக்காக டாக்டர் பிஆர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது. ஜெய்பீம் திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கற்பனைக்கு எட்டாத […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் சிரஞ்சீவிக்கு கிடைத்த அந்தஸ்து…. என்னென்னு தெரியுமா?… குவியும் வாழ்த்துக்கள்….!!!!

கோவாவில் நடந்த 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு நடந்த விழாவில் ஆந்திர திரை உலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு, 2022ம் வருடத்திற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்தாக்கூர் வழங்கி கவுரவித்தார். மேலும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்றார். விருதை பெற்றுக்கொண்ட நடிகர் சிரஞ்சீவி மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு நன்றி கூறினார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”… அப்தாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நபர் அதிரடி கைது…..!!!!

டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவரது காதலரான அப்தாப், 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்தாப் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் விசாரணையில் இருக்கிறார். இந்நிலையில் அப்தாபுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வந்ததாக, பஞ்சாப் மாநிலம் சூரத்தை சேர்ந்த பைசல் மோமின் என்பவரை குற்றப்பிரிவினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்துள்ளனர். அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

போலி அடையாள அட்டைகளுடன் இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 வெளிநாட்டவர்கள் நேற்று (நவ.28)அதிகாலை நேபாள எல்லை பகுதியில் இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்தனர். இந்நிலையில் அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து பல போலி இந்திய அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் எல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சிலிகுரியை ஒட்டி உள்ள கரிபாரி பிளாக்கில் இந்தியா-நேபாள எல்லையான பனிடாங்கியிலிருந்து ஆயுதம் ஏந்திய எல்லைப்படை வீரர்கள் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக விருதுநகர் மற்றும் தேனி […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் பயனாளிகளே…. உடனே இந்த வேலையை முடிங்க…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு இனியும் வேடிக்கைப் பார்க்க கூடாது..! 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்திருப்பதை கண்டித்த அன்புமணி.!!

புதுக்கோட்டை மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, நேற்று மாலை கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி 23 மீனவர்களையும், அவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் அனைவரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.  இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஏடிஎம் கார்டு தொலைந்து போச்சா?…. இனி நீங்களே ஈஸியா பிளாக் செய்து விடலாம்…. இதோ எளிய வழி….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவருமே பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அதிகமாக ஏடிஎம் கார்டு பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் ஸ்மார்ட் போன் மொபைல் ஆப் மூலமாகவே ஷாப்பிங் செய்து பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை முடித்து விடுகின்றனர். இருந்தாலும் ரொக்க பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு மிகவும் அவசியம். ஒரு சில நேரங்களில் ஏடிஎம் கார்டு உங்களிடம் இருந்து […]

Categories
Tech

வாட்ஸ் அப்பில் அசத்தலான அப்டேட்…. விரைவில் அறிமுகமாகும் Contact Card அம்சம்…. சிறப்பம்சங்கள் என்னென்ன….????

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதே சமயம் தினம்தோறும் புதிய அப்டேட்டுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சமீபத்தில் கம்யூனிட்டிஸ் என்ற புதிய வசதி கொண்டுவரப்பட்டது. அதன் மூலமாக வாட்ஸப் குழுக்களுடனான உரையாடல் தற்போது எளிதாகிவிட்டது. இதில் எண்டு எண்டு என்கிரிப்ஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால் பயனர்கள் மத்தியில் இந்த வசதி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு எதற்காக?…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – சேலம் ரயில் சேவை 3 நாட்கள் முழுவதுமாக ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சேலம் ரயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை மற்றும் சேலம் இடையிலான ரயில் சேவை நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 6.10 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதனைப் போலவே சேலத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்த உடன் கௌரவ விரிவுரையாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர், தமிழக முழுவதும் உயர் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள்,நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் கட்டப்பட்டு திறக்காத நிலையில் உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் விரைவுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் காலி பணியிடங்கள் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் […]

Categories
மாநில செய்திகள்

திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மீண்டும் ஆன்லைன் டிக்கெட்…. வெளியான அறிவிப்பு….!!!!

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றன. இங்கு அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலமாக விநியோகம் செய்யப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அனைத்து சேவைகளும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கல் உப்பின் விலை உயரும்?… எதிர்பார்ப்பில் வியாபாரிகள்..!!!!

கல் உப்பின் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் அருகே இருக்கும் கோப்பேரி மடம், திருப்பாலைக்குடி, உப்பூர், சம்பை, பத்தனேந்தல், திருப்பாலைக்குடி ஆகிய ஊர்களில் ஏராளமான உப்பளபாத்திகள் இருக்கின்றது. இங்கே வருடம் தோறும் பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் வரை உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் ஆரம்பித்திருப்பதால் உப்பளங்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பாத்திகளில் சேகரித்து வைத்த கல் உப்புகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்… நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகம்… அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!!!

குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள கடுமலைகுண்டுவை அடுத்திருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது. இப்பகுதியில் குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகின்றது. இதனால் மக்கள் காய்ச்சல், தொண்டை வலி, சளி என உடல்நிலை பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பணம் கொடுத்து கேன்களில் தண்ணீர் வாங்கி குடித்து வருகின்றார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15000 புதிய வீடுகள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றியமைத்தார். அந்தத் திட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ளார். அதே சமயம் குடும்பத் தலைவியின் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க திட்டத்தின் கீழ் நகர்ப்புற வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் விளையாடுவதற்கான தனியாக மைதானம் கட்டித் தரப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பரசன், தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 23 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 28.11.2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப்  படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விடிய விடிய பெய்த கனமழை… கொட்டக்குடி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து..!!!

விடிய விடிய பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் ஆறு, குளம், அணைகள் உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. சென்ற சில நாட்களாக மழை பெய்யவில்லை. வெயிலில் தாக்கவும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் போடியில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழையால் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

கனமழை எதிரொலி : 2 மாவட்டங்களுக்கு இன்று (29.11.22) விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று பாரத் “பந்த்”…. எவையெல்லாம் இயக்கும்? இயங்காது?… இதோ முழு விவரம்…..!!!

நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் நடத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மாதம் 60 ஆயிரத்திற்கும் மேல் வருமானம் பெறும் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து இந்த பந்த் நடத்தப்படுகிறது. இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மிகப் பெரிய பாதிப்பு இருக்காது எனவும் வட மாநிலங்களில் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் ஆதரவு அளிக்கும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிசயம்… தலைவன் கெத்தப்பாத்தியா… சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்..!!!

பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிசயம் பற்றி தான் சோசியல் மீடியாவில் பேசி வருகின்றார்கள். பிக்பாஸ் வீட்டிலிருந்து வாரம் ஒரு போட்டியாளரை வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் சென்ற வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. பிக்பாஸில் வெளியேற்ற இரண்டு போற்றியாளர்களை சரியான காரணத்துடன் நாமினேட் செய்யுமாறு சக போட்டியாளர்களுக்கு கூறப்பட்டது. தனலட்சுமி, ஜனனி, கதிரவன், மணிகண்டன், நந்தினி, ரச்சிதா, மகாலட்சுமி உள்ளிடோரை நாமினேட் செய்தார்கள். சென்ற சில வாரங்களாகவே […]

Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுரை வீரன் கோவிலை அகற்ற எதிர்ப்பு… ஆட்டையாம்பட்டி பிரிவு – மசக்காளிப்பட்டி இடையே திரண்ட மக்கள்… போக்குவரத்து பாதிப்பு..!!!!

மதுரை வீரன் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2008 ஆம் வருடம் நில அளவீடு செய்த போது சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மரங்கள் நடவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு இருக்கின்றது. இதனிடையே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து மசக்காளிபட்டி பேருந்து […]

Categories
உலக செய்திகள்

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா…. 30 அறுவை சிகிச்சை…. எங்கு தெரியுமா….? நம்ப முடியவில்லையா…???

ஜெர்மனியைச் சேர்ந்தவர்  செபாஸ்டியன். இவரைஆசிய புலி கொசு கடித்துள்ளது. இதனால் அவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் விரைவில் குணமடைவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், முற்றிலும் சோகமாக முடிந்தது. இந்த வகை கொசு கடித்ததால் ரத்தத்தில் விஷம் கலந்துள்ளது. அவர் நான்கு வாரங்கள் முழுமையான கோமா நிலைக்குச் சென்றார். மேலும், கொசுக்கடியை அகற்ற 30 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. பல வருடங்கள் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இது அவரை மரணத்திற்கு தள்ளியது. ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரிய வகை நோயால் பாதிப்பு… நாளுக்கு நாள் உடல்நிலை மோசம்… சிகிச்சை முறையை மாற்றிய சம்மு..!!!

சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நோய் குணமடைய நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும் எனவும் நோய் பாதிப்புடன் போராடி வருவதாகவும் உருக்கமாக சமந்தா பதிவிட்டிருந்தார். மேலும் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும்போதும் குளுக்கோஸ் செலுத்தப்படும் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் […]

Categories
மாநில செய்திகள்

19.24 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு…. நீங்களும் உடனே இணைச்சிருங்க…!!!

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் நேற்று முதல் தொடங்கியது. இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று ணைப்பு செய்துகொள்ளலாம். இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தொடங்கிய முதல் நாளே சிறப்பு முகாம்கள் மூலம் 2.28 லட்சம் இணைப்புகளும், ஆன்லைன் மூலம் 2.02 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீண்ட நாட்களுக்கு ரகசியத்தை மறைக்க முடியல”… டிசம்பர் 2-ம் தேதி வரை காத்திருங்க.. கியாரா அத்வானி பதிவு வைரல்..!!!!

கியாரா அத்வானி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது. நடிகை கியாரா அத்வானி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பிறகு அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ஹிந்தி ரீமிக்கில் மேலும் பிரபலமானார். தற்போது சங்கர் ராம் சரண் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டு அதன் தலைப்பில் நீண்ட நாட்களுக்கு ரகசியங்களை வைத்திருக்க முடியவில்லை. டிசம்பர் இரண்டாம் தேதி வரை காத்திருங்கள் என பதிவிட்டிருக்கின்றார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஒரே நேரத்தில் ஆர்சி 15, இந்தியன் 2″….. படப்பிடிப்பை சாமர்த்தியமாக கையாளும் சங்கர்… எப்படி தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படும் சங்கர் தற்போது உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் ராம்சரனுடன் இணைந்து ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சங்கர் எப்படி ஒரே சமயத்தில் 2 படங்களையும் சாமர்த்தியமாக இயக்குகிறார் என்ற ஆச்சரியம் பலருக்கும் இருக்கலாம். இந்த கேள்விக்கு ஆர்சி 15 திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் […]

Categories
டெக்னாலஜி

Whatsapp: உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம்… வெறித்தனமான அப்டேட்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது.  இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து உங்களுக்கே மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்…. ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்ற பட பூஜை….. வைரல் போட்டோ…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். இவர் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி‌ அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வருத்தத்தில் பிக்பாஸ் பிரபலம் சக்தி… இதுதான் காரணமாம்.. பேட்டியில் உருக்கம்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் சக்தி உருக்கமாக பேசியுள்ளார். விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கின்றது. தற்போது ஆறாவது சீசனில் ஏழாவது வாரம் முடிந்து விட்டது. இந்த நிகழ்ச்சி பலருக்கு நல்ல எதிர்காலத்தை தந்தாலும் சிலருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசனில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு போட்டியாளராக நுழைந்தார் சக்தி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, மன அழுத்தத்தில் இருந்து வெளியே வரத்தான் அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. பாத் டப்பில் இப்படி ஒரு போட்டோஷூட்டா…. இணையத்தை கலக்கும் நடிகையின் போட்டோ….. இது வேற லெவல் பா….!!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான பிரியா பவானி சங்கர் அதன் பின் சீரியலில் நடித்து திரைப்படத்திற்குள் அடி எடுத்து வைத்தார். மேயாத மான் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமான பிரியா பவானி சங்கர் முதல் படத்திலேயே தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வருஷத்துக்கு 2500 பேர்”….. உதவி செய்யாம பஜ்ஜி, வடை சாப்பிடுறாங்க….. தயாரிப்பாளர் சங்கம் மீது கருணாஸ் சாடல்….!!!!!

தமிழ் சினிமாவில் வெளியான மேதகு திரைப்படத்தை இயக்கிய கிட்டு இயக்கத்தில் தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஐசிடபிள்யூ நிறுவனம் சார்பில் கரிகாலன் மற்றும் கருணாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் துபாயில் இருந்த சமயத்தில் இயக்குனர் கிட்டு எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாவீரர் பிறந்த நாளில் இசை வெளியீட்டு விழாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் பண்றது பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க.. இல்லன்னா வெளியே கொண்டு வந்துடுங்க… ரசிகரின் கேள்வி.. மைனா சர்ச்சைக்குரிய பதில்..!!!

ரசிகரின் கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலை தந்துள்ளார் மைனா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பார்வையாளர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் ஒரு பகுதி நடந்தது. அப்போது மைனா மற்றும் ரச்சிதாவிடம் கேள்வி கேட்ட ஒருவர் உங்க paid holidays எப்படி இருக்குதுன்னு கேட்டார். மற்றொருவர் மைனா மணிகண்டன் உள்ளிட்டோர் நட்பு என்ற பெயரில் cringe செய்கின்றார்கள் என குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மீனா நான் பண்றது […]

Categories
பல்சுவை

wow.. 80 வருடங்களுக்கு பிறகு…. தோழியை சந்தித்த பாட்டி…. நெட்டிசன்களை ரசிக்க வைத்த Video…!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் 2 வயதான பெண்களின் நட்பு தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பேரன் ஒருவர், தனது பாட்டியை அவரது சிறுவயது தோழியுடன் சந்திக்க வைத்துள்ளார். ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு பிறகு தனது தோழியை சந்தித்த பாட்டியின் முகத்தில் தோன்றிய புன்னகை நெட்டிசன்களை ரசிக்க […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

50 கோடி எண்கள் ஹேக் செய்யப்பட்டதா…? வாட்ஸ்அப் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் whatsapp-யில் இருந்து பெரும் அளவிலான டேட்டா கசிந்துள்ளதாக சைபர் நியூஸ் தெரிவித்தது. உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 84 நாடுகளில் உள்ள 48.70 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டதாக சைபர்நியூஸ் தெரிவித்திருந்த […]

Categories
மாநில செய்திகள்

அட நம்ம ஊர்ல இவ்வளவு இருக்கா…? நாட்டிலேயே தமிழ்நாடு தான் டாப்…. வெளியான ரிப்போர்ட்…!!

இந்தியாவில் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்டு மிக அதிகமான தொழில்துறை மயமான மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15 சதவீதம் தமிழகத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு வழியாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட்… உஷாரய்யா உஷாரு…! ரச்சிதாவின் செயல்… ஹவுஸ்மேட்ஸ் ஷாக்..!!!

பிக்பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல் ரச்சிதாவின் பின்னாடி சுத்துவதிலேயே முக்கிய வேலையாக செய்து வந்தார். இதனால் மக்கள் கோபம் அடைந்து அவருக்கு ஓட்டு போடாமல் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள். அவர் வெளியேறும் போது எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவருக்கும் hug கொடுத்தார். அப்போது கடைசியாக ரச்சிதா நின்று கொண்டிருந்தார். ராபர்ட் வந்ததும் அவர் விலகிச் சென்றார். இதனால் ரச்சிதாவை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புரட்சித்தலைவி அம்மாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம்….. மெரினா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும்…. ஓபிஎஸ் அறிக்கை..!!

அஇஅதிமுக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலட்சியம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த லட்சியத்தின் நியாயத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்கு பலத்தையும் சேர்த்ததாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான லட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய […]

Categories

Tech |